Tuesday 9 April 2024

ஊடகச் செய்தி.. ஏப்ரல் 9, 2024 | "சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாடு"

ஊடகச் செய்தி.. ஏப்ரல் 9, 2024

சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் "Thirukkural Translations in World Languages" என்ற முக்கியத்துவம் வாய்ந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த ஆய்வுநூல் வெளியிடப்பட்டது.

ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு, ஏப்ரல் 5-7, 2024 தேதிகளில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்று முடிந்தது. இவ்விழாவில் உலகத்தின் பல நாடுகளிலிருந்து ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், திருக்குறள் ஆர்வலர்கள், அமெரிக்காவின் பல்வேறு தமிழ்ச்சங்க மக்கள், மாணவர்கள் என்று அனைவரும் சங்கமிக்கும் ஒரு பெரும் மாநாடாக நடந்தேறியது. இம்மாநாட்டை சிகாகோ தமிழ்ச்சங்கம் முன்னெடுத்துப் பல அமைப்புகளையும் ஒருங்கிணைத்துச் செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாகத் தமிழறிஞர் -பட்டிமன்ற நாயகர் பேராசிரியர் திரு சாலமன் பாப்பையா அவர்களால், வலைத்தமிழ் பதிப்பக வெளியீடாக வந்துள்ள உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் (Thirukkural Translations in World Languages) என்ற ஆங்கில நூல் நேற்று சிகாகோவில் வெளியிடப்பட்டது. இந்நூலை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவைத் தலைவர் முனைவர். பாலா சாமிநாதன், சிகாகோ தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. நம்பிராஜன் வைத்திலிங்கம், தமிழறிஞர் முனைவர்.மருதநாயகம், ஹார்வார்ட் தமிழிருக்கை புரவலர்கள் மருத்துவர். விஜய் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம், திருக்குறள் ஆர்வலர் திரு. தாமஸ் ஹிட்டோஷி புருக்ஷ்மா உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

இதற்கான ஒருங்கிணைப்பை சிகாகோ தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் திரு.சரவணக்குமார் மணியன் , நூலாசிரியர்கள் திரு. இளங்கோ தங்கவேல், மிசௌரி, திரு. செந்தில் துரைசாமி, டெக்ஸாஸ் ஆகியோர் மிக நேர்த்தியாகச் செய்திருந்தனர்.

திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் உலக அளவில் இதுவரை வெளியிடப்பட்டுள்ளது என்பதற்குச் சரியான தரவுகள் இல்லை, ஆவணப்படுத்தப்படவில்லை , இதுகுறித்து இதுவரை ஒருங்கிணைந்த முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதையும், ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்ட சில முயற்சிகள் முழுமையடையவில்லை என்பதை அறிந்து வட அமெரிக்காவில் ஒரு குழு அமைத்து "உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை வாசிங்டன் வட்டாரத்தைத் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் தலைவர், வலைத்தமிழ் நிறுவனர் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி 2018 ஆம் ஆண்டு தொடங்கினார்.
 
இத்திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராக மிசௌரி மாகாணத்தில் வசிக்கும் திரு.இளங்கோ தங்கவேலு பொறுப்பேற்றார். மேலும் டெக்சாஸிலிருந்து திரு.செந்தில் துரைசாமி, இந்தியாவிலிருந்து மொழி பெயர்ப்பு சேகரிப்பு பணியில் 25 ஆண்டுகள் கள அனுபவம் வாய்ந்த கானுயிர் மருத்துவர் NVK அஷ்ரஃப் ,வள்ளுவர் குரல் குடும்பத்தின் நிறுவுநர்-ஒருங்கிணைப்பாளர் சி இராஜேந்திரன் IRS ( Retd) ,அஜெய் செல்வன் என்ற குறளார்வம் கொண்ட இளைஞர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இக்குழு உலக நாடுகளைத் தொடர்புகொண்டு அனைத்து நாடுகளிலும் வெளிவந்துள்ள திருக்குறள் மொழிபெயர்ப்புகளைத்  தொகுத்து , அச்சுப்பிரதிகளை சென்னைக்குக் கொண்டுவந்து தொகுத்தல் , எத்தனை மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு வந்துள்ளது, எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டும் என்ற முழுத் தகவலுடன் ஒரு ஆய்வறிக்கையை ஒரு முழு நூலாக அனைவரும் இனி நம்பிக்கையுடன் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டது.

கடும் தொடர் முயற்சிகளின் விளைவாக 220 பக்கங்கள் கொண்ட உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் என்ற பல வண்ண ஆங்கில நூல் தற்போது வெளிவந்துள்ளது.

உலகப் பொதுமறை என்று வழங்கப்படும் திருக்குறள் உலகில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது. முதல் மொழிபெயர்ப்பு 1595 ஆம் ஆண்டு மலையாளத்தில் வந்தது என அறியப்படுகிறது . அதன் பிறகு 1730 ஆம் ஆண்டு லத்தின் மொழியில் வீரமாமுனிவர் மொழிபெயர்த்தார். அது முதல், காலந்தோறும் திருக்குறள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தது . ஜி யு போப்  திருக்குறள் முழு நூலையும் ஆங்கிலத்தில் முதன் முதலாக மொழி பெயர்த்தார் என்பதுபோன்ற பல்வேறு அரிய தகவல்களை ஆண்டு வாரியாக, மொழி வாரியாக பட்டியலிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

திருக்குறள் இதுவரை ஆங்கிலத்தில் 130 முறையும் , மலையாளத்தில் 30 முறையும், இந்தியில் 20 முறையும்,
 தெலுங்கில் 19 முறையும் , பிரென்ச் மொழியில் 16 முறையும், கன்னடத்தில் 12 முறையும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதுபோன்ற அரிய ஆய்வுத் தகவல்கள் ஆண்டுவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது. .

இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகள் ,பெரும்பகுதி தனி மனிதர்களின் ஆர்வத்தினால் தான்  நடைபெற்று வந்தது. ஆனால் மத்தியச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொடங்கிய பிறகு சற்றே இந்தப் பணிகள் வேகமெடுத்தது.

திருக்குறள் தேசிய நூலாக்கப்பட வேண்டும் ,திருக்குறளுக்கு யுனெஸ்கோவின் "மனித இனத்தின் பாரம்பரிய நூல்" என்ற அங்கீகாரம் பெற வேண்டும் என்ற முயற்சிகள் பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகின்றது.

இந்த முயற்சிகள் முழுதாக வெற்றி பெற வேண்டும் என்றால் இதுவரை திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்ற தகவல் உறுதுணையாக இருக்கும். வெளிவந்த மொழிபெயர்ப்புகளில் பல இன்று அச்சில் இல்லை. அனைத்தையும் அடையாளம் கண்டு மீட்டுருவாக்கம் செய்து , இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளும், வெளிநாடுகளில் அவரவர் தாய்மொழியிலும் கிடைக்கச் செய்வதே உலகப்பொதுமறை என்பதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றவும், திருக்குறள் பரவலாக்கல் முழுமையாக நடைபெறவும் உதவும்.

இத்திட்டக் குழுவின் ஆய்வில் இதுவரை திருக்குறள் 29 இந்திய மொழிகளிலும், 29 வெளிநாட்டு மொழிகளிலும்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அலுவல் மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் யுனெஸ்கோவின் பத்து அலுவல் மொழிகளில் போர்ச்சுக்கீஸ் தவிர மற்ற ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது பெரும் செய்தி.

உலக நாடுகள் அனைத்திலும் திருக்குறள் சென்று சேர வேண்டுமானால் உலக நாடுகளில் அலுவல் மொழியாக உள்ள 158 மொழிகளில் இன்னும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் . அவ்வாறு செய்தால் எல்லா நாடுகளின் ஒரு அலுவல் மொழியிலாவது திருக்குறள் மொழிபெயர்ப்பு வந்திருக்கும் என்ற நிலையை எட்டி விடலாம் .

இதற்காக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் ஆங்காங்கே மொழிபெயர்ப்பாளர்களை இனம் கண்டு தனியாகவோ அல்லது செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் வழியாகவோ இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற முழுமையான திட்டத்துடன் "திருக்குறள் 2030" என்ற திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதற்கான சிறப்பு இலச்சினை (Logo ) சிகாகோ விழாவில் வெளியிடப்பட்டது.

1. இதுவரை வெளிவந்துள்ள 58 திருக்குறள் மொழிபெயர்ப்புகளில் அச்சில் இல்லாத மொழிபெயர்ப்புகளை அடையாளம் கண்டு மீட்டுருவாக்கம் செய்வதும், (ஆ)வெளிநாடுகளில் வெளியிடப்பட்டு பெரிய அளவு பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் மொழிபெயர்ப்புகளை உரியப் புரிந்துணர்வுடன் அச்சிடுவதும், (இ) இதற்கென சென்னையில் திருக்குறளுக்கான ஒரு தனித்த பதிப்பகத்தை உருவாக்கிக் கிடைக்கச் செய்வதும் இத் திட்டத்தில் அடங்கும் .

2. இதுவரை மொழிபெயர்க்கப்படாமல் இருக்கும் ஐக்கிய நாடுகள் அவையில் உள்ள உறுப்பு நாடுகளின் 158 அலுவல் மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பைக் கொண்டுவர உலகத் தமிழ்ச் சமூகத்திடம் கொண்டுசென்று அனைத்து மொழிபெயர்ப்புகளையும் சாதகமான வழிகளில், வாய்ப்புள்ள அமைப்புகளின் வழியே செய்துமுடித்தல்.

3. தமிழ்நாட்டில் தொடங்கி வெவ்வேறு மாநில தமிழ்ச்சங்கங்களுடன் இணைந்து அந்தந்த மாநில முதல்வர்களைச் சந்தித்து அவர்கள் மொழியில் உள்ள திருக்குறள் மொழிபெயர்ப்புகளை மாநில பரிசுப்பொருளாகப் பயன்படுத்த வேண்டுகோள் வைத்தல்.

4. உரிய வழிகளில் அனைத்து நாட்டுத் தூதர்களையும் சந்தித்து அவர்கள் நாட்டு மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பையும், ஆங்கில மொழி பெயர்ப்பையும் பரிசுப் பொதியாகக் கொடுத்து அதை அவர்கள் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் அலுவல் சார்ந்த சந்திப்புகளில் பரிசாகப் பயன்படுத்தக் கோரிக்கை வைப்பது.

5. Thirukkural Translations in World Languages நூலைப் பல நாடுகளில், இந்தியாவின் பல மாநிலங்களில் , தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில், அமெரிக்காவின் பல மாநிலங்களில் அடுத்த 7 ஆண்டுகளில் அறிமுக விழா நடத்தி திருக்குறள் மொழிபெயர்ப்புகளைச் செய்யும் “திருக்குறள் 2030” தன்னார்வலர்களை ஊக்குவிப்பது.

6. திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கச் செய்தல். 50 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கோரிக்கையை நடைமுறைப்படுத்தச் சரியான காலமாக உணர்ந்து செய்துமுடிக்க உரிய வழிகளை ஏற்படுத்துதல்.
 
7. நீண்டநாள் கோரிக்கையாக உள்ள யுனெஸ்கோ அமைப்பு திருக்குறளை "Heritage Book of Mankind” என்று அறிவிப்பதை உறுதிசெய்யச் சரியான நடைமுறை சாத்தியங்களை ஏற்படுத்துதல். ஆகிய நோக்கங்களுக்காகப் பல்வேறு துறைசார் அனுபவம் கொண்ட ஆளுமைகளின் குழுக்கள் அமைக்கப்படுகிறது.
 
வெளியிடப்பட்ட நூலின் விவரம்: 218 பக்கங்கள், முழு வண்ண நூல், வலைத்தமிழ் பதிப்பகம்,
நூலை வாங்க: https://estore.valaitamil.com  (அமெரிக்கா, இந்தியா)

நூல் மதிப்புரை செய்ய, நூலாசிரியர்களிடம் நேர்காணல் செய்ய, திருக்குறள் 2030 திட்டம் குறித்த முழுவிவரம் அறியத் தொடர்புகொள்ளவும்.
 
 
 
ஊடகத் தொடர்புக்கு: அ.சுரேஷ் ,
thirukural2030@gmail.com | கைப்பேசி: +91 9884411637
 
 

சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாடு | ஊடகச் செய்தி.. ஏப்ரல் 9, 2024

ஊடகச் செய்தி.. ஏப்ரல் 9, 2024

சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் "Thirukkural Translations in World Languages" என்ற முக்கியத்துவம் வாய்ந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த ஆய்வுநூல் வெளியிடப்பட்டது.


ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு, ஏப்ரல் 5-7, 2024 தேதிகளில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்று முடிந்தது. இவ்விழாவில் உலகத்தின் பல நாடுகளிலிருந்து ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், திருக்குறள் ஆர்வலர்கள், அமெரிக்காவின் பல்வேறு தமிழ்ச்சங்க மக்கள், மாணவர்கள் என்று அனைவரும் சங்கமிக்கும் ஒரு பெரும் மாநாடாக நடந்தேறியது. இம்மாநாட்டை சிகாகோ தமிழ்ச்சங்கம் முன்னெடுத்துப் பல அமைப்புகளையும் ஒருங்கிணைத்துச் செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாகத் தமிழறிஞர் -பட்டிமன்ற நாயகர் பேராசிரியர் திரு சாலமன் பாப்பையா அவர்களால், வலைத்தமிழ் பதிப்பக வெளியீடாக வந்துள்ள உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் (Thirukkural Translations in World Languages) என்ற ஆங்கில நூல் நேற்று சிகாகோவில் வெளியிடப்பட்டது. இந்நூலை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவைத் தலைவர் முனைவர். பாலா சாமிநாதன், சிகாகோ தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. நம்பிராஜன் வைத்திலிங்கம், தமிழறிஞர் முனைவர்.மருதநாயகம், ஹார்வார்ட் தமிழிருக்கை புரவலர்கள் மருத்துவர். விஜய் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம், திருக்குறள் ஆர்வலர் திரு தாமஸ் ஹிட்டோஷி புருக்ஷ்மா உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

இதற்கான ஒருங்கிணைப்பை சிகாகோ தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் திரு.சரவணக்குமார் மணியன் , நூலாசிரியர்கள் திரு. இளங்கோ தங்கவேல், மிசௌரி, திரு. செந்தில் துரைசாமி, டெக்ஸாஸ் ஆகியோர் மிக நேர்த்தியாகச் செய்திருந்தனர்.

திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் உலக அளவில் இதுவரை வெளியிடப்பட்டுள்ளது என்பதற்குச் சரியான தரவுகள் இல்லை, ஆவணப்படுத்தப்படவில்லை , இதுகுறித்து இதுவரை ஒருங்கிணைந்த முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதையும், ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்ட சில முயற்சிகள் முழுமையடையவில்லை என்பதை அறிந்து வட அமெரிக்காவில் ஒரு குழு அமைத்து "உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை வாசிங்டன் வட்டாரத்தைத் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் தலைவர், வலைத்தமிழ் நிறுவனர் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி 2018 ஆம் ஆண்டு தொடங்கினார்.
 
இத்திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராக மிசௌரி மாகாணத்தில் வசிக்கும் திரு.இளங்கோ தங்கவேலு பொறுப்பேற்றார். மேலும் டெக்சாஸிலிருந்து திரு.செந்தில் துரைசாமி, இந்தியாவிலிருந்து மொழி பெயர்ப்பு சேகரிப்பு பணியில் 25 ஆண்டுகள் கள அனுபவம் வாய்ந்த கானுயிர் மருத்துவர் NVK அஷ்ரஃப் ,வள்ளுவர் குரல் குடும்பத்தின் நிறுவுநர்-ஒருங்கிணைப்பாளர் சி இராஜேந்திரன் IRS ( Retd) ,அஜெய் செல்வன் என்ற குறளார்வம் கொண்ட இளைஞர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இக்குழு உலக நாடுகளைத் தொடர்புகொண்டு அனைத்து நாடுகளிலும் வெளிவந்துள்ள திருக்குறள் மொழிபெயர்ப்புகளைத்  தொகுத்து , அச்சுப்பிரதிகளை சென்னைக்குக் கொண்டுவந்து தொகுத்தல் , எத்தனை மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு வந்துள்ளது, எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டும் என்ற முழுத் தகவலுடன் ஒரு ஆய்வறிக்கையை ஒரு முழு நூலாக அனைவரும் இனி நம்பிக்கையுடன் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டது.

கடும் தொடர் முயற்சிகளின் விளைவாக 220 பக்கங்கள் கொண்ட உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் என்ற பல வண்ண ஆங்கில நூல் தற்போது வெளிவந்துள்ளது.

உலகப் பொதுமறை என்று வழங்கப்படும் திருக்குறள் உலகில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது. முதல் மொழிபெயர்ப்பு 1595 ஆம் ஆண்டு மலையாளத்தில் வந்தது என அறியப்படுகிறது . அதன் பிறகு 1730 ஆம் ஆண்டு லத்தின் மொழியில் வீரமாமுனிவர் மொழிபெயர்த்தார். அது முதல், காலந்தோறும் திருக்குறள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தது . ஜி யு போப்  திருக்குறள் முழு நூலையும் ஆங்கிலத்தில் முதன் முதலாக மொழி பெயர்த்தார் என்பதுபோன்ற பல்வேறு அரிய தகவல்களை ஆண்டு வாரியாக, மொழி வாரியாக பட்டியலிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

திருக்குறள் இதுவரை ஆங்கிலத்தில் 130 முறையும் , மலையாளத்தில் 30 முறையும், இந்தியில் 20 முறையும்,
 தெலுங்கில் 19 முறையும் , பிரென்ச் மொழியில் 16 முறையும், கன்னடத்தில் 12 முறையும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதுபோன்ற அரிய ஆய்வுத் தகவல்கள் ஆண்டுவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது. .

இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகள் ,பெரும்பகுதி தனி மனிதர்களின் ஆர்வத்தினால் தான்  நடைபெற்று வந்தது. ஆனால் மத்தியச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொடங்கிய பிறகு சற்றே இந்தப் பணிகள் வேகமெடுத்தது.

திருக்குறள் தேசிய நூலாக்கப்பட வேண்டும் ,திருக்குறளுக்கு யுனெஸ்கோவின் "மனித இனத்தின் பாரம்பரிய நூல்" என்ற அங்கீகாரம் பெற வேண்டும் என்ற முயற்சிகள் பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகின்றது.

இந்த முயற்சிகள் முழுதாக வெற்றி பெற வேண்டும் என்றால் இதுவரை திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்ற தகவல் உறுதுணையாக இருக்கும். வெளிவந்த மொழிபெயர்ப்புகளில் பல இன்று அச்சில் இல்லை. அனைத்தையும் அடையாளம் கண்டு மீட்டுருவாக்கம் செய்து , இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளும், வெளிநாடுகளில் அவரவர் தாய்மொழியிலும் கிடைக்கச் செய்வதே உலகப்பொதுமறை என்பதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றவும், திருக்குறள் பரவலாக்கல் முழுமையாக நடைபெறவும் உதவும்.

இத்திட்டக் குழுவின் ஆய்வில் இதுவரை திருக்குறள் 29 இந்திய மொழிகளிலும், 29 வெளிநாட்டு மொழிகளிலும்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அலுவல் மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் யுனெஸ்கோவின் பத்து அலுவல் மொழிகளில் போர்ச்சுக்கீஸ் தவிர மற்ற ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது பெரும் செய்தி.

உலக நாடுகள் அனைத்திலும் திருக்குறள் சென்று சேர வேண்டுமானால் உலக நாடுகளில் அலுவல் மொழியாக உள்ள 158 மொழிகளில் இன்னும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் . அவ்வாறு செய்தால் எல்லா நாடுகளின் ஒரு அலுவல் மொழியிலாவது திருக்குறள் மொழிபெயர்ப்பு வந்திருக்கும் என்ற நிலையை எட்டி விடலாம் .

இதற்காக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் ஆங்காங்கே மொழிபெயர்ப்பாளர்களை இனம் கண்டு தனியாகவோ அல்லது செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் வழியாகவோ இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற முழுமையான திட்டத்துடன் "திருக்குறள் 2030" என்ற திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதற்கான சிறப்பு இலச்சினை (Logo ) சிகாகோ விழாவில் வெளியிடப்பட்டது.

1. இதுவரை வெளிவந்துள்ள 58 திருக்குறள் மொழிபெயர்ப்புகளில் அச்சில் இல்லாத மொழிபெயர்ப்புகளை அடையாளம் கண்டு மீட்டுருவாக்கம் செய்வதும், (ஆ)வெளிநாடுகளில் வெளியிடப்பட்டு பெரிய அளவு பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் மொழிபெயர்ப்புகளை உரியப் புரிந்துணர்வுடன் அச்சிடுவதும், (இ) இதற்கென சென்னையில் திருக்குறளுக்கான ஒரு தனித்த பதிப்பகத்தை உருவாக்கிக் கிடைக்கச் செய்வதும் இத் திட்டத்தில் அடங்கும் .

2. இதுவரை மொழிபெயர்க்கப்படாமல் இருக்கும் ஐக்கிய நாடுகள் அவையில் உள்ள உறுப்பு நாடுகளின் 158 அலுவல் மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பைக் கொண்டுவர உலகத் தமிழ்ச் சமூகத்திடம் கொண்டுசென்று அனைத்து மொழிபெயர்ப்புகளையும் சாதகமான வழிகளில், வாய்ப்புள்ள அமைப்புகளின் வழியே செய்துமுடித்தல்.

3. தமிழ்நாட்டில் தொடங்கி வெவ்வேறு மாநில தமிழ்ச்சங்கங்களுடன் இணைந்து அந்தந்த மாநில முதல்வர்களைச் சந்தித்து அவர்கள் மொழியில் உள்ள திருக்குறள் மொழிபெயர்ப்புகளை மாநில பரிசுப்பொருளாகப் பயன்படுத்த வேண்டுகோள் வைத்தல்.

4. உரிய வழிகளில் அனைத்து நாட்டுத் தூதர்களையும் சந்தித்து அவர்கள் நாட்டு மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பையும், ஆங்கில மொழி பெயர்ப்பையும் பரிசுப் பொதியாகக் கொடுத்து அதை அவர்கள் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் அலுவல் சார்ந்த சந்திப்புகளில் பரிசாகப் பயன்படுத்தக் கோரிக்கை வைப்பது.

5. Thirukkural Translations in World Languages நூலைப் பல நாடுகளில், இந்தியாவின் பல மாநிலங்களில் , தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில், அமெரிக்காவின் பல மாநிலங்களில் அடுத்த 7 ஆண்டுகளில் அறிமுக விழா நடத்தி திருக்குறள் மொழிபெயர்ப்புகளைச் செய்யும் "திருக்குறள் 2030" தன்னார்வலர்களை ஊக்குவிப்பது.

6. திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கச் செய்தல். 50 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கோரிக்கையை நடைமுறைப்படுத்தச் சரியான காலமாக உணர்ந்து செய்துமுடிக்க உரிய வழிகளை ஏற்படுத்துதல்.
 
7. நீண்டநாள் கோரிக்கையாக உள்ள யுனெஸ்கோ அமைப்பு திருக்குறளை "Heritage Book of Mankind" என்று அறிவிப்பதை உறுதிசெய்யச் சரியான நடைமுறை சாத்தியங்களை ஏற்படுத்துதல். ஆகிய நோக்கங்களுக்காகப் பல்வேறு துறைசார் அனுபவம் கொண்ட ஆளுமைகளின் குழுக்கள் அமைக்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நூலின் விவரம்: 218 பக்கங்கள், முழு வண்ண நூல், வலைத்தமிழ் பதிப்பகம்,
நூலை வாங்க: https://estore.valaitamil.com  (அமெரிக்கா, இந்தியா)

நூல் மதிப்புரை செய்ய, நூலாசிரியர்களிடம் நேர்காணல் செய்ய, திருக்குறள் 2030 திட்டம் குறித்த முழுவிவரம் அறியத் தொடர்புகொள்ளவும்.

 

ஊடகத் தொடர்புக்கு: அ.சுரேஷ் ,
thirukural2030@gmail.com | கைப்பேசி: +91 9884411637

Saturday 2 March 2024

'நம்ம ஊரு விளையாட்டுத் திடல்’ என்ற பெயரில் ஊராட்சிகளின் உரிமைகளைப் பறிப்பதா? - தன்னாட்சி கண்டன அறிக்கை

'நம்ம ஊரு விளையாட்டுத் திடல்' என்ற பெயரில் ஊராட்சிகளின் உரிமைகளைப் பறிப்பதா?

தன்னாட்சி கண்டன அறிக்கை

100 நாள் வேலைத் திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் - 2005, (MGNREGA-2005) பகுதி 16(1) இன் படி இத்திட்டத்தின் கீழ் என்ன வேலைகளைச் செய்ய வேண்டும்; எங்கு, எப்பொழுது செய்ய வேண்டும்; அதற்கான பட்ஜெட், ஆண்டு வேலைத் திட்டம் போன்ற அனைத்தையும் முடிவு செய்து, ஒப்புதலளிக்கும் அதிகாரம், தொடர்புடைய கிராம ஊராட்சியின் கிராமசபைக்கே உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நடைமுறையில் இதில் பல குளறுபடிகள் நடந்து வருவதாகவும், முடிவுகள் ஊராட்சி ஒன்றிய அலுவலக அளவில் எடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது சார்ந்த போராட்டங்களும் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் பிப்ரவரி 2, 2024 அன்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் (RC No 30450/ 2023/ MGNREGS I-2 Dt.: 2/2/2024), 'நம்ம ஊரு விளையாட்டுத் திடல்' என்ற பெயரில் தமிழ்நாடு பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டதை, 2023-24 நிதியாண்டின் MGNREGA வேலைகளில் விளையாட்டு திடல் அமைப்பதையும் சேர்க்கச் சொல்லியும் கிராமசபையில் ஒப்புதல் வாங்கி மார்ச் 31, 2024 க்குள் பணிகளை முடிக்கும்படியும் விளையாட்டுப் பொருட்களை வாங்குவதற்கு ஊராட்சிகளின் நிதிகளான மத்திய நிதிக்குழு ஆணைய நிதி, மாநில நிதிக்குழு ஆணைய நிதிகளோடு, நமக்கு நாமே திட்ட நிதி, மாவட்ட சுரங்க நிதி மற்றும் தனியார் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதிகள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஆணை பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு.

MGNREGS இன் 2023-2024 க்கான திட்ட வழிகாட்டுதல்களின் படி, அடுத்த நிதியாண்டில் செய்ய வேண்டிய வேலைகளைக் கண்டறியும் பொறுப்பு கிராம ஊராட்சியைச் சார்ந்ததாகும். கிராம ஊராட்சி வேலைகளைக் கண்டறிந்து அதைப் பணிகளின் தொகுப்பாக (Shelf of Projects) மாற்றி கிராமசபையில் ஒப்புதல் பெற வேண்டும். பின்பு அதற்கான தொழிலாளர் வரவுசெலவு அறிக்கையை (Labour Budget) ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்களின் உதவியுடன் தயாரித்து அதையும் அடுத்த ஆண்டிற்கான பணித்திட்டமாகத் தயாரித்து (Annual Action Plan) கிராமசபையில் ஒப்புதல் பெற வேண்டும். ஒருவேளை கணக்கிட்ட மக்களை விட அதிக மக்கள் வேலை கேட்டால் அதற்கான மறுபரிசீலனை செய்யப்பட்ட லேபர் பட்ஜெட்டையும் (Revised Labour Budget) தயாரித்து கிராமசபையில் வைத்து ஒப்புதல் வாங்க வேண்டும். அதனடிப்படையிலேயே இந்திய ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் நிதிகளை வழங்க வேண்டும் என்பதையே சட்டமும் அதன் வழிகாட்டுதல்களும் கூறுகின்றன. ஆனால் இவை எதையும் கடைபிடிக்காமல் குறிப்பாகக் கிராம ஊராட்சிகளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், இந்த விளையாட்டுத் திடல் அமைக்கக் கூறி மாநில அரசு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளது. அதையும் இந்த நிதியாண்டின் இறுதியிலேயே அவசர கதியில் முடிக்கக் கூறுகிறது இக்கடிதம். கிராம ஊராட்சிகளில் நிறைவேற்றக்கூடிய மக்கள் திட்டங்கள் கீழிருந்து மேலே செல்ல வேண்டும் (Bottom Up Planning Approach) என்ற MGNREGA சட்டத்தின் அடிப்படைக் கருத்தாக்கத்திற்கு முற்றும் எதிராக உள்ளது அரசின் இந்தச் செயல்பாடு. அரசின் உள்ளாட்சி அதிகாரங்களுக்கு எதிரான போக்கிற்கு தன்னாட்சி கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறது.

மேலும் தமிழ்நாடு அரசு, மாநில அளவில் திட்டங்களை அறிவித்துவிட்டு அதற்கான நிதியை ஊராட்சிகளின் சொந்த நிதியில் இருந்து எடுத்துச் செய்ய ஊராட்சிகளை நிர்பந்திப்பது என்பதைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள இந்த விளையாட்டுத் திடல் திட்டத்திற்கான நிதியையும் மாநில அரசு அதன் சொந்த நிதியிலிருந்து ஒதுக்காமல், ஊராட்சிகளின் நிதியான MGNREGA திட்ட நிதியைப் பயன்படுத்தக் கூறியிருக்கிறது. மேலும் கிராம ஊராட்சிகளுக்கு வரவேண்டிய நிதிகளான மத்திய நிதிக்குழு ஆணைய நிதி, மாநில நிதிக்குழு ஆணைய நிதி போன்றவற்றைப் பயன்படுத்தி விளையாட்டுப் பொருட்களை வாங்குமாறும் இக்கடிதம் கூறுகிறது. தமிழ்நாடு அரசின் நிதியைக் கையாள்வதற்கு தமிழ்நாடு அரசுக்கு எந்த அளவுக்குச் சுதந்தரம் உள்ளதோ அதேபோல் ஊராட்சிகளின் நிதியைக் கையாளுவதற்கு ஊராட்சிகளுக்கு முழுச் சுதந்தரம் உண்டு. மக்களுக்கு சரியான வழியில் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதில் முனைப்பு காட்டுவதை விட, மக்களுக்கான திட்டங்களை மக்களே முடிவெடுத்து செய்யும் படி அவர்களை அதிகாரப்படுத்துவதே முக்கியமானது என்ற அடிப்படையில், ஊராட்சிகளுக்கு அவர்கள் நிதியைக் கையாளுவதற்கான சுதந்தரமும் பயிற்சியும் வழங்காமல், ஊராட்சிகளை கிராமசபைகளை அதிகாரப்படுத்தாமல், அலுவலர்களை வைத்து ஆட்சி நடத்திய ஆங்கிலேய காலனி ஆட்சி முறையை, உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை, அதன் மன்றங்களை, குறிப்பாகக் கிராமசபையைத் துளி கூட மதிக்காமல் மாவட்ட ஆட்சியர், நகர உள்ளாட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் போன்றோரை வைத்தே ஆட்சி நடத்தலாம் என்ற எண்ணத்தை, செயலை மாநில சுயாட்சி கேட்கும் நமது தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

எனவே,

1. அரசு தற்போது வெளியிட்டிருக்கும் 'நம்ம ஊரு விளையாட்டுத் திடல்' திட்டத்தை, மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது தன்னாட்சி. ஒருவேளை அது முடியாவிட்டால், திட்டத்தை அவசர கதியில் நடைமுறைப்படுத்தாமல், உரிய சட்ட வழிமுறைகளின் படி, கிராமசபையின் முறையான ஒப்புதலோடு விருப்பப்படும் ஊராட்சிகள் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும். 

2. இத்திட்டம் மூலம் விளையாட்டுப் பொருள்களை வாங்குவதற்கு ஊராட்சிகளின் நிதியான மத்திய நிதிக்குழு ஆணைய நிதி, மாநில நிதிக்குழு ஆணைய நிதி போன்றவற்றை ஊராட்சிகளின் முறையான அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது எனக் கோருகிறது தன்னாட்சி.

3. மாநில சுயாட்சி எவ்வளவு முக்கியமோ, அதே போல் உள்ளாட்சியிலும் தன்னாட்சி அவசியம் என்பதைப் புரிந்து கொண்டு, உள்ளாட்சிகளை வலுப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

வலுக்கட்டாயமான நகரமயமாக்கலைக் கண்டிக்கிறது, தன்னாட்சி!

மக்களின் விருப்பத்திற்கு மாறாகக் கிராம ஊராட்சிகளை நகரமயமாக்குவது முறையா?

வலுக்கட்டாயமான நகரமயமாக்கலைக் கண்டிக்கிறது, தன்னாட்சி!

தமிழ்நாட்டில் தற்போது பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கிராம ஊராட்சிகளை அருகாமையிலிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சிகளோடு இணைத்து விடுவது அல்லது பெரிய ஊராட்சிகளைப் பேரூராட்சிகளாக வகைமாற்றம் செய்து விடுவதென மக்களின் எதிர்ப்பையும் மீறி பணிகளை மேற்கொண்டு வருகிறது அரசு. கன்னியாகுமரி, ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த வலுக்கட்டாய மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும், ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளும் போராடி வருகிறார்கள். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் சுமார் 35 கிராம ஊராட்சிகளை நகரங்களாக மாற்றுவதற்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த 35 ஊராட்சிகளில், 10 ஊராட்சிகள் நேரடியாகப் பேரூராட்சிகளாகவும், மற்ற 25 கிராம ஊராட்சிகள் அருகாமையில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளோடு இணைப்பதற்கும் பணிகள் நடந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்களும் ஊராட்சிப் பிரதிநிதிகளும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த ஊராட்சிப் பிரதிநிதிகளிடம் இது பற்றி கேட்டபோது இந்த நகரமயமாக்களை எதிர்த்து ஜனவரி 26 கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். இப்போராட்டங்கள் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்ட போது உரியத் தீர்மானங்களோடும், பொதுமக்கள் கருத்துகளோடும் தான் இணைக்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கோ, ஊராட்சி மன்றத்திற்கோ, கிராமசபைக்கோ, மக்களுக்கோ முறையாகத் தகவல் ஏதும் தெரிவிக்கவே இல்லை என்றும் ஒரு அதிகாரப்பூர்வக் கடிதம் கூட வரவில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள் ஊராட்சித் தலைவர்கள். 

இதுபோன்ற நகரமயமாக்கலால் ஊராட்சிகளில் சமூகப் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய குடும்ப மக்கள் தான் உடனடியாகப் பாதிக்கப்படுபவர்களாக இருக்கப் போகிறார்கள் என்பது கண்கூடு. கிராம வளர்ச்சிக்கும், விவசாய முன்னேற்றத்திற்கும் பெரிய அளவில் பங்களித்து வரும் பல மத்திய/ மாநில அரசுத் திட்டங்கள், குறிப்பாக 100 நாள் வேலைத் (MGNREGA) திட்டத்தினை முற்றிலுமாக மக்கள் இழக்க நேரிடும். எளிய மக்களின் வீட்டு வரியும், குடிநீர் கட்டணமும் பல மடங்கு உயரும். விவசாயத்திற்கான விளைநிலங்கள் விற்பனை மனைகளாக மாறும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் பொது மக்களின் நேரடிப் பங்களிப்பிற்கான, அதாவது கிராமசபைக்கான வாய்ப்பு இல்லாமல் போகும். மக்கள் கிராமசபையில் கூடி ஊர் வளர்ச்சிக்குத் திட்டமிட்டது எல்லாம், வெறும் கவுன்சிலரிடம் சென்று கோரிக்கைக் கடிதம் தருவதாகச் சுருங்கும். 

மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குறித்த மாதவ் காட்கில் அறிக்கை, உலகின் மிகச்சிறந்த உயிர்பல்வகைமை கொண்ட இப்பகுதிகளைப் பாதுகாக்கக் கிராம ஊராட்சிகளையும், கிராமசபைகளையும் வலுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை மட்டுமில்லாமல் கடலோர வளங்கள் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊராட்சிகளை நகரமயமாக்குவது எந்த வகையிலும் நலனைத் தரப்போவதில்லை. கன்னியாகுமரி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்து கிராமங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து கொண்டே போகிறது.  இது வெறும் எண்ணிக்கையின் வீழ்ச்சி மட்டுமல்ல. இது மனிதவள மேம்பாட்டின் வீழ்ச்சி. ஜனநாயகத் தன்மையின் வீழ்ச்சி. விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார வீழ்ச்சி. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் வீழ்ச்சி. இது மக்களுக்கும் மக்கள் பிரதிகளுக்குமான இடைவெளியை அதிகரித்து அதிகாரக்குவியலுக்கு வழிவகுக்கும் முயற்சி. 

எனவே, 

1. கிராம ஊராட்சிகளை வலுக்கட்டாயமாக நகர்ப்புற உள்ளாட்சிகளாக வகைமாற்றம் செய்வதையும், பிற நகர்ப்புற உள்ளாட்சிகளோடு இணைப்பதையும் தன்னாட்சி கண்டிக்கிறது. 

2. செயற்கையாக நகரங்களை அதிகப்படுத்துவதைத் தமிழ்நாடு அரசு முற்றிலுமாகத் தவிர்ப்பதோடு தொடர்புடைய கிராம ஊராட்சியின், அதன் கிராமசபையின் ஒப்புதலோடுதான் வகைமாற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது பிற நகர்ப்புற உள்ளாட்சிகளோடு இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது தன்னாட்சி. 

3. அரசு இது போன்ற முக்கிய நடவடிக்கைகள் குறித்து வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

Saturday 10 February 2024

திருக்குறள் ஐம்பெரும் விழா -2024, ஊடகச் செய்தி மற்றும் செய்தியாளர் சந்திப்பு

ஊடகச் செய்தி மற்றும் செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு நேரம் : பிற்பகல் 12:10 - 12:40

 

திருக்குறள் ஐம்பெரும் விழா -2024

 

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், வலைத்தமிழ்வள்ளுவர் குரல் குடும்பம், சர்வீஸ் டு சொசைட்டி, கற்க கசடற, அமைப்புகள் இணைந்து நடத்தும் திருக்குறள் ஐம்பெரும் விழா.

 

பிப்ரவரி 11 , ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலை 9:30  மணி முதல் மாலை 3 மணி வரை

 

இடம்: திருவள்ளுவர் அரங்கம், இந்தியன் ஆபிசர்ஸ் அசோசியேஷன் (IOA), இராயப்பேட்டை , அஜந்தா பஸ் நிறுத்தம்.

 

அமெரிக்கா, மியான்மர், டென்மார்க் உள்ளிட்ட பல நாட்டு திருக்குறள் ஆர்வலர்கள், ஆளுமைகள் கலந்து கொள்கிறார்கள்.

 

திருக்குறள் சார்ந்த ஐந்து நிகழ்வுகள்:

 

1.   திருக்குறள் வரலாற்றில் இதுவரை விடை தெரியாத கேள்வியாக , ஆய்வு, செய்ய முடியாத பன்னாடு சம்பந்தப்பட்ட, நூற்றாண்டு கால தலைப்பாக இருக்கும் "திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?               எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டும்? தேசிய நூலாகக்  கொண்டுவர என்ன செய்யவேண்டும்? யுனெசுகோ அங்கீகாரம் பெற என்ன செய்யவேண்டும் ? அரசுகள் என்ன செய்யவேண்டும்? அமைப்புகள்  என்ன செய்யவேண்டும்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு நாளை காலை 11 மணிக்கு இந்த நூல் விடைசொல்லும்.. ஐந்து ஆண்டு கால ஆய்வில் தொகுத்த விவரங்களை ஆய்வறிக்கை நூலாக வெளிவரும் "Thirukkural Translations in World Languages" நூல் வெளியீடு.

 

வெளியிடுபவர்: மாண்புமிகு நீதியரசர் அரங்க மகாதேவன்

பெறுபவர்கள்: முனைவர் ஔவை . அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை,

முனைவர். சி.சுப்பிரமணியம், மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

கலைமாமணி டாக்டர் .வி.ஜி.சந்தோசம் , வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கம்

 

2.   "நவில்தொறும் நூல்நயம்" பொன்விழா வாரம்

தலைமையுரை: பேராசிரியர் சுந்தரமூர்த்தி, துணைத்தலைவர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

 

சிறப்புரை: சுப மாணிக்கனார் "வள்ளுவம்" நூல் குறித்து இலக்கிய மாமணி பேராசிரியர்  அரங்க இராமலிங்கம் நயவுரை.

 

3.   தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு திருக்குறள் நூல் மூன்றாம் பதிப்பு வெளியீடு - உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை,சிகாகோ அமெரிக்கா , *

 

 நூல் அறிமுகம்: பேராசிரியர் சுந்தரமூர்த்தி, துணைத்தலைவர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

 

ஒருங்கிணைப்பாளர்கள்: அரசு பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் 80000 திருக்குறள் நூல்கள் வழங்கும் உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, சிகாகோ , அமெரிக்கா

 

4.   உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் - இரண்டாம் ஆண்டு விழா

தமிழ்நாடு, புதுவையின் திருக்குறள் முற்றோதல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்சியாளர்கள், புரவலர்கள், ஆர்வலர்கள், அமைப்புகள் , ஆளுமைகள்.

 

"குறள் வழி" பிப்ரவரி மாத இதழ் இதழ் வெளியீடு

 

மருத்துவர். சுந்தரேசன் சம்மந்தம், இயக்குநர், தமிழிருக்கை குழுமம், அமெரிக்கா

 

மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 2000 நூல்கள், ஆண்டுக்கு 80000 நூல்கள், ஐந்து ஆண்டுகளுக்கு 4 லட்சம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு  நூல்கள் வழங்கும் திட்டம்: விளக்கவுரை

 

மருத்துவர், விஜய் ஜானகிராமன், உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம்,

தமிழிருக்கை குழுமம், அமெரிக்கா

 

5.   உலக அளவில் புதிதாக வெளிவந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் அறிமுகம்

  புதிய மொழிபெயர்ப்புகள் அறிமுகம் , நூல்களைக் கையளித்தல்:


·         திரு.கஜேந்திரன் நாகலிங்கம், டென்மார்க், டேனிஷ் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்

·         திரு.கணஇளங்கோவன்பொதுச் செயலாளர், தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம். மியன்மார். 

 

இரு திருக்குறள் சார்ந்த கண்காட்சிகள் அரங்கில் இடம்பெறும்

திருக்குறள் அதிகாரங்கள் - கண்காட்சி

உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் - நூல்கள் கண்காட்சி

 

தொடர்புக்கு:

.சுரேஷ், 9884411637

மின்னஞ்சல் : thirukkural@valaitamil.com


Virus-free.www.avast.com