Saturday 16 December 2017

PRESS MEET- SATTA PANCHAYAT- பத்திரிகையாளர் சந்திப்பு - 16/12/2017 4.30 PM - ( Details)

  பத்திரிகை செய்தி                  16/12/2017

        கூட்டுறவு சங்க நிலவிற்பனையில்
          
ரூ.15 கோடி ஊழல்  
பின்புலத்தில் துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் & சேகர் ரெட்டி..??

சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.. குறைந்த விலைக்கு            விற்கப்பட்ட அரசு நிலத்தை மீட்டு உரிய விலைக்கு விற்க வேண்டும்..
             சட்ட பஞ்சாயத்து இயக்கம் வேண்டுகோள்....

         வேலூர் மாவட்டத்தில் உள்ள "வட ஆற்காடு மாவட்ட முன்னாள் படை வீரர்கள் தச்சு மற்றும் கருமார் தொழிலாளர் கூட்டுறவு சங்கம்" தாரா படவேடு கிராமம் சர்வே எண்.664/2B மற்றும் 665/5-ல் உள்ள87120 சதுர அடி நிலத்தினை 21.10.2014 மக்கள் குரல் நாளிதழில்  விளம்பரப்படுத்தி 30/10/2014 அன்று ஏலம் விடப்பட்டது27.11.2014-ல் கே.வாசு என்பவருக்கு ரூ.9,27,82,800-க்கு விளம்பரப்படுத்தப்பட்ட 40 நாட்களில் கதர் வாரிய கூட்டுறவு சங்க விதிகளையும், வாரிய மற்றும் அரசின் அனுமதியும் பெறாது காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் R.No:1064/2014 பதிவு செய்து கொடுக்கப்பட்டது(27.11.2014 அன்று). விற்பனை செய்யப்பட்டது என்பது அரசு மற்றும் கதர் வாரிய விதிமுறைகளை  மீறி ஒரு தனி நபருக்கு  வழி காட்டுதல்  விலைக்கும்(Guideline Value) குறைவாக விற்பனைசெய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட இடத்தை வாங்கிய k.வாசு என்பவர் சேகர் ரெட்டியின் பினாமி என்று சொல்லப்படுகிறது. சேகர் ரெட்டிக்கும் துணை முதலமைச்சர் திரு.oபன்னீர்செல்வத்திற்கும் உள்ள "நல்லுறவுகுறித்து தமிழகம் அறியும்.    இந்த நிலவிற்பனை ஊழலின் பின்புலத்தில் சேகர் ரெட்டியும்.பி.எஸ்அவர்களும் உள்ளனர்.  இவர்கள் கூட்டு சேர்ந்து இந்த ஊழலை செய்துள்ளனர். இதற்கு  சம்மந்தப்பட்ட அரசுஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்.

 

  காத்திருப்பில் கிடக்கும் திட்டங்கள்:

  தமிழ்நாடு  மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு உற்பத்தியாளர் கூட்டுறவு சம்மேளனம் தனது ஏக்கர் நிலத்தினை உரிய தீர்மானங்களுடன்  அரசு கைவினைப்பொருட்கள் கைத்தறிதுணி நூல் மற்றும் கதர்துறைக்கு மைய அரசின் மத்திய தொழில் பாதுகாப்பு துறைக்கு விற்பனை செய்யஅனுமதி கோரிபல வருடங்களாக  அரசின் அனுமதி கிடைக்கபெறாது உள்ளது.

மேலும்
 மேற்படி மாநில பனைவெல்ல கூட்டுறவு சம்மேளனத்தின் நிலம் விற்பனை செய்யப்பட்டு கிடைக்கும்தொகையில் தங்களது பணிக்கொடை மற்றும் நிலுவை ஊதியங்களை  பெறலாம் என  சுமார் 100க்குமேற்பட்ட  பனை வெல்ல கூட்டுறவு சம்மேளனம் பணியாளர்கள் ஏங்கி சிரமப்பட்டு கொண்டு உள்ளனர்மேற்படி விஷயம் வருட  கணக்கில் நடவடிக்கையில் இருந்தும்  அதற்கும் விடை கிடைக்காத நிலையில் வேலூர்மாவட்ட முன்னாள் படைவீரர்கள் தச்சு மற்றும் கருமார் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்து அரசுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.

  வட ஆற்காடு மாவட்ட முன்னாள் படை வீரர்கள் தச்சு மற்றும் கருமார் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் பல வருடங்களாக எவ்வித உற்பத்தி மற்றும்  விற்பனை மேற்கொள்ளாது செயல்பட்டுவரும் நிலையில் இந்தசங்கத்திற்கு தேர்தல் நடத்தியது சட்டத்திற்கு புறம்பானது.அவசர கதியில் குறைந்த விலைக்கு k.வாசுக்கு 87120 சதுர அடி நிலம் விற்பனை செய்யப்பட்டதில் வாரிய  தலைமை அலுவலக அலுவலரும் வேலூர் உதவிஇயக்குநர் அலுவலக அலுவலரும் ஊழல் செய்துள்ளனர்இத்தகைய செயல் அரசிற்கு இழப்பு ஏற்படுத்தும் என்று தெரிந்தே அரசின் ஒப்புதல் பெறாமல் குறைந்த மதிப்பிற்கு மேற்படி நிலத்தினை விற்பனை செய்ததுஊர்ஜிதம் ஆகிறது.

  தாராபடவேடு அதே சர்வே எண்.665/5-ல் பிளாட் எண்.C63 (880 .அடி) மட்டும் ரூ.23,60,000/-க்கு(23 லட்சம்) விற்பனை செய்யப்பட்டுள்ளது. 880 .அடி நிலம் 23 லட்சத்திற்கு விற்கப்படுகிறது என்றால்.அடி விலை ரூ.2681. இந்த அடிப்படையில் பார்த்தால் விற்பனை செய்யப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் நிலமானது(87120 .அடிஉண்மையில் ரூ.23,35,68720(23கோடிக்கு விற்கப்பட்டிருக்க வேண்டும்அதாவது23 கோடி மதிப்புள்ள நிலம் 9 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதுஅதிலும் ரூ.1கோடி திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது). அரசு அதிகாரிகள் துணையோடுதனிநபர் ஒருவர் ஆதாயம் அடைவதற்காக  அரசுக்கு 15 கோடிஇழப்பு ஏற்பட்டுள்ளது என்பது ஆவணங்களின் அடிப்படையில் தெரியவருகிறது.

  அரசுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் அளித்த புகார்( 20/07/2017)
& 1 கோடி ரூபாய் வாசுவுக்கு திரும்ப வழங்கப்பட்டது 
   அரசு அதிகாரி ஓய்வு பெறும் தேதியில் பணியிடை நீக்கம்

இது
 தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் 20/07/2017 அரசு கைவினைப் பொருட்கள்  கைதறி துணி நூல் மற்றும் கதர் துறையின் செயலாளருக்கு புகார் கொடுத்தது துணை முதலமைச்சர் o.பன்னீர்செல்வம்,சேகர்ரெட்டி இந்த ஊழலில் சம்மந்தபட்டிருப்பதால் நடவடிக்கை எடுக்க  துறை செயலாளர் முன்வரவில்லைபிறகு உயர்நீதிமன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  நீதிமன்றஉத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறையும் துறை செயளாலரும் நடவடிக்கை எடுக்க முன்வந்து குறைந்த விலைக்கு விற்க காரணமான சேகர் ரெட்டியின் நண்பரும் துணை இயக்குனர் கதர் ) A.ரவி அவர்களை31/10/2017 அன்றும்விற்ற பிறகு 1 கோடியை நிலம் வாங்கிய k . வாசுவுக்கே திரும்ப கொடுக்க காரணமான N. நாகராஜன் உதவி இயக்குனர் ( திட்டம் மற்றும் வளர்ச்சி  ) அவர்களை 30/11/2017 அன்றும்ஓய்வு பெறும் தேதியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 

  ஆனால் இந்த ஊழலுக்கு உடந்தையாக இருந்த, விற்பனை செய்ய அனுமதி வழங்கிய தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் திரு..பாலசந்திரன் I.A.S அவர்கள் மீதும் நிலம் வாங்கியK.வாசு அவர்களுக்கு ரூ1கோடி திரும்ப கொடுக்க அனுமதி வழங்கிய  தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தற்போதைய தலைமை செயல் அலுவர்  திரு . சுடலைகண்ணன் I.A.S  அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் . அதற்கு மூல காரணமான சேகர் ரெட்டி துணை முதலமைச்சர் O.பன்னீர்செல்வம் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட நிலத்தை மீட்டு அரசிடம் சேர்க்க வேண்டும் .பணியிடை நீக்கம் செய்யப்பட்ட A. ரவி துறை இயக்குனர் (கதர்அவர்களையும் N.நாகராஜன் உதவி இயக்குனர்  ( திட்டம் மற்றும் வளர்ச்சி ) இருவரையும் பணி நீக்கம் செய்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் அரசை வலியுறுத்துகிறேன்.                              

                                                                                            சிவ.இளங்கோ,

                                                                                                                                                                                 தலைவர்  , 87545 80270, 87545 80274                                                                          

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


​Satta Panchayat Iyakkam

 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Member : member.sattapanchayat.org |  Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Friday 24 November 2017

ஊடக வெளியீடு - நாளை நவ 25 மாலை 6 மணி முதல் 'காத்திருப்பு போராட்டம்' - கூவம் ஓரம் வாழும் பாடிக்குப்பம் மக்களுக்கு மாற்று வீடுகளுக்கான கோரிக்கை போராட்டங்கள்

நேற்று நடந்த அம்மனிடம் முறையிடும் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. ஆனால் இதற்கான தீர்வு இந்த நொடி வரை வரவில்லை.


பிரச்சனை 

கூவம் சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கூவம் ஓரம் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த 14,500 குடும்பங்களை காலி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுவரை சுமார் 6000 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான செம்மன்சேரி, பெரும்பாக்கம், கூடப்பாக்கம், நாவலூர் ஒரகடம் (படப்பை அருகே) மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் மறு குடியமர்த்தப்படுகிறார்கள்.

இதில் பாடிக்குப்பத்தில் சுமார் 300 குடும்பங்கள். காலி செய்யப்படும் எல்லா மக்களுக்கும் இருக்கும் துன்பங்கள் இவர்களுக்கும் இருந்தாலும், இவர்கள் கூவத்தை விட்டு காலி செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஒரு சின்ன தேடல் செய்தோம். குடிசை மாற்று வாரியத்திற்கு பாடிக்குப்பம் பகுதிக்கு அருகில் வேறு ஏதேனும் வீடுகள் உண்டா என்ற தேடல் அது. அந்த தேடலுக்கான காரணம் - பாடிக்குப்பம் பகுதியில் காலி செய்யப்படும் வீடுகளி பெரும்பாலானவர்கள் கோயம்பேடு சந்தையை நம்பி பிழைப்பவர்கள். காலை 3 மணிக்கு காய்கறி, பூ வாங்கி விற்பனை செய்பவர்கள். இவர்களை பெரும்பாக்கம் அனுப்பினால்?

எங்களின் தேடல் வெற்றிகரமாக அமைந்தது. 
பாடிக்குப்பத்தில் இருந்து 20 நிமிட தொலைவில் அத்திப்பட்டு என்ற இடத்தில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 1472 வீடுகள் 2015 கட்டி முடிக்கப்பட்டு (கட்டப்பட்டது ICF கக்கன்ஜி நகர் பகுதியில் இருக்கும் 396 குடும்பங்களுக்காக என்று சொல்லப்பட்டாலும், இதுவரை அவர்களும் குடியேறவில்லை - அவர்கள் குடியேறினாலும் மீதம் 1076 வீடுகள் காலியாக உள்ளது) இதுவரை திறக்கப்படாமல் உள்ளது என்று தெரிந்துகொண்டோம்.

உடனடியாக த.கு.மா.வா மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு (31.07.2017) மனு வழங்கினோம். பதில் இல்லை. மீண்டும் த.கு.மா.வா, துணை முதல்வர், இன்னும் பிற சம்பந்தப்பட்ட துறைகளுக்கு 05.10.2017 மனு வழங்கினோம். மீண்டும் பதில் இல்லை. இப்பொழுது இடிக்க வந்துவிட்டார்கள். 1 வாரத்திற்கு அதனை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளோம். 
-------------------------------------


முதலில் சொன்னதுபோல் மீண்டும் எங்களுக்கான பதில் கிடைக்காததால் நாளை மாலை முதல் 'காத்திருப்பு போராட்டம்' துவக்க முடிவு செய்துள்ளோம். யாருக்கும் தொந்தரவு இல்லாமல், எங்கள் இடத்திலேயே நாளை முதல் போராட்டம் துவங்கும். இதற்கான தனி நபர், சமூக செயற்பாட்டாளர்கள், முகநூல் பக்கங்கள், மக்கள் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடக நண்பர்களின் ஆதரவை வேண்டுகிறோம்.

காத்திருப்பு போராட்டம்

நடைபெறும் இடம் - அங்காளம்மன் கோயில் தெரு, பாடிக்குப்பம்.
துவங்கும் நாள் - 25.11.2017 மாலை 6 மணி
தொடர்பு - ஜெகதீஸ்வரன், சமூக செயற்பாட்டாளர், 9791050512

நன்றி.


2017-11-23 13:17 GMT+05:30 Jagadheeswaran D <djagadhees@gmail.com>:
ஊடக வெளியீடு  (23-நவ-17)

அம்மனிடம் முறையிடும் போராட்டம்

வணக்கம்,
கூவம் ஓரம் பாடிக்குப்பம் பகுதியில் வாழும் 300 குடும்பங்களுக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 'அத்திப்பட்டில்' மாற்று  வீடுகள் வேண்டி நாம் மனு வழங்கியிருந்ததையும், அந்த மனு மீது எந்த துறையும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாதது குறித்தும் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம்.

மீண்டும் அரசு அதிகாரிகளோ, அரசாங்கமோ எங்கள் கோரிக்கையை செவியில் வாங்கிக்கொள்ள தயாராக இல்லை. அரசங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில் இன்று பாடிகுப்பம் பகுதியில் அமைந்திருக்கும் 'அங்காள பரமேஸ்வரி அம்மனிடம்' இது குறித்து முறையிட முடிவு செய்துள்ளோம். 

அம்மனிடம் முறையிடும் 

இடம் - அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம், பாடிகுப்பம்
நாள் - இன்று நவ 23
நேரம் - மாலை 6.30 மணி
தொடர்பு - ஜெகதீஸ்வரன், 9791050512

அது குறித்து செய்தி சேகரிக்கவும், மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற உதவுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

- ஜெகதீஸ்வரன்,
சமூக செயற்பாட்டாளர்
9791050512

2017-11-21 10:04 GMT+05:30 Jagadheeswaran D <djagadhees@gmail.com>:

ஊடக வெளியீடு  (21-நவ-17)



கூவம் ஓரம் வாழும் பாடிக்குப்பம் மக்களுக்கு மாற்று வீடுகளுக்கான இன்று முதல் கோரிக்கை போராட்டங்கள்

கூவம் ஓரம் வாழும் மக்கள் தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தபடுவது குறித்து தாங்கள் அறிந்திருப்பீர்கள். பாடிக்குப்பம் பகுதி கோயம்பேடு சந்தைக்கு அருகில் இருக்கும் பகுதி (வார்டு - 93). இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலனவர்கள் கோயம்பேடு சந்தையில் அதிகாலை 3 மணி முதல் வேலை செய்பவர்கள். இன்னும் சிலர் அருகில் இருக்கும் வீடுகளில் பணியாளாக வேலை செய்பவர்கள். எடுக்கப்படும் வீடுகளில் வசிக்கும் பலர் இதே இடத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களுடைய வாழ்வாதாரம் இந்த பகுதியை நம்பியே இருந்து வருகிறது. இந்த இடத்தை விட்டுப்போவது அவர்களுக்கு உயிர் வலி. என்னுடைய அப்துல் கலாம் அறிவகம் - அங்கு வசிப்பவர்களுக்கான நூலகமாகவும், மாணவ மாணவிகளுக்கான டியூசன் மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

கூவம் சீரமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லைஆனால் எங்கள் வாழ்வாதாரத்தை அழித்து அது நடத்தப்பட வேண்டுமா என்பதே எங்கள் கேள்விஎங்களுக்கான மாற்று வீடுகள் பெரும்பாக்கம் பகுதியில் வழங்கப்படும் என தெரிந்துகொண்ட பின்னர் எங்கள் தேடலின் மூலம் பாடிகுப்பம் பகுதிக்கு ஓரளவு அருகில் இருக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 'அத்திப்பட்டில்' 1400 வீடுகள் கட்டப்பட்டிருப்பது தெரிந்துகொண்டோம். உடனடியாக 31.07.2017 அன்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு மனு அளித்தோம். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால், மீண்டும் 05.10.2017 அன்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கும், 10.10.2017  அன்று துணை முதல்வர், தலைமை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர், பொதுப்பணி துறை செயலாளர் மற்றும்  சென்னை பெருநகராட்சி ஆணையரை சந்தித்து பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கையொப்பங்களுடன் இணைத்து மனு வழங்கினோம். அனைவரும் எங்களுக்கு உதவி செய்வதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் நாளை முதல் வீடுகளை இடிப்பது துவங்கும் என்று எங்களுக்கு நேற்று (20.11.2017) தெரிவிக்கப்பட்டது. எங்கள் மனு  மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் சந்தித்த அதிகாரிகள் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான அத்திப்பட்டை எங்களுக்கு ஒதுக்குவதில் சிக்கல்கள் இல்லை என்றே தெரிவித்தனர்.  ஆனால் நாளை முதல் வீடுகள் இடிக்கப்படும் என்பது பேரதிர்ச்சியாக உள்ளது.

எங்களுடைய மனுவிற்கான பதில் வராத காரணத்தால் எங்களால் மாற்று இடங்களுக்கு செல்ல முடியாது. இதற்கான போராட்டங்கள் இன்று முதல் துவங்கும். அது குறித்து செய்தி சேகரிக்கவும், மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற உதவுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணைப்பு : கோரிக்கை மனுக்கள்

- ஜெகதீஸ்வரன்,
சமூக செயற்பாட்டாளர்
9791050512





--

Wednesday 22 November 2017

ஊடக வெளியீடு - அம்மனிடம் முறையிடும் போராட்டம் - இன்று 23 நவ மாலை 6.30 மணி - கூவம் ஓரம் வாழும் பாடிக்குப்பம் மக்களுக்கு மாற்று வீடுகளுக்கான கோரிக்கை போராட்டங்கள்

ஊடக வெளியீடு  (23-நவ-17)

அம்மனிடம் முறையிடும் போராட்டம்

வணக்கம்,
கூவம் ஓரம் பாடிக்குப்பம் பகுதியில் வாழும் 300 குடும்பங்களுக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 'அத்திப்பட்டில்' மாற்று  வீடுகள் வேண்டி நாம் மனு வழங்கியிருந்ததையும், அந்த மனு மீது எந்த துறையும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாதது குறித்தும் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம்.

மீண்டும் அரசு அதிகாரிகளோ, அரசாங்கமோ எங்கள் கோரிக்கையை செவியில் வாங்கிக்கொள்ள தயாராக இல்லை. அரசங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில் இன்று பாடிகுப்பம் பகுதியில் அமைந்திருக்கும் 'அங்காள பரமேஸ்வரி அம்மனிடம்' இது குறித்து முறையிட முடிவு செய்துள்ளோம். 

அம்மனிடம் முறையிடும் 

இடம் - அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம், பாடிகுப்பம்
நாள் - இன்று நவ 23
நேரம் - மாலை 6.30 மணி
தொடர்பு - ஜெகதீஸ்வரன், 9791050512

அது குறித்து செய்தி சேகரிக்கவும், மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற உதவுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

- ஜெகதீஸ்வரன்,
சமூக செயற்பாட்டாளர்
9791050512

2017-11-21 10:04 GMT+05:30 Jagadheeswaran D <djagadhees@gmail.com>:

ஊடக வெளியீடு  (21-நவ-17)



கூவம் ஓரம் வாழும் பாடிக்குப்பம் மக்களுக்கு மாற்று வீடுகளுக்கான இன்று முதல் கோரிக்கை போராட்டங்கள்

கூவம் ஓரம் வாழும் மக்கள் தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தபடுவது குறித்து தாங்கள் அறிந்திருப்பீர்கள். பாடிக்குப்பம் பகுதி கோயம்பேடு சந்தைக்கு அருகில் இருக்கும் பகுதி (வார்டு - 93). இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலனவர்கள் கோயம்பேடு சந்தையில் அதிகாலை 3 மணி முதல் வேலை செய்பவர்கள். இன்னும் சிலர் அருகில் இருக்கும் வீடுகளில் பணியாளாக வேலை செய்பவர்கள். எடுக்கப்படும் வீடுகளில் வசிக்கும் பலர் இதே இடத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களுடைய வாழ்வாதாரம் இந்த பகுதியை நம்பியே இருந்து வருகிறது. இந்த இடத்தை விட்டுப்போவது அவர்களுக்கு உயிர் வலி. என்னுடைய அப்துல் கலாம் அறிவகம் - அங்கு வசிப்பவர்களுக்கான நூலகமாகவும், மாணவ மாணவிகளுக்கான டியூசன் மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

கூவம் சீரமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லைஆனால் எங்கள் வாழ்வாதாரத்தை அழித்து அது நடத்தப்பட வேண்டுமா என்பதே எங்கள் கேள்விஎங்களுக்கான மாற்று வீடுகள் பெரும்பாக்கம் பகுதியில் வழங்கப்படும் என தெரிந்துகொண்ட பின்னர் எங்கள் தேடலின் மூலம் பாடிகுப்பம் பகுதிக்கு ஓரளவு அருகில் இருக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 'அத்திப்பட்டில்' 1400 வீடுகள் கட்டப்பட்டிருப்பது தெரிந்துகொண்டோம். உடனடியாக 31.07.2017 அன்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு மனு அளித்தோம். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால், மீண்டும் 05.10.2017 அன்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கும், 10.10.2017  அன்று துணை முதல்வர், தலைமை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர், பொதுப்பணி துறை செயலாளர் மற்றும்  சென்னை பெருநகராட்சி ஆணையரை சந்தித்து பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கையொப்பங்களுடன் இணைத்து மனு வழங்கினோம். அனைவரும் எங்களுக்கு உதவி செய்வதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் நாளை முதல் வீடுகளை இடிப்பது துவங்கும் என்று எங்களுக்கு நேற்று (20.11.2017) தெரிவிக்கப்பட்டது. எங்கள் மனு  மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் சந்தித்த அதிகாரிகள் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான அத்திப்பட்டை எங்களுக்கு ஒதுக்குவதில் சிக்கல்கள் இல்லை என்றே தெரிவித்தனர்.  ஆனால் நாளை முதல் வீடுகள் இடிக்கப்படும் என்பது பேரதிர்ச்சியாக உள்ளது.

எங்களுடைய மனுவிற்கான பதில் வராத காரணத்தால் எங்களால் மாற்று இடங்களுக்கு செல்ல முடியாது. இதற்கான போராட்டங்கள் இன்று முதல் துவங்கும். அது குறித்து செய்தி சேகரிக்கவும், மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற உதவுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணைப்பு : கோரிக்கை மனுக்கள்

- ஜெகதீஸ்வரன்,
சமூக செயற்பாட்டாளர்
9791050512