Tuesday 20 September 2022

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதில் நேரடி பணபரிவார்த்தை தொகையை 2000 ரூபாயாக குறைப்பது மட்டும் முழுமையான வெளிப்படை தன்மை கொண்டுவர சாத்தியப்படுத்துமா?

சட்ட பஞ்சாயத்து இயக்கம்


பத்திரிகை செய்தி (20-09-2022)

தொடர்புக்கு : 96292-33892

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதில் நேரடி பணபரிவார்த்தை தொகையை  2000 ரூபாயாக குறைப்பது  முழுமையான வெளிப்படை தன்மை கொண்டுவர சாத்தியப்படுத்துமா? 






தேர்தல் ஆணையம் நேரடி பண பரிவர்த்தனை மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதை 20 ,000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய்க்கு குறைக்க மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. உண்மையில், இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதன்மூலம், 2000 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளிக்கும் நபர்கள் நேரிடையாக வங்கி வழியாகவும் கொடுக்க வாய்ப்பாக அமைவது மட்டுமல்லாமல், ஒரு கட்சியின் பண பரிவர்த்தனை மொத்த நிதியில் 20 சதவீதம் கீழோ அல்லது 20 கோடிக்கு மிகாமல் இருப்பதை வரையறை செய்கிறது. அதேநேரம், தேர்தல் பத்திரங்கள் பற்றி பேசாமல், கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதில் பணப்பரிவர்த்தனை  தொகையை குறைப்பது மட்டுமே  முழுமையான வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துகிறதா என்பது பற்றி தேர்தல் ஆணையம் சிந்திக்கவில்லை.


நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், கட்சிகளின் நிதி ஆதார தணிக்கை எளிதாக செய்ய உதவியாக இருக்கும் என்ற பட்சத்திலும் மற்றும் கருப்பு பணம் தேர்தலில் பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்படும் என நம்பிக்கையில் மத்திய சட்ட அமைச்சரான கிரண் ரிஜ்ஜு வுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால், தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாக கொடுத்ததை ரகசியம் காக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தத்தை மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு கொண்டு வந்ததை பற்றி தேர்தல் ஆணையம் ஏதும் கருத்து கூறாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது! வாங்குபவர் தன்னுடைய விவரத்தை வங்கிகளுக்கு தெரிவித்தாலும் தேர்தல் பத்திரங்களில் பெயரை குறிப்பிடாமல் இருக்கும் போது மக்களுக்கு பெரிய அளவில் அரசியல் கட்சிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லை; மேலும்  இந்த பத்திரங்கள் வழியாக கிடைக்கும் பணத்தின்  அதிக பட்ச அளவு நிர்ணயிக்கப்படவில்லை. ஆதலால், ஒரே நிறுவனம் அதிக பணம் கொடுப்பதற்கும் தடையையும் நீங்கி விட்டது. இவ்வாறாக, நிதி கிடைக்க பெரும்  அரசியல் கட்சிகள் நேர்மையான முறையில் ஆட்சி செய்யுமா ? அனைவருக்கும் ஒரே முறையில் ஆட்சி வழங்குமா அல்லது தனிநபர்களுக்கு ஆதரவாக இயங்குமா என்பது பற்றி பொதுவெளியில் தேர்தலுக்கு முன்பே தெரிய வாய்ப்பில்லை. இது, தேர்தலுக்கு பின் உருவாகும் ஆட்சியில் ஜனநாயகம் தழைத்தோங்குமா என்பது கேள்விக்குறி.  தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் லோகேஷ் பத்ரா தேர்தல் பத்திரங்கள் விற்பனை ஆய்வு செய்ததில் 10,000  கோடிக்கும் மேலாக பாரத ஸ்டேட் பேங்க் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 29 வங்கிகள் வாயிலாக பெறப்பட்டுள்ளது என தெரிய வருகிறது. ஆனால் இந்த பத்திரங்கள் கொடுத்தவர் பற்றிய பெயர் குறிப்பிட வேண்டியதில்லை என்னும் போது பண பரிவர்த்தனை மட்டும் குறைப்பது எவ்வாறு தீர்வாகும்? எனவே, தேர்தல் ஆணையம் முழுமையான  வெளிப்படை தன்மை இல்லாத தேர்தல் பத்திரத்தின் ஆபத்தை பற்றிய தன் முடிவை பற்றி சட்ட அமைச்சகத்துக்கு எடுத்து சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தேர்தல் பத்திரங்கள் வழக்கை விரைந்து முடிக்க வழிவகை செய்யும். முடிவில், நியாயமான முறையில் தேர்தல் நிதி ஆதாரங்கள் திரட்டப்படுவதுடன் செலவு செய்வதிலும் ஆடம்பரம் குறைய வாய்ப்பு வாய்ப்புள்ளது.  மேலும் தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுக்கும் வழிமுறையை தடுக்க மாற்று வழியை தற்காலத்திற்கு ஏற்றார் போல மாற்றியமைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து தேவையான திருத்தங்களை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்க கோரிக்கை வைக்கிறது. 


                                                                                                 

                                                                                          கி. மணிவாசகம்,
                                                                                  பொது செயலாளர்,
                                                                                  சட்ட பஞ்சாயத்து  இயக்கம் 

                                                                                   9629233892

ரங்கா பிரசாத் - 99441 88941 

ஜெயந்தி - 99521 82452 

ஊடக பிரிவு 

சட்ட பஞ்சாயத்து இயக்கம்,





நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269