Saturday, 10 February 2024

திருக்குறள் ஐம்பெரும் விழா -2024, ஊடகச் செய்தி மற்றும் செய்தியாளர் சந்திப்பு

ஊடகச் செய்தி மற்றும் செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு நேரம் : பிற்பகல் 12:10 - 12:40

 

திருக்குறள் ஐம்பெரும் விழா -2024

 

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், வலைத்தமிழ்வள்ளுவர் குரல் குடும்பம், சர்வீஸ் டு சொசைட்டி, கற்க கசடற, அமைப்புகள் இணைந்து நடத்தும் திருக்குறள் ஐம்பெரும் விழா.

 

பிப்ரவரி 11 , ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலை 9:30  மணி முதல் மாலை 3 மணி வரை

 

இடம்: திருவள்ளுவர் அரங்கம், இந்தியன் ஆபிசர்ஸ் அசோசியேஷன் (IOA), இராயப்பேட்டை , அஜந்தா பஸ் நிறுத்தம்.

 

அமெரிக்கா, மியான்மர், டென்மார்க் உள்ளிட்ட பல நாட்டு திருக்குறள் ஆர்வலர்கள், ஆளுமைகள் கலந்து கொள்கிறார்கள்.

 

திருக்குறள் சார்ந்த ஐந்து நிகழ்வுகள்:

 

1.   திருக்குறள் வரலாற்றில் இதுவரை விடை தெரியாத கேள்வியாக , ஆய்வு, செய்ய முடியாத பன்னாடு சம்பந்தப்பட்ட, நூற்றாண்டு கால தலைப்பாக இருக்கும் "திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?               எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டும்? தேசிய நூலாகக்  கொண்டுவர என்ன செய்யவேண்டும்? யுனெசுகோ அங்கீகாரம் பெற என்ன செய்யவேண்டும் ? அரசுகள் என்ன செய்யவேண்டும்? அமைப்புகள்  என்ன செய்யவேண்டும்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு நாளை காலை 11 மணிக்கு இந்த நூல் விடைசொல்லும்.. ஐந்து ஆண்டு கால ஆய்வில் தொகுத்த விவரங்களை ஆய்வறிக்கை நூலாக வெளிவரும் "Thirukkural Translations in World Languages" நூல் வெளியீடு.

 

வெளியிடுபவர்: மாண்புமிகு நீதியரசர் அரங்க மகாதேவன்

பெறுபவர்கள்: முனைவர் ஔவை . அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை,

முனைவர். சி.சுப்பிரமணியம், மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

கலைமாமணி டாக்டர் .வி.ஜி.சந்தோசம் , வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கம்

 

2.   "நவில்தொறும் நூல்நயம்" பொன்விழா வாரம்

தலைமையுரை: பேராசிரியர் சுந்தரமூர்த்தி, துணைத்தலைவர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

 

சிறப்புரை: சுப மாணிக்கனார் "வள்ளுவம்" நூல் குறித்து இலக்கிய மாமணி பேராசிரியர்  அரங்க இராமலிங்கம் நயவுரை.

 

3.   தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு திருக்குறள் நூல் மூன்றாம் பதிப்பு வெளியீடு - உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை,சிகாகோ அமெரிக்கா , *

 

 நூல் அறிமுகம்: பேராசிரியர் சுந்தரமூர்த்தி, துணைத்தலைவர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

 

ஒருங்கிணைப்பாளர்கள்: அரசு பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் 80000 திருக்குறள் நூல்கள் வழங்கும் உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, சிகாகோ , அமெரிக்கா

 

4.   உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் - இரண்டாம் ஆண்டு விழா

தமிழ்நாடு, புதுவையின் திருக்குறள் முற்றோதல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்சியாளர்கள், புரவலர்கள், ஆர்வலர்கள், அமைப்புகள் , ஆளுமைகள்.

 

"குறள் வழி" பிப்ரவரி மாத இதழ் இதழ் வெளியீடு

 

மருத்துவர். சுந்தரேசன் சம்மந்தம், இயக்குநர், தமிழிருக்கை குழுமம், அமெரிக்கா

 

மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 2000 நூல்கள், ஆண்டுக்கு 80000 நூல்கள், ஐந்து ஆண்டுகளுக்கு 4 லட்சம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு  நூல்கள் வழங்கும் திட்டம்: விளக்கவுரை

 

மருத்துவர், விஜய் ஜானகிராமன், உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம்,

தமிழிருக்கை குழுமம், அமெரிக்கா

 

5.   உலக அளவில் புதிதாக வெளிவந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் அறிமுகம்

  புதிய மொழிபெயர்ப்புகள் அறிமுகம் , நூல்களைக் கையளித்தல்:


·         திரு.கஜேந்திரன் நாகலிங்கம், டென்மார்க், டேனிஷ் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்

·         திரு.கணஇளங்கோவன்பொதுச் செயலாளர், தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம். மியன்மார். 

 

இரு திருக்குறள் சார்ந்த கண்காட்சிகள் அரங்கில் இடம்பெறும்

திருக்குறள் அதிகாரங்கள் - கண்காட்சி

உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் - நூல்கள் கண்காட்சி

 

தொடர்புக்கு:

.சுரேஷ், 9884411637

மின்னஞ்சல் : thirukkural@valaitamil.com


Virus-free.www.avast.com

Tuesday, 7 November 2023

PR : Japan Tamil Professionals --> Meetup with Tamil Govt School Students Nov 7 Event

Dear Sir/Madam, 

We are from Japan Tamil Professionals & Expats Network, inaugurated the Tamil Govt School students who came as part of Education Tourism organized by the Tamil School Education department.

The event is held on 7th November in Tokyo. Honourable TN School Education Minister Thiru. Anbil Mahesh Poyyamozhi has joined the event. 

Attached are the Press Release and photos. Requesting to publish in your media. 

***************************************************************************************************************
பத்திரிகை செய்தி
07/11/2023
தோக்கியோ, சப்பான்

தமிழக பள்ளிக்கல்விதுறையின் முன்னெடுப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து பல்வேறு போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் கல்விச் சுற்றுலாவுக்காக சப்பான் வந்தடைந்தனர். நிகழ்விற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வருகை தந்தார். நிகழ்விற்கு முன்னதாக சப்பானில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அமைச்சர் அவர்கள் சென்று பார்வையிட்டார். 

நவம்பர் 7 அன்று அரசுப்பள்ளி மாணவர்கள் சப்பானில் வாழும் தமிழர்களை சந்தித்து உரையாடல் நிகழ்த்தும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு.பிரசன்னா பார்த்தசாரதி அவர்கள் அரசு பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் வரவேற்றார்.

"திரைகடல் ஓடியும்" என்ற தலைப்பில் சப்பானில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வரும் முன்னாள் அரசு பள்ளி மாணவர்களின் அறிமுக காணொளி ஒளிபரப்பப்பட்டது. அரசு பள்ளியில் படித்து முதல் தலைமுறை பட்டதாரியாக உருவாகி  உலகளவில் திறம்பட பணிபுரியும் தமிழர்கள் தற்போது கல்விச்சுற்றுலாவிற்காக வந்திருக்கும் மாணவர்களிடம் தங்களது பணி அனுபவம், மற்றும் சப்பானிற்கு படிக்க அல்லது வேலைக்காக வருவோர்க்கு தேவையான அடிப்படை விசயங்களை பகிர்ந்து கொண்டனர். சப்பானில் உள்ள கல்வி, வேலை வாய்ப்புகளை பற்றி திரு.பிரசன்னா பார்த்தசாரதி, திரு. கணேஷ் பாண்டியன் நமசிவாயம், திரு. குமரவேல் திருமணஞ்சேரி, ஆசிரியை திருமதி.கண்மணி கோவிந்தசாமி, திரு.ராஜேஷ்குமார், திரு.கலைச்செல்வம், திரு.பொன்னி வளவன் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர். பின்னர், சப்பான் தமிழர்கள் மூலம் சிறப்பான பறையாட்டம், கும்மியாட்டம் உட்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 

தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் தோக்கியோவில் உள்ள மிராய்க்கன் தேசிய அறிவியல் அருங்காட்சியத்திற்கும், சப்பானில் உள்ள பள்ளிகளுக்கும் சென்று வந்தனர். அதனைத் தொடர்ந்து நானோ தொழில்நுட்பத்தில் உலகளவில் சிறந்து விளங்கும் தோயோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மூன்று மணி நேரம் செலவிட்டு அறிவியலின் நேரடி பயன்பாட்டை கற்றறிந்தனர். இதற்கான ஏற்பாட்டை JTPEN அமைப்பினர் செய்து கொடுத்தனர். 

 

மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் அவர்கள் இத்திட்டத்தின் சாராம்சம், மற்றும் மாணவர்கள் இதன் மூலம் பெரும் பயன்கள் குறித்தும் தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறையின் முன்னெடுப்புகளை பற்றியும் விவரித்தார். Japan Tamil Professionals & Expats Network (JTPEN) அமைப்பு, ஜப்பானில் கல்லூரி மற்றும் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகளை குறித்து விவரித்தது. மேலும் தமிழக அரசின் "நான் முதல்வன்" திட்டத்துடன் இணைந்து பணிபுரிய மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. நிகழ்வை திரு.கலைச்செல்வன் பழனி அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் சுமார் 250க்கும் மேற்பட்ட சப்பான் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர்.  இறுதியாக நன்றியுரை மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.



Thank you,
Sathiya seelan 
JTPEN - Japan Tamil Professionals & Expats Network 
Contact: +91 8754552970 (WhatsApp)

Sunday, 5 November 2023

கிராமசபையை ஆளும் மாநில அரசின் பிரச்சார சபையாக மாற்றுவதை நிறுத்துக!

கிராமசபையை ஆளும் மாநில அரசின் பிரச்சார சபையாக மாற்றுவதை நிறுத்துக!

தன்னாட்சியின் கண்டன அறிக்கை!

கடந்த அக்டோபர் 2, 2023 கிராமசபையில் ஆளும் மாநில அரசின் சில திட்டங்கள் பற்றிய முதல்வர் உரையைக் காணொளிகளாகத் திரையில் வெளியிட வேண்டும் என்ற ஒரு சுற்றறிக்கை வந்தது. அதன்படி அக்டோபர் 2, 2023 அன்று தமிழ்நாட்டின் அனைத்து கிராமசபைகளிலும் இந்தக் காணொளிகள் கிராமசபை தொடங்குவதற்கு முன் திரையிடப்பட்டன. நவம்பர் 1, 2023 உள்ளாட்சி தின கிராமசபையிலும் இனி வருடந்தோறும் உள்ளாட்சி தினத்தன்று கிராமசபை நடைபெறும் என்று அறிவித்ததற்காகத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு விவாதப்பொருளும் சேர்க்கப்பட்டிருந்தது. அதன்படி நவம்பர் 1, 2023 அன்று தமிழ்நாட்டின் அனைத்து கிராமசபைகளிலும் முதல் தீர்மானமாக நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியுள்ளது. இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் தமிழ்நாட்டின் கிராமசபைகளை ஆளும் மாநில அரசின் பிரச்சார சபைகளாக மாற்றும் முயற்சிகளே என்பது கண்கூடாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் வருடந்தோறும் 6 முறை கிராமசபைகள் நடந்து வருகின்றன. முன்பு 4 முறை நடந்து வந்த கிராமசபைகள் தற்போது 6 முறையாக ஆளும் அரசால் அரசாணை மூலம் உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கிராமசபைகளில் தங்கள் ஊராட்சிக்கான வளர்ச்சியைத் திட்டமிடுதல், அந்த ஊராட்சி எல்லைக்குட்பட்ட பிரச்சனைகள்/ தீர்வுகள் பற்றி விவாதித்தல் மற்றும் ஒன்றிய/ மாநில அரசு சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற தங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கான அனைத்து பொருட்களும் விவாதிக்கப்பட்டு அதன் முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையே சட்டம் கூறுகிறது. ஆனால் அப்படிப்பட்ட அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொதுமக்கள் பங்கேற்கும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பான கிராமசபையை, மாநில அரசின் பிரச்சார சபையாக மாற்ற முயற்சிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. ஆபத்தானது.

சட்டப்படி கிராமசபையின் விவாதப் பொருட்களை (அஜெண்டாவை) முடிவெடுக்க வேண்டியது அந்தந்த ஊராட்சி மன்றமே. ஆனால் மாநில அரசே, அதாவது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையே கிராமசபையின் விவாதப் பொருட்களை தற்போது வரை சென்னை பனகல் மாளிகை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வருகிறது. இதனால் பல கிராமசபைகளில் இந்த விவாதப் பொருட்களை மட்டும் தான் விவாதிக்க வேண்டும் என்று அலுவலர்கள் கூறுவது தொடர்கதையாக உள்ளது. சட்டசபை தொடங்கும் முன் ஒன்றிய அரசின் திட்டங்களை விளக்கும் பிரதமர் உரையைக் காணொளிகளாகக் காண்பித்து விட்டு பின்பு சட்டசபையைத் தொடங்க வேண்டும் அல்லது ஒன்றிய அரசின் திட்டங்களுக்காகப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துத் தொடங்க வேண்டும் போன்றவற்றை சட்டசபையின் விவாதப் பொருட்களாகச் சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசு டெல்லியில் இருந்து கூறினால் அதை எப்படி மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல்களாக, அதிகாரப்பரவலுக்கு எதிரான செயல்களாக நாம் தீவிரமாக எதிர்ப்போமோ அதேபோல் ஊராட்சிகளின் அதிகாரத்தில் தலையிடும் செயல்களாகவே இதை எடுத்துக்கொண்டு நாம் எதிர்க்க வேண்டியுள்ளது.

ஒன்றிய அரசு ஆளுநர் வாயிலாக மாநில அரசு விவாகரத்தில் தொடர்ந்து தலையிடுவதை எதிர்க்கின்ற, அதிகாரப்பரவல் பற்றிய விரிவான வரலாறு கொண்ட நம் தமிழ்நாடு அரசே இதுபோன்ற ஊராட்சிகளின் அதிகாரத்தில் தலையிடும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருவது கண்டனத்திற்குரியது. தன்னாட்சி இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன் பின்வரும் கோரிக்கைகளை அரசிற்கு வைக்கிறது.

1. கிராமசபையைத் தமிழ்நாடு அரசின் பிரச்சார சபையாக மாற்றும் முயற்சியை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

2. மாநில அரசின் தலையீடின்றி, கிராமசபையின் விவாதப் பொருட்கள் சட்டப்படி அந்தந்த ஊராட்சி மன்றங்களால் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இப்படிக்கு
தன்னாட்சி
9445700758

Tuesday, 31 October 2023

பத்திரிகையாளர்கள் செய்தி - தகவல் ஆணையத்தை கண்டித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்ணாடி ஏந்தி போராட்டம்

பத்திரிகை செய்தி

 

தகவல் ஆணையத்தை கண்டித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்ணாடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

 

31-10-2023, செவ்வாய், காலை 11.00 மணி, வள்ளுவர் கோட்டம், சென்னை.

 

 

            தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ஐ, சட்டப்படி முழுமையாக செயல்படுத்திடாத மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படாத தமிழ்நாடு தகவல் ஆணையத்தை கண்டித்து, சட்ட பஞ்சாயத்து இயக்கம் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து, 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  "ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்" துவங்கும் நாளான அக்டோபர் 31 இன்று 'கண்ணாடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்'  நடைபெற்றது.


இணைப்பு:

தமிழ்நாடு தகவல் ஆணையம் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ஐ முழுமையாக செயல்படுத்திட மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட, சட்ட பஞ்சாயத்து இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்.



நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Monday, 30 October 2023

பத்திரிகையாளர்கள் அழைப்பு - தகவல் ஆணையத்தை கண்டித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்ணாடி ஏந்தி போராட்டம்


பத்திரிகையாளர்கள் அழைப்பு
தகவல் ஆணையத்தை கண்டித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்ணாடி ஏந்தி போராட்டம்

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ஐ, சட்டப்படி முழுமையாக செயல்படுத்திடாத மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படாத தமிழ்நாடு தகவல் ஆணையத்தை கண்டித்து, சட்ட பஞ்சாயத்து இயக்கம் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  "ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்" துவங்கும் நாளான அக்டோபர் 31 அன்று (நாளை) 'கண்ணாடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்' நடைபெறுகிறது.

இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை
நாள்: 31-10-2023
நேரம்: காலை 11 மணி

இந்நிகழ்ச்சிக்கு பத்திரிகை அன்பர்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.



அ. ஜெயந்தி
செய்தி தொடர்பாளர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
தொடர்புக்கு:  9952182452 / 87545 80269



நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Thursday, 12 October 2023

பத்திரிகை செய்தி - பல போராட்டங்களின் மூலம் கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005இன் தற்போதைய நிலை?

                                     சட்ட பஞ்சாயத்து இயக்கம்

                                         பத்திரிகை செய்தி
                                         தேதி: 13/10/2023
                                         தொடர்புக்கு  :  8668196093  /  9952182452

இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கும், வெளிப்படைத் தன்மையோடு அரசு செயல்படவும் பல போராட்டங்களின் மூலம் கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005இன் தற்போதைய நிலை?


இந்திய மக்களுக்கு பகலில் கிடைத்த முதல் சுதந்திரம் தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005. பல்வேறு பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்களின் போராட்டங்களால் 12-10-2005 அன்று இந்தியா முழுவதும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இச்சட்டம் அமலுக்கு வந்து (12.10.2005) நேற்றுடன் 18 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது; ஆனால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டதற்கான
உயரிய நோக்கங்கள் இன்றும் நிறைவு பெறாமல் பொதுமக்கள் அல்லல்படுகின்றனர்.

எம்எல்ஏ, எம்பி- க்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் கேள்வி கேட்கும் உரிமையை ரூபாய் 10/- கட்டணத்தில், சாமானிய மக்கள் அனைவருக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொடுக்கிறது. ஆனால், சிறப்பு வாய்ந்த இச்சட்டத்தை அரசு அலுவலர்களும், மாநில தகவல் ஆணையர்களும் முடமாக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கும், வெளிப்படைத் தன்மையான அரசு நிர்வாகத்தை ஏற்படுத்தவும் கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை, செயல்படுத்த வேண்டிய தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், தனது கடமையை செய்யாமல் ஊழல் அலுவலர்களை காப்பாற்றும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆணையத்திற்கு வரும் மேல்முறையீட்டு மனுவை உரிய முறையில் விசாரணை செய்வது இல்லை; தகவல் தரமறுக்கும் 99% பொதுத்தகவல் அலுவலருக்கு அபராதம் விதிப்பதே இல்லை; பொதுத்தகவல் அலுவலர்கள், தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் என எந்த அரசு அலுவலரும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தையும் மதிப்பதில்லை; தகவல்கோரும் மற்றும் மேல்முறையீட்டு விசாரணைக்கு வரும் மனுதாரர்களாகிய பொதுமக்களையும் மரியாதையுடன் நடத்துவதில்லை.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் இத்தகைய போக்கை கண்டித்து, சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து பல ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் செய்தும், மாநில ஆணையர்கள் சட்டப்படி செயல்பட முன் வரவில்லை. இது சம்பந்தமாக முதல் அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் புகார் மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கைகள் இதுவரை எடுக்கவில்லை.  

இந்நிலையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்புக்காக இயங்கிவரும் சட்ட பஞ்சாயத்து இயக்கம், தமிழ்நாடு தகவல் ஆணையம் தகவல் பெறும் உரிமை சட்டத்தை முறையாக முழுமையாக செயல்படுத்திட மற்றும் சட்டப்படி செயல்பட, பதினாறு கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை மீண்டும் இன்று தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை கூடுதல் செயலாளர் - பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, மாநிலத் தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் என அனைவரிடமும் வழங்கியுள்ளோம்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்து (12.10.2005) பதினெட்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. எனவே, மக்கள் நலன் சார்ந்து முன்வைக்கும்  சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பதினாறு கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறோம்; கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுக்கும்பட்சத்தில், சட்ட பஞ்சாயத்து இயக்கம் மாபெரும் களப்போராட்டத்தையும் மேற்கொள்ளும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.  

இணைப்பு:
தமிழ்நாடு தகவல் ஆணையம் தகவல் பெறும் உரிமை சட்டத்தை முறையாக முழுமையாக செயல்படுத்திட மற்றும் சட்டப்படி செயல்பட, சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனு


சம்சுகனி
தலைவர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
தொடர்பு:  8668196093  /  9952182452


நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Wednesday, 4 October 2023

அக்டோபர் 2 கிராமசபையில் கேள்வி கேட்ட விவசாயி தாக்கப்பட்டது குறித்த தன்னாட்சியின் கண்டன அறிக்கை!

அக்டோபர் 2 கிராமசபையில் கேள்வி கேட்ட விவசாயி தாக்கப்பட்டது குறித்த தன்னாட்சியின் கண்டன அறிக்கை!

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஒன்றியம், பிள்ளையார்குளம் கிராம ஊராட்சியில், அக்டோபர் 2, காந்தி பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், கேள்வி கேட்க முயன்ற திரு. அம்மையப்பன் என்ற விவசாயியை, அந்த ஊராட்சியின் செயலர் திரு. தங்கபாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், திருவில்லிபுத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் மற்றும் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையிலேயே கடுமையாகத் தாக்கிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதத் தன்மையற்ற இந்தச் செயலுக்கு தன்னாட்சி கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஊராட்சி செயலர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயியின் புகாரின் அடிப்படையில், ஊராட்சி செயலாளர் மீது குற்றவியல் வழக்கு (FIR No: 176/2023, PS: Vanniyampatti Vilakku), இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 294 (b) (பொது இடத்தில் ஆபாசச் சொற்களைப் பயன்படுத்தல், 323 (வேண்டுமென்றே காயப்படுத்தலுக்கான தண்டனை), 506 (1) (குற்றவியல் மிரட்டல்) இன் கீழ் பதியப்பட்டுள்ளது. அரசின் இந்தச் செயல்களை வரவேற்கலாம். எனினும், நிர்வாக ரீதியில் பெரும்பாலும், இவ்வாறான செயல்களில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக பணியிடை நீக்கம் அல்லது பணியிட மாற்றம் மட்டுமே தரப்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக தன்னாட்சி உள்ளிட்ட சமூக இயக்கங்களின் தொடர் முயற்சியால், கிராமசபையில் மக்கள் அதிக அளவில் பங்கேற்பதும் பொறுப்பிலுள்ளவர்களின் செயல்பாடுகளை கேள்விக்குட்படுத்துவதும் நிகழத் தொடங்கியுள்ளன. இதை அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயலாகக் கருதாமல், தங்களின் அதிகாரத்திற்கான அச்சுறுத்தலாகப் பார்க்கும் மனநிலை பல அலுவலர்களிடமும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமும் இருக்கிறது. இதன் ஒரு வெளிப்பாடே, பிள்ளையார்குளத்தில் அரங்கேறியுள்ள தாக்குதல் சம்பவம். 

கிராமசபை, உள்ளூராட்சியின் ஒரு முக்கிய அங்கம். மாநில அரசின் சட்டமன்றத்துடன் ஒப்பிடத்தக்க ஒரு சபை. கிராம ஊராட்சி நிர்வாகத்தை கண்காணிக்கக் கூடிய, கேள்விக்குட்படுத்தக் கூடிய அதிகாரம் ஊராட்சியின் வாக்காளர்களான கிராமசபையின் உறுப்பினர்களுக்கு உண்டு. ஆனால், யாருக்குப் பதில் சொல்ல வேண்டுமோ, யாருக்காகப் பணி செய்ய வேண்டுமோ அவர்களையே கிள்ளுக் கீரையாக நினைக்கும் போக்கே பெரும்பாலும் துறை அலுவலர்களிடம் உள்ளது.

சமீபத்தில் மாநில அளவில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களின் போராட்டத்திற்குப் பிறகு வெளியான தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலர்கள் குறித்த பணி விதிகள் - 2023 (அரசாணை 113, ஊ.வ.ஊ.துறை, நாள் 13.09.2023), ஊராட்சி செலயலரைத் தண்டிக்கும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கியுள்ளது. ஊராட்சி மன்றத்தையோ கிராமசபையையோ அதிகாரப்படுத்தாமல், இப்படித் துறை அலுவலர்களை அதிகாரப்படுத்தும் தமிழ்நாடு அரசின் செயல்களால்தான் அவர்களுக்குத் தாங்கள் பொதுமக்களுக்கு கட்டுப்பட்டவர்களல்ல என்ற எண்ணம் ஏற்படுகிறது..

மேலும், ஊராட்சியின் கடைநிலை அலுவலரான ஊராட்சி செயலாளர், ஒரு கிராமசபை உறுப்பினரை, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துறை அலுவலர்கள் இருக்கும்போதே தாக்கும் அளவிற்கு அவருக்கு அதிகாரத் திமிரும் தைரியமும் காலனிய ஆதிக்க மனநிலையை இன்னமும் கைவிடாத பொது நிர்வாகத்திலிருந்தே கிடைக்கின்றன. இந்தியப் பொது நிர்வாகத்தை (Public Administration) முழுமையான சீர்திருத்தத்திற்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.

இந்தப் பின்னணியில் தன்னாட்சி, தமிழ்நாடு அரசுக்கு கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.

1. பாதிக்கப்பட்ட விவசாயி திரு.அம்மையப்பன் அவர்களுக்கு உரிய சிகிச்சையும் பாதுகாப்பும் வழங்குவதோடு, அவருக்கு இழப்பீடாகக் கணிசமான ஒரு தொகையை, தொடர்புடைய ஊராட்சி செயலரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து வழங்க வேண்டும்.

2. தன்னுடைய புகார் மனுவில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் திரு. அம்மையப்பன் தெரிவித்துள்ளதாலும் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்துள்ள அவரை ஊராட்சி செயலர் மார்பில் கடுமையாக எட்டி உதைத்தாலும், இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506 (2) (இறப்பை அல்லது கடுங்காயத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்) சேர்க்கப்பட வேண்டும்.

3. பாதிக்கப்பட்ட விவசாயி, ஊராட்சி செயலர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களாலும் தாக்கப்பட்டதாக வெளியான காணொளிகள் மூலம் அறிய முடிகிறது. எனவே உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதியப்பட வேண்டும்.

4. அனைவர் முன்னிலையிலும் ஒரு மனிதரை இழிவுபடுத்தும் விதமாக காலால் எட்டி உதைத்தது அப்பட்டமான மனித உரிமை மீறல். எனவே, உரிய விசாரணக்குப் பிறகு, அந்த செயலாளரை நிரந்தரப் பணி நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். இது பொது மக்களின் கண்ணியத்துக்கு இழுக்கு விளைவிக்கின்ற மற்ற அலுவலர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

5. மேலும், இச்சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஊராட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

6. கிராம சபை எவ்வாறு நடத்தப்பட வேண்டும், அதில் தலைவர், ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம சபை உறுப்பினர்கள் போன்றோரின் பங்கு என்ன என்பது போன்ற சட்ட ரீதியான விழிப்புணர்வு விளம்பரங்கள் அரசால் வெளியிடப்பட வேண்டும்.

7. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து கிராமசபைகளும் காணொளி பதிவு செய்யப்பட்டு, அரசின் இணையத் தளத்தில் மக்கள் பார்வைக்கு பதிவேற்றப்பட வேண்டும்.

8. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவுகள் 104 மற்றும் 106 இல் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் (Tamil Nadu Panchayats (Amendment) Act 2022-No.27 of 2022) மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் குறித்த பணி விதிகள் (Tamil Nadu Village Panchayat Secretaries (Conditions of Service) Rules, 2023 (G.O (Ms.) No. 113, dated 13.09.2023) ஆகியவற்றில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, ஊராட்சி செயலர்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் தண்டிக்கும் அதிகாரத்தை ஊராட்சி மன்றத்திற்கோ அல்லது கிராமசபைக்கோ வழங்க வேண்டும்.

#கிராமசபை
#GramSabha