Wednesday 10 March 2021

Social activist Senthil Arumugam, Siva Elango contesting from Pallavaram, Tambaram on behalf of MNM

வணக்கம்,

மக்கள் நீதி மய்யம் சார்பாக நான் பல்லாவரம் தொகுதியிலும், சிவ இளங்கோ தாம்பரம் தொகுதியிலும் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ளோம். சமூக ஆர்வலர்களை ஆரத்தழுவி வரவேற்று, தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ள மய்யத்தின் தலைவர் திரு.கமலஹாசன் அவர்களுக்கும், மய்யத்தின் நிர்வாகிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மக்களிடம் தேர்தல் நிதி வசூலித்து, எவ்வித முறைகேடுகளையும் செய்யாமல், நேர்மையாக தேர்தலை சந்திக்க இருக்கிறோம். எங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இத்துடன் எங்களை பற்றிய முழு தகவல்களையும் இணைத்துள்ளோம்.

அன்புடன்
செந்தில் ஆறுமுகம் மற்றும் சிவ இளங்கோ
தொடர்பு எண் : 87545 80274 | 87545 80270


We have been announced as candidates for Tamilnadu elections 2021 on behalf of the Makkal Neethi Maiyam - myself, Senthil Arumugam in Pallavaram constituency and Siva Elango in Tambaram constituency. We extend our heartfelt thanks to Dr. Kamal Hassan, Chairman, mnm and to the MNM Administrators for welcoming social activists and giving them the opportunity to contest the elections.

We are going to face the election honestly, collecting election funds only from the people, strictly being non-compliant towards committing any fraudulent or dishonest activities. Kindly consider this as a humble request to help us reach the people of Tamilnadu.

We have attached the complete information about us herewith.

Yours sincerely,
Senthil Arumugam & Siva Elango
87545 80274 | 87545 80270



"சமூகப்  போராளி" 

செந்தில் ஆறுமுகம் (43), MCA





  • தமிழகத்தில் "நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சிமலரவேண்டும் என்ற இலட்சியத்திற்காக கடந்த 20 ஆண்டுகளாக உழைத்துவருபவர்.

 

  • சமூக ஆர்வலர்எழுத்தாளர்பேச்சாளர்களப்போராளி மற்றும் தகவல் பெறும் உரிமைச்சட்ட வல்லுநர்.

 

  • MCA பட்டதாரிதகவல்தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்தார்பல லட்சங்களை சம்பளமாக வாங்கிவந்த செந்தில் ஆறுமுகம்தனது இலட்சியத்திற்காக 2005ல்தன் அமெரிக்க பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர சமூக ஆர்வலராக மக்கள் பணியாற்றத் துவங்கினார்.

 

  • "வீட்டுக்கு ஒருவர்நாட்டுக்கு ஒருவர்" என்று தனது மனைவியும் இவரும் எழுதப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டனர்பணிக்கு சென்று வீட்டை மனைவி கவனித்து வருகிறார்சமூக - அரசியல் மாற்றத்திற்காக செந்தில் ஆறுமுகம் உழைத்து வருகிறார்.

 

  • மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனரும்சிந்தனை சிற்பியுமான டாக்டர்எம்எஸ்உதயமூர்த்தியிடம் அரசியல் பயின்றுஅவரின் உயரிய கொள்கைகளின் வழி நடப்பவர் செந்தில் ஆறுமுகம்.

 

  • சிந்தனை சிற்பிகள் இயக்கம்மக்கள் சக்தி கட்சி என்று பல்வேறு அமைப்புகளின் மூலம் சமூக - அரசியல் மாற்றத்திற்காக உழைத்தவர்

 

  • 2013ல் சட்ட பஞ்சாயத்து இயக்கம் எனும் மக்கள் இயக்கத்தை நிறுவியவர். சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மூலம் இலஞ்ச-ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள்சட்ட விழிப்புணர்வுஉள்ளாட்சிகளை வலுப்படுத்துதல்மதுத்திணிப்புக்கு எதிராகக் குரல்கொடுத்தல் போன்ற பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவர்.

 

  • சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த இவர்இயக்கத்தின் தொலைபேசி சேவை மையத்தின் வழியாக 2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பிரச்னைகளுக்கு வழிகாட்டப்படுவதற்கு பின்புலமாக இருந்தவர்.

 

  • வேளச்சேரி-கடற்கரை உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் கழிப்பறை,குடிநீர்,பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் செய்துதரக்கோருவது, VAO தாங்கள் பணி செய்யும் இடத்திலே தங்க கோருதல்சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய கோருதல் உள்ளிட்ட பல பொதுநல வழக்குகளைத் தொடுத்து உயர்நீதிமன்றத்தில் வாதிட்டவர். சசிகலா பதவி ஏற்பதை தடுக்க இரவோடு இரவாக உச்சநீதிமன்றம் சென்று பொதுநல வழக்கு தொடுத்து தடுக்க முயன்றவர்.

 

  • தூங்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்ப"சங்கூதும் போராட்டம்", "பாய் விரித்து தூங்கும் போராட்டம்" என்று பல வித்தியசமான போராட்டங்களை நடத்தியவர்ஆட்சியாளர்கள் மது ஆலை நடத்துவதை எதிர்த்துசாராயத்தை கீழே ஊற்றிபோயஸ் கார்டன்  முன்பு போராட்டம் நடத்தி

 

  • முட்டை ஊழல் உட்படதிமுக - அதிமுக - பாஜக - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பல ஊழல்கள்டெண்டர் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயல்களை வெளிக்கொண்டுவந்துள்ளார்.

 

  • தமிழகத்தில் கிராம சபையை மக்களிடையே பிரபலபடுத்தியதில் இவரின் பங்கு மிக முக்கியமானதுமக்கள் நீதி மய்யத்திற்கு கிராம சபை சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

 

  • 1000+ தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தள நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார்தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று மக்களின் குரலாக ஊடகங்களில் ஒலித்து வருபவர்.

 

  • சமூக,அரசியல் பிரச்னைகளுக்காக பத்திரிகைகள்முகநூலில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியுள்ளார்"என்றும் வற்றாத காவிரி அரசியல்" , "ஸ்டெர்லைட் மூடப்பட்டது ஏன்?" போன்ற புத்தங்கங்களையும் எழுதியுள்ளார்.

 

  • பள்ளி,கல்லூரிகளில் பல்வேறு சமூக விழிப்புணர்வு வகுப்புகள்சட்டப் பயிற்சிகள் கொடுத்துள்ளார்.

 

  • சிறந்த சமூக சேவைக்காக விகடன் விருதுகலாம் விருதுசமூக நட்சத்திரம் விருது,  "துருவாவிருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

 

  • மக்களிடம் இருந்து பெறும் நன்கொடையை மட்டுமே வைத்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார்இயக்கம் ஆரம்பித்த பொழுதில் இருந்து தற்போது வரைதொடர்ந்து 87 மாதங்களாகஇயக்கத்தின் வரவு செலவு கணக்குகளை பொது தளத்தில் வெளிப்படையாக தாக்கல் செய்து வருகின்றது.

 

  • இப்பொழுது மக்களிடம் இருந்து மட்டும் பணம் பெற்று"ஒரு_ரூபாய்_கூட செலவழிக்காமல்" (#Zero_Budget_Campaign) மக்களை நம்பி தேர்தலில் நிற்க இருக்கிறார்.

 

  • அரசியலை வருமானத்திற்கான வழியாகப் பார்க்காமல்சமூக மாற்றத்திற்கான வழியாகப் பார்க்கும் நேர்மறை சிந்தனை கொண்டவர்.

 

  • வளர்ச்சி அரசியல்-நேர்மை அரசியலை முன்வைத்து தொடர்ந்து களப்பணியாற்றினால் தேர்தல் அரசியலில் மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்ற அசராத நம்பிக்கை கொண்டவர்.!!

 

           செந்தில் ஆறுமுகம் 

           தொடர்பு எண்: 87545 80274 | 87545 80270