Monday 1 November 2021

முல்லை பெரியாறு அணை- தமிழ்நாட்டின் மாநில உரிமையை காவு கொடுத்துவிட்டது திமுக. நடந்த தவறுக்கு பொறுப்பேற்று, நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் பதவி விலக வேண்டும்.

சட்ட பஞ்சாயத்து இயக்கம்


பத்திரிகை செய்தி (1-10-2021)

தொடர்புக்கு : 88704-72174



முல்லை பெரியாறு அணை- தமிழ்நாட்டின் மாநில உரிமையை காவு கொடுத்துவிட்டது திமுக. நடந்த தவறுக்கு பொறுப்பேற்று, நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் பதவி விலக வேண்டும். 



இன்று நவம்பர் -1 , தமிழ்நாடு எல்லை வரையறுக்கப்பட்ட நாள். பின்னாளில் பல போராட்டங்களுக்கு பிறகு, கன்னியாகுமரி பகுதி எல்லை கூடுதலாக பெறப்பட்டு இன்றும் அந்த மாவட்ட மக்களால் கன்னியாகுமரி உருவான தினம் கொண்டாடப்பட்டு  வருகிறது. இந்த முக்கியமான நாளில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முல்லை பெரியாறு அணையில்  142 அடி மட்டத்திற்கு நீர் தேக்கும் உரிமையை தி மு க அரசாங்கம் காவு கொடுத்து இருக்கிறது. பல நாள் சட்ட போராட்டத்திற்கு பின்பு தான் 142  அடி வரை தண்ணீர் தேக்கும் உரிமை நமக்கு கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, அணையை சுற்றி உள்ள சிற்றன்னையை சரி செய்ய விடாமல் கேரளா அரசாங்கம் தடங்கல்களை உருவாக்கி வருகிறது. அதனால், முல்லை பெரியாறு அணையின் முழு கொள்ளளவை எட்ட முடியாமல் தமிழகம் தவித்து வருகிறது.  நிலைமை இவ்வாறு இருக்க, தமிழ்நாட்டின் அணையை கேரளா மந்திரிகள் ஒரு வாரம் ஆய்வு செய்து, தமிழ்நாடு அணை பொறியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து 137  அடி இருந்தபோதே தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இது தவிர, அணையின் உறுதித்தன்மையை பற்றி கேரள நடிகர்கள் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அனைத்தையும் அமைதியாக இந்த அரசாங்கம் பார்த்து வருகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு, முழுப்பூசணிக்காக்கையை சோற்றில் மறைத்து நீர்வளத்துறை அமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவருக்கு சில கேள்விகள் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேக்க விரும்புகிறோம்.

தனி நபர் வழக்கு காரணமாக  142  அடி நீர் அணையில் சேமிக்க கொண்டு வர முடியாது என்றால், திமுக உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தாமல் தோற்று போய் விட்டதா? சரி, அவ்வாறு ஆயினும் மாதந்தோறும்  நிர்ணயிக்கப்பட்ட அளவை விட,137  அடியிலேயே தண்ணீர் திறந்து விட காரணம் என்ன? கேரள மந்திரிகள் ஆய்வு செய்வதை எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? அணையின் நீர் திறப்புக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் ஏன்  இன்னும் பார்வை இட வர வில்லை? ஏன் என்ற  கேள்வி எழுகிறது. இவ்வளவு நடந்த பின்னரும் தலைமை பொறியாளரை மட்டும் ஆய்வு செய்ய அனுப்பி வைக்கிறது. ஏற்கனவே, கர்நாடக அரசாங்கம் மார்க்கண்டேய நதியை  ஒட்டி முழு அணையை கட்டி விட்டது. அதற்கு ஆரம்பிக்கப்பட வேண்டிய சட்ட போராட்டம் என்ன ஆனது ? மேலும், மேடையில் பேசுவதை கேட்டு அவதூறு  வழக்கு தொடர்வதில் மும்மரமாக உள்ள இந்த அரசாங்கம், பொய் பிரச்சாரம் செய்யும் கேரள நடிகர்கள் மேல் வழக்கு தொடரலாமே? இதை விட கொடுமை கேரள நீர்வளத்துறை அமைச்சர் இன்னும் மதகு திறக்க கேட்டுள்ளோம் என பத்திரிக்கை செய்தி வெளி வருகிறது. அடுத்த நாள், ஞாயிறு(அக்டோபர் 31 ,2021 ) அன்று அவர் சொன்னபடியே மதகு திறக்கப்படுகிறது. அதற்கான அவசியம் என்ன? என பல கேள்விகள் எழுகிறது. தமிழ்நாட்டில் நடப்பது திமுக அரசாங்கமா ? அல்லது கேரள அரசாங்கமா என்பதை முதல்வர் தெரிவுபடுத்த வேண்டும். வாழ்வாதார பிரச்சனையில், பொறுப்பற்ற முறையில் பூசி முழுகும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களை மாற்றி வேறு ஒரு நல்ல அமைச்சரை நியமிக்க வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டு கொள்கிறது. 


மணிவாசகம்

துணை தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

தொடர்பு எண்: 88704-72174




செய்தி தொடர்பாளர்கள்:

ரங்க பிரசாத் - 99441 88941
ஜெயந்தி - 99521 82452

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Friday 25 June 2021

SPI PR - விகடன் இணையத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை பற்றி வந்த செய்தி தொடர்பான மறுப்பு செய்தி.


சட்ட பஞ்சாயத்து இயக்கம்


பத்திரிகை செய்தி (26-06-2021)

தொடர்புக்கு : 88704-72174



விகடன் இணையத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை பற்றி வந்த செய்தி தொடர்பான மறுப்பு செய்தி.



ஊடக நண்பர்களுக்கு வணக்கம், 


சட்ட பஞ்சாயத்து இயக்கம் 2013  ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்  தொடங்கி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுக்கும் மேலாக 6000  க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், 40 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளையும் கொண்டு இயங்கி வருகிறது. முதலில் மது விலக்கு, ஊழலை ஒழித்தல் என இரு பணிகளை மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில். இன்று சட்டத்தின் ஆட்சி ! அனைவருக்கும்  வளர்ச்சி ! என்ற நோக்கத்துடன் நல்லாட்சி அமைய இயக்கத்தால் செய்ய முடிந்த அனைத்து மக்கள் நல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.. இயக்கத்தின் தலைவராக சிவ. இளங்கோ அவர்களும், பொது செயலாளராக செந்தில் ஆறுமுகம் அவர்களும் பணியாற்றி வந்தது நீங்கள் அறிந்ததே. அவர்கள் இருவரும் தற்போது இயக்க பணியில் கடந்த மார்ச் மாதம், 2021ஆம் ஆண்டு முதல் தங்களை விடுவித்து கொண்டு மக்கள் நீதி மையத்தில்  இணைந்து அரசியல் பணிகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். அதன்படி, முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை குழு அவர்களின் பணிகளை எடுத்து செய்யும் என கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் நடைபெற்ற இயக்கத்தின் ஆண்டு விழாவில் முடிவெடுக்கப்பட்டு அதன்படி செயல்பட்டு வருகிறோம்.. மேலும் இயக்கத்தை கட்சியாக மாற்றவோ வேறொரு கட்சியுடன் இணைக்கவோ எந்தஒரு முடிவும் இயக்கத்தால் என்றும் எடுக்கப்பட்டதில்லை. அதுமட்டுமின்றி சட்ட பஞ்சாயத்து இயக்கமானது  அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு, முறைப்படி 80G பெறப்பட்டு மக்கள் நன்கொடையில் இயங்கி வருகிறது. எனவே கொள்கை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும், இயக்கம் கட்சியாக மாற வாய்ப்பு இல்லை. இந்நிலையில், கீழே கொடுக்கப்பட்ட செய்தியில்,
https://www.vikatan.com/government-and-politics/politics/kamal-hasans-makkal-neethi-maiam-appointed-some-new-cadre


"மேலும் சட்டப்பஞ்யாத்து இயக்கம் உள்ளிட்ட சில இயக்கங்கள் மய்யத்தில் இணைக்கப்பட உள்ளது" என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகி கூறியதாக உள்ளது. இது குறித்து வந்த செய்தியில் உண்மை இல்லை என தெளிவுபடுத்த விரும்புகிறோம். அதே போல், திரு. செந்தில் ஆறுமுகம் மற்றும் திரு. சிவ இளங்கோ அவர்களின் புதிய அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம். தொடர்ந்து சட்ட பஞ்சாயத்து இயக்கமானது எந்தவொரு அரசியல் சார்புமின்றி மக்கள் பணிகளில் ஈடுபடும் இயக்கமாக இயங்கும் எனவும் அதற்கான ஆதரவை பொதுமக்களும் பத்திரிக்கை நண்பர்களும் அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

மணிவாசகம்

துணை தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

தொடர்பு எண்: 88704-72174


செய்தி தொடர்பாளர்கள்:
ரங்க பிரசாத் - 99441 88941
ஜெயந்தி - 99521 82452



Satta Panchayat Iyakkam

 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Saturday 19 June 2021

SPI PR | சட்டசபை கூட்டத்தில் சேவை உரிமைச் சட்டம், சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு போன்ற திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

சட்ட பஞ்சாயத்து இயக்கம்


பத்திரிகை செய்த (20-06-2021)

தொடர்புக்கு : 88704-72174


சேவை உரிமைச் சட்டம், சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு போன்ற திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

வணக்கம், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்று தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக-விற்கான முதல் சவாலாக கொரோனா பெருந்தொற்று அமைந்துள்ளது. கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளபோதிலும், தொற்று எண்ணிக்கையை பெருமளவில் குறைத்ததற்கு பாராட்டுக்கள். திமுக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை (21.06.2021) முதல் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் கொரோனா குறித்த விவாதம் பெருமளவில் இருக்கும். அதே நேரத்தில் சில முக்கிய பிரச்சனைகள் குறித்த அறிவிப்புகளை முதல்வரும் துறை சார்ந்த அமைச்சர்களும் வெளியிடுவார்களா, அதற்கான ஏற்பாடுகள் ஏதும் நடைபெற்று வருகிறதா என்பதில் தெளிவில்லை. பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படும் பிரச்சனைகள் பலவற்றை திமுக தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளது. அதில் மிக முக்கியமாக பின்வரும் பிரச்சனைகளின் மீது தமிழ்நாடு அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டுமென சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை வைக்கிறது. பின்வரும் பிரச்சனைகள் அனைத்தும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதால், கொள்கை அளவில் இவை அனைத்திற்கும் திமுக அரசு தயார் என்றே புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. எனவே, அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் வேறெந்த தடைகளும் அரசிற்கு இருப்பதாக தெரியவில்லை. 


  1. சேவை பெறும் உரிமை சட்டம் – ஏன் தேவை என்றது அதிமுக அரசு, தேவை தீர்க்குமா திமுக அரசு ?


பொதுமக்கள் அரசிடம் இருந்து பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர். சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் போன்ற பல சேவைகள் குறித்த நேரத்தில் கிடைக்க வேண்டிய சேவைகளாகும். இது போன்ற சேவைகளை பெறுவதற்காக விண்ணப்பிக்கும்போது பல நேரங்களில் கால தாமதமாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தாமதத்தை தடுப்பதற்கான ஓர் கருவியே "சேவை பெறும் உரிமை சட்டம்". தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென கடந்த எட்டு ஆண்டுகளாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. கடந்த அதிமுக அரசிடம் இது குறித்து பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  இயக்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

 அவ்வழக்கின் விசாரணையில் அப்போதைய தமிழக அரசு ஆஜராகி "சேவை பெறும் உரிமை சட்டத்தின் தேவை என்ன என்றும் ஏற்கனவே மக்கள் சாசனம் இயற்றி மக்களுக்கு தேவையான சேவைகளை நிறைவாக வழங்கி வருகிறோம்" எனக் கூறியது. இதை கேட்ட நீதிமன்றமும், சேவை பெறும் உரிமை சட்டம் தேவையான ஒரு சட்டம் என்றாலும் மாநில அரசின் கொள்கை முடிவு அந்தச் சட்டம் வேண்டாமென்பதாக உள்ளதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. 

மக்கள் சாசனத்தையும் சேவை பெறும் உரிமை சட்டத்தையும் ஒன்றாக பார்ப்பதே அபத்தம். ஏனென்றால், மக்கள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் சேவைகளை அளிக்காவிட்டால் அபராதம் விதிக்க எந்த விதிகளும் மக்கள் சாசனத்தில் இல்லை. ஆனால், சேவை பெறும் உரிமை சட்டத்தில், தாமதித்த அரசு ஊழியர் மீது புகார் அளித்து, தாமதத்திற்கான கட்டணத்தை அவரின் ஊதியத்திலிருந்தே பிடித்தம் செய்ய வழிவகை உள்ளது. ஆனால், இவற்றை எல்லாம் அறிந்தும் அறியாதது போல கொள்கை முடிவு என்ற குடையின் கீழ் நின்று மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் தடுக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் சேவை பெறும் உரிமை சட்டம் குறித்து பின்வருமாறு கூறுகிறது. 

"பொது மக்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதிச் சான்றிதழ், பிறப்பு இறப்புச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஓய்வூதியப் பலன்கள், பொது விநியோகத் திட்டப் பலன்கள் உள்ளிட்டவற்றை விண்ணப்பித்தபின் குறிப்பிட்ட நாட்களுக்குள் இவற்றைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் சேவை உரிமைச் சட்டம் (Right to Services Act) நிறைவேற்றப்படும்."

மேற்கண்ட வாக்குறுதி நிறைவேற்றப்படும் பட்சத்தில், மக்களுக்கான ஒரு பெருங்கருவியாக அச்சட்டம் இருக்குமென்பதில் எந்த ஐயமும் இல்லை.

  1. சட்டப்பேரவைக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு.

தமிழக சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கடந்த 8 ஆண்டுகளாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து கோரி வருகிறது.ஜனநாயகம் என்பது மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களுடைய அரசாங்கம். இதில் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது மிக அவசியம். மேலும், வாக்களித்த பொதுமக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளின் சட்டமன்ற செயல்பாடுகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள உரிமையும் உண்டு. பாராளுமன்றத்திலும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவில், சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஊடகங்களின் வாயிலாக ஒளிபரப்பப்படுகிறது. இது தொடர்பாக, சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு(WP14824/2012) தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.


உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நிகழ்வுகளும் இதேபோல ரகசியமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், உச்சநீதிமன்றம் தனது சமீபத்திய தீர்ப்பில் நீதிமன்றங்களில் நடைபெறுவதை மக்கள் அறிந்துகொள்ள உரிமை பெற்றுள்ளனர் என உத்தரவிட்டுள்ளது. அந்த தீர்ப்பின் விளைவாக நிறைய உயர்நீதிமன்றங்கள் தனது நிகழ்வுகளை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டு வருகின்றனர். குஜராத் உயர்நீதிமன்றம் தன்னுடைய நிகழ்வுகளை அனைவரும் பார்க்க வேண்டுமென்ற நோக்கில் Youtube தளத்தில் நேரலை செய்து வருகின்றது. மேலும், இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வரைவு விதிமுறைகள் உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்டு சார்ந்தோரின் கருத்துகளுக்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் சட்டப்பேரவைக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு குறித்து பின்வருமாறு கூறுகிறது.

"நாடாளுமன்றம் மற்றும் பல மாநில சட்டமன்றக் கூட்டங்களின் கூட்ட நிகழ்ச்சிகள் தொலைகாட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுவது போல் தமிழக சட்டப் பேரவை நிகழ்ச்சிகளும் தொலைகாட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்."

மேலும், சட்டமன்ற கூட்டத்தொடர் முதல் நாள் உரை நிகழ்த்தும் ஆளுநரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து அழைப்பு விடுத்து பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு அவர்கள், "சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அது பரிசீலனையில் உள்ளது. கட்டாயம் அது நிறைவேற்றப்படும்" என்று கூறியுள்ளார். அவ்வாறு நிறைவேற்றப்படும் பட்சத்தில், இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு தருவதோ;  தனியார் தொலைக்காட்சிகள் சட்டசபை நிகழ்வுகளை முழுமையாகப் படம்பிடிக்க அனுமதிப்பதோ, எதுவாக இருந்தாலும் அதுபோன்றதொரு நிகழ்வு இதுதான் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இருக்கும். அப்படிப்பட்டதொரு வரலாற்று சிறப்புமிக்க  முயற்சியை திமுக அரசு, மேலும் தாமதிக்காமல், முதல் சட்டமன்ற தொடரில் எடுக்கவேண்டும் என்று இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த 8 ஆண்டுகளாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் உதவி மைய எண்ணான 7667-100-100 செயல்பட்டு வருகிறது. இதில் அனைத்து மாவட்ட மக்களும் அரசு சேவைகள் குறித்தான சந்தேகங்களை கேட்டு தெளிவுப் பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலான அழைப்புகள் அரசு துறைகளால் தாமதமாக வழங்கப்படும் சேவைகள் குறித்தே உள்ளன. சட்ட பஞ்சாயத்து இயக்கம் முன்வைக்கும் மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றப்பட்டால், மக்கள் அன்றாடம் சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்பட வாய்ப்புள்ளதை இச்செய்தியின் மூலம் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறது.

மணிவாசகம்

துணை தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
தொடர்பு எண்: 88704-72174


Friday 14 May 2021

பத்திரிக்கை செய்தி (14/05/2021, 4PM )

பத்திரிக்கை செய்தி  (14/05/2021, 4PM ) 

38 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கடந்தகாலங்களில் தமிழ்நாட்டுக்கு வந்த பெருந்தொற்று நோய்களான, டெங்கு, சிக்குங்குனியா மற்றும் கோரோனாவின் முதல் அலையின்போது சித்தமருத்துவம் பெரும்பங்கு வகித்தது நாம் அனைவரும் அறிந்ததே. . இதன் அடிப்படையில், கோரோனா இராண்டாம் தொற்றின்போதும், சித்தமருத்துவம் மக்களுக்கு பயன்படவேண்டும் என்ற அடிப்படையில் அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.


வலைத்தமிழ் ஒருங்கிணைப்பில் சித்தமருத்துவர்கள் இணைந்து, "மக்களைக் காக்கும் சித்தமருத்துவம்" என்ற தொடர் நிகழ்ச்சியை கடந்த ஓராண்டாக நடத்திவருகிறார்கள். அதில், பிரபல சித்தமருத்துவ ஆளுமைகளை அழைத்து, எப்படி சித்தமருத்துவத்தை மக்கள் பயன்பாட்டுக்கு  மேலும் எடுத்துச் செல்வது என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது.


இத்தொடரில் 24-வது  நிகழ்வாக தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் இக்கட்டான கொரோனா சூழலை கருத்தில் கொண்டு   மாவட்ட அளவில் உள்ள சித்த மருத்துவர்கள் அந்தந்த மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்துடன் கைகோர்த்து தன்னார்வலர்களாக, காணொளி வழியாக (Tele Medicine )  ஆயுஷ் அமைச்சகமும், தமிழ்நாடு அரசும் வகுத்துள்ள வழிகாட்டலின்படி ஆரம்பகட்ட நிலையில் உள்ள மக்களுக்கு உதவ நம்முன் உள்ள வாய்ப்புகளைக் குறித்து கலந்துரையாட வரும்படி தனியார் சித்தமருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  அதில் இதுவரை 185 மருத்துவர்கள் பதிவுசெய்திருந்தார்கள்


இந்நிலையில்,  நேற்று 13 மே 2021 ல் இரவு 9 மணிக்கு , அனைவரையும் அழைத்து ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 38 மாவட்டங்களிலிருந்து பதிவுசெய்த  சித்தமருத்துவர்கள் கலந்துகொண்டு, இன்று நாம் சந்திக்கும் சவால்கள், அவர்களின் கள அனுபவங்கள்,  இதற்கு நாம் எப்படி அரசுடன் கைகோர்த்து மக்களைக் காக்கும் பணியில் துணைநிற்பது என்று விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், மருத்துவர்கள் தன்னார்வலர்களாக இணைந்து கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க அரசுக்கு ஒத்துழைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டெலிமெடிசின் என்று சொல்லப்படும் முறையில் அனைத்து சித்த மருத்துவர்களும், அவரவர் வீடு அல்லது மருத்துவமனையில் இருந்தவாறே மக்களுக்கு பணி செய்யும் உத்தியை செய்ய முன்வந்துள்ளனர். கொரோனா குறித்த சந்தேகங்கள், வருமுன் காப்பது, குறிகுணம் இல்லாத கோவிட், குறைந்த குறிகுணம் உடைய கோவிட், மிதமான குறிகுணம் உள்ள கோவிட், கோவிட் குணமான பின் மருத்துவ முறை, வீட்டில் இருந்தே ஹோம் குவாரன்டைன் முறையில் நோயாளி தன்னை பராமரிப்பது, எந்த நிலையில் மருத்துவமனை செல்வது, உணவுப்  பழக்கம், என அனைத்தையும் அரசின் வழிகாட்டுதல்களின் பேரில் மக்களுக்கு தொலைபேசி/வீடியோ வழியாக தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள மக்களுக்கு பயன்படும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், மருத்துவ மனைகளில் குவியும் கூட்டத்தை ஒழுங்கு படுத்த முடியும். தேவையான நோயாளிகள் மட்டுமே மருத்துவமனை செல்லும் போது, மருத்துவ பணியாளர்களுக்கும் பணிச்சுமை குறையும். தேவையான நோயாளிகளிக்கு படுக்கையும் தயாராக இருக்கும். இத்திட்டம், தமிழக அரசுக்கு பக்க பலமாக இருக்கும் என்று முடிவுசெய்யப்பட்டது.

தேசீய சித்த மருத்துவ இயக்குநர்  டாக்டர்.மீனாகுமாரி அவர்கள் இந்த தன்னார்வக்குழுவின் முயற்சியைப் பாராட்டி, இது அவசியமான சேவை என்று குறிப்பிட்டு இதற்கு பக்கபலமாக இருப்பதாக  உறுதியளித்தார்.  இக்கூட்டத்தில் பேசிய இயக்குநர்  அவர்கள் , இந்த டெலிமெடிசின் திட்டத்தில்  ஈடுபடும் சித்த மருத்துவர்களுக்கு உரிய பயிற்சிறையும், அரசின் வழிகாட்டுதல்களையும் தனது குழு வழங்கும் என்று தெரிவித்தார். தேசீய சித்த மருத்துவ நிறுவன பேராசிரியர் டாக்டர்.கிறிஸ்டியன் பேசுகையில்  ஒருங்கிணைந்த மருத்துவ முறையில் நவீன மருத்துவத்துடன் சித்த மருந்துகளையும் இணைத்து செய்யும் போது, வேகமாக முன்னேற்றம் கிடைக்கிறது என்றும், இறப்பு விகிதம் வெகுவாக குறைகிறது என்றும் தெரிவித்தார். மணிப்பால் பல்கலைகழகத்தின்  சித்த மருத்துவப்  பிரிவின் ஆராய்ச்சியாளர் டாக்டர். அருள் அமுதன் அவர்கள், இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் என்று விவரித்தார். மாவட்டம் தோறும் 20 சித்த மருத்துவர்கள் தன்னார்வலர்களாக செயல்பட்டால், ஒருவர் தினமும் 10 நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கினால், தினமும் 200 நோயாளிள் வீதம், ஒரு மாதத்தில் 6000 நோயாளிகள் ஒரு மாவட்டத்தில் பயன்பெறுவர். இப்படி 38 மாவட்டங்களிலும் சேர்த்து வெகுவாக பயன்பெறுவர் என்று குறிப்பிட்டார். நோயாளிகளை நோய் தீரும்வரை தொடர்ந்து கண்காணித்து வருதல் மற்றும் அவர்களின் தகவல்கள் ஆராய்ச்சிக்காக அரசிடம்  ஒப்படைத்தல் என இந்த திட்டத்தை ஆராய்ச்சிப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

வேலுமயில் சித்தா மருத்துவகல்லூரி பேராசிரியர் டாக்டர்.செந்தில் குமார் அவர்கள், அனைத்து மக்களுக்கும் தேவையான சித்தா மருந்துகள் மற்றும் மூலிகை பொருட்கள் கிடைக்கவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார். சாய்ராம் சித்தா மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர்.அனிதா அவர்கள்,  MBBS படித்த சித்த மருத்துவர்கள் மற்றும் சித்தமருத்துவம் மீது நம்பிக்கை உள்ள நவீன மருத்துவர்களையும் இணைத்து ஒருங்கிணைந்த சிகிட்சை முறைக்கான அடித்தளத்தை இந்த திட்டத்திலேயே செயல்படுத்தும் சாத்திய கூறுகளை தெரிவித்தார்.

சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர். கீதசுதீர் அவர்கள் இரண்டாம் கோவிட் அலையில், முதல் அலையை விடவும் வீரியம் மிகுந்த சித்த மருந்துகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவரின் அனுபவந்த்தையும் பகிர்ந்தார். ஆட்டிசம் சிறப்பு மருத்துவரும் சுவாபிமான் நிறுவனருமான டாக்டர் பார்த்தீபன் அவர்கள், நவீன நோய்கணிப்பு முறைகளின் அடிப்படையில் சித்த மருந்துகளை பரிகரிக்கவும், துணை நோய்களை உடையவர்களுக்கு சிறப்பு சித்தா சிகிட்சைகளை செய்யவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யுமாறும் வலியுறுத்தினார்.  மருத்துவர் கார்த்திகேயன் இக்குழுவுடன் ஆங்கில மருத்துவர்களையும் இணைத்து செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்.  மருத்துவர்.சிவஞானம் இன்றிய ஆக்சிஜன் குறித்தான தேவையை குறிப்பிட்டு பேசினார்.

ஆயுஷ்பதி சங்கத்தின் தலைவர் டாக்டர்.அலெக்ஸ், இந்த திட்டத்தினை வெற்றிகரமாக செய்ய அனைத்து சித்த மருத்துவர்களும் இணைந்து மாவட்ட அளவில் அரசுடன் கைகோர்த்து செயல்படுவதன் அவசியத்தையும், இந்த திட்டத்தின் மூலம் மக்கள அடையபோகும் நன்மையை முன்னிறுத்தி செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.

இந்த திட்டத்தில், மருந்துகள் குழு, தன்னார்வ அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு ,  அரசின் புதிய வழிகாட்டுதல்கள் குழு, மருத்துவர்களின் பயிற்சி குழு, திட்ட ஒருங்கிணைப்பு குழு, ஒருங்கிணைந்த மருத்துவர் குழு, அவசர மருத்துவர்கள் குழு, இணைய குழு,  என பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். அனைத்து குழுவும் அரசின் வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த பணியை செய்து முடிப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப் பட்டது,

மேலும் அனைத்து சித்த மருத்துவர்களின் பல்வேறு கருத்துக்களும் பகிரப்பட்டு, குறிப்பு எடுக்கப்பட்டது. விரைவில் இந்த குழு தன் பணியை செவ்வனே தொடங்கி, தமிழகத்தில் கோரோனாவை ஒழிக்க அரசுடன் இணைந்து செயல்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. தமிழக அரசின் கோரோனா வாடிக்கையாளர் சேவை  எண்ணான 104 உடன் இந்த திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் ஆர்வமுள்ள அனைவரது விவரங்களுடன் அரசுக்கு தெரிவித்து உரிய வழிகாட்டலைப் பெற்று இதை உடன் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிமேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. மாவட்ட அளவில் சித்த மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு, மருத்துவர்களுக்கான பயிற்சி , ஒருங்கிணைந்த  இணையதளம், வாட்ஸப்  உதவி எண் , மாவட்ட அளவில் இதில் இணைந்து கைகொடுக்க விரும்பும் தன்னார்வ அமைப்புகளை  அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல கோணங்களில் தன்னார்வக் குழுவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.


தொடர்புக்கு :

மக்களைக்காக்கும் சித்த மருத்துவக்குழு,

மருத்துவர். அருள் அமுதன், MD (சித்தா), M.Sc(Medical Pharmacology), P.hd.

மருத்துவர். செந்தில்குமார், MD (சித்தா)

மருத்துவர். அனிதா, MD (சித்தா), PGDY


Wednesday 10 March 2021

Social activist Senthil Arumugam, Siva Elango contesting from Pallavaram, Tambaram on behalf of MNM

வணக்கம்,

மக்கள் நீதி மய்யம் சார்பாக நான் பல்லாவரம் தொகுதியிலும், சிவ இளங்கோ தாம்பரம் தொகுதியிலும் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ளோம். சமூக ஆர்வலர்களை ஆரத்தழுவி வரவேற்று, தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ள மய்யத்தின் தலைவர் திரு.கமலஹாசன் அவர்களுக்கும், மய்யத்தின் நிர்வாகிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மக்களிடம் தேர்தல் நிதி வசூலித்து, எவ்வித முறைகேடுகளையும் செய்யாமல், நேர்மையாக தேர்தலை சந்திக்க இருக்கிறோம். எங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இத்துடன் எங்களை பற்றிய முழு தகவல்களையும் இணைத்துள்ளோம்.

அன்புடன்
செந்தில் ஆறுமுகம் மற்றும் சிவ இளங்கோ
தொடர்பு எண் : 87545 80274 | 87545 80270


We have been announced as candidates for Tamilnadu elections 2021 on behalf of the Makkal Neethi Maiyam - myself, Senthil Arumugam in Pallavaram constituency and Siva Elango in Tambaram constituency. We extend our heartfelt thanks to Dr. Kamal Hassan, Chairman, mnm and to the MNM Administrators for welcoming social activists and giving them the opportunity to contest the elections.

We are going to face the election honestly, collecting election funds only from the people, strictly being non-compliant towards committing any fraudulent or dishonest activities. Kindly consider this as a humble request to help us reach the people of Tamilnadu.

We have attached the complete information about us herewith.

Yours sincerely,
Senthil Arumugam & Siva Elango
87545 80274 | 87545 80270



"சமூகப்  போராளி" 

செந்தில் ஆறுமுகம் (43), MCA





  • தமிழகத்தில் "நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சிமலரவேண்டும் என்ற இலட்சியத்திற்காக கடந்த 20 ஆண்டுகளாக உழைத்துவருபவர்.

 

  • சமூக ஆர்வலர்எழுத்தாளர்பேச்சாளர்களப்போராளி மற்றும் தகவல் பெறும் உரிமைச்சட்ட வல்லுநர்.

 

  • MCA பட்டதாரிதகவல்தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்தார்பல லட்சங்களை சம்பளமாக வாங்கிவந்த செந்தில் ஆறுமுகம்தனது இலட்சியத்திற்காக 2005ல்தன் அமெரிக்க பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர சமூக ஆர்வலராக மக்கள் பணியாற்றத் துவங்கினார்.

 

  • "வீட்டுக்கு ஒருவர்நாட்டுக்கு ஒருவர்" என்று தனது மனைவியும் இவரும் எழுதப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டனர்பணிக்கு சென்று வீட்டை மனைவி கவனித்து வருகிறார்சமூக - அரசியல் மாற்றத்திற்காக செந்தில் ஆறுமுகம் உழைத்து வருகிறார்.

 

  • மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனரும்சிந்தனை சிற்பியுமான டாக்டர்எம்எஸ்உதயமூர்த்தியிடம் அரசியல் பயின்றுஅவரின் உயரிய கொள்கைகளின் வழி நடப்பவர் செந்தில் ஆறுமுகம்.

 

  • சிந்தனை சிற்பிகள் இயக்கம்மக்கள் சக்தி கட்சி என்று பல்வேறு அமைப்புகளின் மூலம் சமூக - அரசியல் மாற்றத்திற்காக உழைத்தவர்

 

  • 2013ல் சட்ட பஞ்சாயத்து இயக்கம் எனும் மக்கள் இயக்கத்தை நிறுவியவர். சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மூலம் இலஞ்ச-ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள்சட்ட விழிப்புணர்வுஉள்ளாட்சிகளை வலுப்படுத்துதல்மதுத்திணிப்புக்கு எதிராகக் குரல்கொடுத்தல் போன்ற பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவர்.

 

  • சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த இவர்இயக்கத்தின் தொலைபேசி சேவை மையத்தின் வழியாக 2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பிரச்னைகளுக்கு வழிகாட்டப்படுவதற்கு பின்புலமாக இருந்தவர்.

 

  • வேளச்சேரி-கடற்கரை உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் கழிப்பறை,குடிநீர்,பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் செய்துதரக்கோருவது, VAO தாங்கள் பணி செய்யும் இடத்திலே தங்க கோருதல்சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய கோருதல் உள்ளிட்ட பல பொதுநல வழக்குகளைத் தொடுத்து உயர்நீதிமன்றத்தில் வாதிட்டவர். சசிகலா பதவி ஏற்பதை தடுக்க இரவோடு இரவாக உச்சநீதிமன்றம் சென்று பொதுநல வழக்கு தொடுத்து தடுக்க முயன்றவர்.

 

  • தூங்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்ப"சங்கூதும் போராட்டம்", "பாய் விரித்து தூங்கும் போராட்டம்" என்று பல வித்தியசமான போராட்டங்களை நடத்தியவர்ஆட்சியாளர்கள் மது ஆலை நடத்துவதை எதிர்த்துசாராயத்தை கீழே ஊற்றிபோயஸ் கார்டன்  முன்பு போராட்டம் நடத்தி

 

  • முட்டை ஊழல் உட்படதிமுக - அதிமுக - பாஜக - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பல ஊழல்கள்டெண்டர் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயல்களை வெளிக்கொண்டுவந்துள்ளார்.

 

  • தமிழகத்தில் கிராம சபையை மக்களிடையே பிரபலபடுத்தியதில் இவரின் பங்கு மிக முக்கியமானதுமக்கள் நீதி மய்யத்திற்கு கிராம சபை சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

 

  • 1000+ தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தள நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார்தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று மக்களின் குரலாக ஊடகங்களில் ஒலித்து வருபவர்.

 

  • சமூக,அரசியல் பிரச்னைகளுக்காக பத்திரிகைகள்முகநூலில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியுள்ளார்"என்றும் வற்றாத காவிரி அரசியல்" , "ஸ்டெர்லைட் மூடப்பட்டது ஏன்?" போன்ற புத்தங்கங்களையும் எழுதியுள்ளார்.

 

  • பள்ளி,கல்லூரிகளில் பல்வேறு சமூக விழிப்புணர்வு வகுப்புகள்சட்டப் பயிற்சிகள் கொடுத்துள்ளார்.

 

  • சிறந்த சமூக சேவைக்காக விகடன் விருதுகலாம் விருதுசமூக நட்சத்திரம் விருது,  "துருவாவிருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

 

  • மக்களிடம் இருந்து பெறும் நன்கொடையை மட்டுமே வைத்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார்இயக்கம் ஆரம்பித்த பொழுதில் இருந்து தற்போது வரைதொடர்ந்து 87 மாதங்களாகஇயக்கத்தின் வரவு செலவு கணக்குகளை பொது தளத்தில் வெளிப்படையாக தாக்கல் செய்து வருகின்றது.

 

  • இப்பொழுது மக்களிடம் இருந்து மட்டும் பணம் பெற்று"ஒரு_ரூபாய்_கூட செலவழிக்காமல்" (#Zero_Budget_Campaign) மக்களை நம்பி தேர்தலில் நிற்க இருக்கிறார்.

 

  • அரசியலை வருமானத்திற்கான வழியாகப் பார்க்காமல்சமூக மாற்றத்திற்கான வழியாகப் பார்க்கும் நேர்மறை சிந்தனை கொண்டவர்.

 

  • வளர்ச்சி அரசியல்-நேர்மை அரசியலை முன்வைத்து தொடர்ந்து களப்பணியாற்றினால் தேர்தல் அரசியலில் மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்ற அசராத நம்பிக்கை கொண்டவர்.!!

 

           செந்தில் ஆறுமுகம் 

           தொடர்பு எண்: 87545 80274 | 87545 80270