Thursday 8 June 2023

தமிழ்நாடு உயிர்பல்வகைமை வாரியம் மக்கள் உயிர்பல்வகைமை பதிவேடு (PBR) தயாரிப்பைக் கண்காணிக்கத் தவறியதை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வெளிப்படுத்திய பிறகு, PBRஐ தயாரிப்பதற்கும் சரிபார்ப்பதற்கும் ஒரு வலுவான முறைமையை உருவாக்க இளைஞர் குழுக்கள் கோருகின்றன

பெறுநர்:
தமிழ்நாடு உயிர்பல்வகைமை வாரியம்,

W59G+RWW, TBGP வளாகம்,

இரண்டாம் தளம் வேளச்சேரி-தாம்பரம் பிரதான சாலை,

நன்மங்கலம்,
மேடவாக்கம்,
சென்னை – 600100.


பெறுநர்:
தேசிய உயிர்பல்வகைமை ஆணையம்,

5வது தளம், TICEL பயோ பார்க்,

சிஎஸ்ஐஆர் சாலை,

தரமணி,
சென்னை – 600113.


தேதி: 06 ஜூன் 2023

 

பொருள்: தமிழ்நாடு உயிர்பல்வகைமை வாரியம் மக்கள் உயிர்பல்வகைமை பதிவேடு (PBR) தயாரிப்பைக் கண்காணிக்கத் தவறியதை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வெளிப்படுத்திய பிறகு, PBRஐ தயாரிப்பதற்கும் சரிபார்ப்பதற்கும் ஒரு வலுவான முறைமையை உருவாக்க இளைஞர் குழுக்கள் கோருகின்றன.


மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,


தமிழ்நாடு உயிர்பல்வகைமை வாரியம் (TNBB) 03 மே 2023 அன்றுகல்லூரி மாணவர்களை மக்கள் உயிர்பல்வகைமை பதிவேட்டை (People Biodiversity Register) 20 நாட்களில் புதுப்பிக்க குறுகிய கால பயிற்சியாளர்களாக பணிபுரிய அழைப்பு விடுத்து விளம்பரம் செய்தது. கல்லூரி மாணவர்களின் ஈடுபாட்டை கோருவது வரவேற்கத்தக்க முயற்சியாக இருந்தாலும், TNBB இன் இந்த விளம்பரம் இன்னும் தயாரிக்கப்படாத இந்த பதிவேடுகளை (PBR) தயாரித்துவிட்டதாகவும் அதை புதுப்பிக்க மட்டுமே செய்ய வேண்டியுள்ளது என்ற வகையிலும் புரிந்து கொள்ளப்படும் விதமாக உள்ளது கவலை அளிக்கிறது.


ஆனால் 07 ஜனவரி 2023 "தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் தமிழ்நாட்டில் உயிர்பல்வகைமை மேலாண்மைக் குழுக்களின் நிலை" என்ற தலைப்பில் பொருளாதார மற்றும் அரசியல் வார இதழில் (EPW) வெளியான கட்டுரை (இணைக்கப்பட்டுள்ளது)உயிர்பல்வகைமை மேலாண்மை குழுக்களை (Biodiversity Management Committee) உருவாக்குவது மற்றும் PBR தயாரிப்பது தொடர்பான சட்ட நடைமுறைகளுக்கு பரவலான இணக்கமின்மை இருப்பதைக் கண்டறிந்துள்ளது. கட்டுரையில் வழங்கப்பட்ட RTI பதில்களின்படி, PBR எந்த BMCயிலும் தயாரிக்கப்படவில்லைஅதைத் தயாரிப்பதற்கான செயல்முறை கூட தொடங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறைகளின் கடிதங்களின் அடிப்படையில் - அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் BMC கள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற TNBB இன் கூற்றையும் கட்டுரையின் ஆசிரியர்கள் நிராகரிக்கின்றனர்.

 


சட்டத்தை நடைமுறைப்படுத்த TNBB எடுக்கும் முன் முயற்சிகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், PBRகளைத் தயாரிப்பதற்கு உள்ளூர் அளவில் உள்ள BMCகளுக்குஅவை பருவ காலங்களிலும் தொடர்ச்சியாக செயல்படுவதற்கான திறன் மேம்பாட்டை உருவாக்குவது என்பது முக்கியமான தேவையாக உள்ளது.


மக்கள் உயிர்பல்வகைமை பதிவேடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது கிராமத்தின் உள்ளூர் புவியியலோடு தொடர்புடைய உயிர் வளங்கள் மற்றும் மக்கள்தொகை பற்றிய விரிவான தகவல்களைக் கொண்ட ஆவணமாகும். தாவரங்கள்விலங்குகள்பறவைகள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகிய உயிர் வளங்களும்உள்ளூர் சமூகங்கள் மற்றும் அவர்களின் பாரம்பரிய நடைமுறைகளும் இதில் பதியப்பட்டு அவற்றின் பலன்களை அந்த மக்கள் பெறுவதற்கும் அப்பலன்கள் மற்றவர்களால் திருடப்படாமல் இருப்பதற்குமான அடிப்படை ஆவணமாக இந்த PBR செயல்படுகிறது. இது போன்ற பல திருட்டுகள் ஏற்கனவே நடந்துள்ள நிலையில் PBR தயாரிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகிறது.


எனவே, PBR ஐ அவசரமாககுறுகிய காலத்தில் தயாரிப்பது என்பது நமது உழைப்பையும் நேரத்தையும் வீணடிக்கும் செயலாகும். மிகவும் குறுகிய காலத்தில் தன்னிச்சையாக அனுபவமற்ற மாணவர்களால் சேகரிக்கப்பட்டு செயலாக்கப்படும் இந்தத் தரவுகள் உயிர்பல்வகைமை சட்டத்தின் நோக்கத்தை கண்டிப்பாக நிறைவேற்றாது.


எனவே, PBR தயாரிப்பதற்கு ஒரு வலுவான நம்பகமான முறைமையை உருவாக்குமாறும் அது உள்ளூர் சமூகங்களுக்கு பயனளிக்கும் விதமாகவும் மாநில அளவில் ஒரு பரந்த பன்முகத்தன்மை பற்றிய புரிதலை உருவாக்கும் விதமாகவும் இருப்பதை உறுதி செய்யுமாறும், TNBB மற்றும் தேசிய உயிர்பல்வகைமை ஆணையத்திடம் (NBA) நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.


இது தொடர்பான எங்களின் கோரிக்கைகள் பின்வருமாறு


1. EPW 
இல் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின்படிஉள்ளூர் அரசாங்கங்களால் BMCகள் உருவாக்கப்படவில்லை மற்றும் முறையான PBR தயாரிக்கப்படவில்லை என்பதால், PBR புதுப்பிப்பு தொடர்பான அறிவிப்பை TNBB மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


2. RD & PR (
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்) துறை மற்றும் MAWS (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்) துறைக்கு BMC களை சரியான முறையில் அமைப்பதற்கான அறிவிப்பை அனுப்புமாறும்அடுத்து நடக்கவிருக்கும் கிராமசபை/பகுதிசபையில் இதை ஒரு விவாதப்பொருளாக இணைத்து பிரச்சாரம் செய்து அங்கீகரிக்குமாறும் தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். (இதன் மூலம் கிராமசபை/பகுதிசபைகளில் கலந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள்/இளைஞர்கள் இந்த உயிர்பல்வகைமை மேலாண்மை குழுவில் இணைய முன்வர வாய்ப்புள்ளது).


3. 
மேலும்உயிர்பல்வகைமைக்காக பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் TNBB மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள்மக்கள் பங்கேற்புடன் PBR ஐத் தயாரிக்கஉள்ளூர் அரசாங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் BMC உறுப்பினர்களுக்கு முறையான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்க வேண்டும். (PBR ஐத் தயாரிக்க உள்ளூர் அரசாங்கங்கள் 15வது மத்திய நிதி குழு மானிய நிதியை பயன்படுத்தலாம் என்ற வழிகாட்டுதல் உள்ளது.)


இப்படிக்கு உண்மையுள்ள,

 

1. Prasanth J, Chennai Climate Action Group

2. Mukesh gauthaman, Eegaikulu

3. Yuvan Aves, Palluyir

4. Saravanan, Visai

5. Ali Basha, Zenith Learning Center

6. Akalya, Young People for Politics

7. Pritika M, Ficus

8. Anuviya, Pitchandikulam Forest

9. Prabhakaran, Poovulagin Nanbargal

10. Inbarasan, Institute of Grassroots Governance,Tiruppur.

11. Kameshwaran, Advocate

12. Joel Shelton, IRCDUC

13. S. Gopalakrishnan, Secretary, Evergreen Nature Conservation

14. Paul Pradeep CN, Trash Troopers

15. Vignesh Rajendran, XR Chennai

16. Vishnupriyan - Thannatchi - Tiruppur

17. Joy Andrew, BR Leopards

18. Roy Anto, MinMini Collective

19. Rohit, Project Living Cities

20. Vandana Viswanath, Vettiver Collective

21. Durga, Coastal Resource Center

22. Sundar, Tamilnadu seed savers network

23. Kavin castro, Advocate

24. Baskar, Jeevaka center for peace and happiness

25. Ramasubramanian, Director, Samanvaya Social Ventures

26. Vishanth, Singaravelar Padipagam

27. R.Selvam, Tamilnadu organic farmer's federation

28. Naresh, journalist and Documentary film maker

29. Raghul, secretary AIYF Udumalpet.

30. A. Azad kamil, Ongil Nature Trust, coonoor.

31. Ajay Ludra, Nilgiri Natural History Society.                     

32. Johnny John, NilgiriScapes

33. Satheesh Perumal, Makkal Padhai

34. Ananthoo, Safe Food Alliance

35. Gopi Deva, OFM

36. Seethalakshmi, TNIVK

37. Mohan kumar M, Wildlife Biologist

38. Nityanand Jayaraman, Save Chennai Beaches Campaign

Wednesday 7 June 2023

அறவழியில் போராடிய மக்கள் தலைவர்களைக் கண்ணியமற்ற முறையில் கைது செய்வதா? - தன்னாட்சியின் கண்டன அறிக்கை

அறவழியில் போராடிய மக்கள் தலைவர்களக் 

கண்ணியமற்ற முறையில் கைது செய்வதா?

தன்னாட்சியின் கண்டன அறிக்கை


மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சார்ந்த ஊராட்சித் தலைவர்கள், 'கொள்ளிடம் ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு' சார்பாக புளியந்துறை ஊராட்சித் தலைவர் தோழர் நேதாஜி அவர்கள் முன்னிலையில் கடந்த மே 18, 2023 அன்று 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம் (PMAGY) தொடர்பான மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளுக்கு (E-Tenders) ஒன்றிய அளவில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். அவ்வாறு போராடிய கிராம ஊராட்சித் தலைவர்களை காவல்துறையினர் மிக மோசமாக நடத்தி, இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர். அதைக் கண்டித்து காவல்துறைக்கு எதிராகப் போராடிய கிராம மக்கள் மீதும் தடியடி நடத்தியுள்ளனர் காவல்துறையினர்.

 

ஏற்கனவே ஒன்றிய அளவில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்துப் பல புகார்களை ஊராட்சித் தலைவர்கள் மாவட்ட அளவில் அளித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக பல கட்ட பேச்சுவார்த்தைகளையும் ஊராட்சித் தலைவர்கள் நடத்தியுள்ளனர். கடைசியாகக் கூட்டமைப்பின் ஊராட்சித் தலைவர்கள் அனைவரும் மே 5, 2023 அன்று ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய அளவிலான அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து ஊராட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். இவ்வாறு அறவழியில் அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் காவல்துறையினர் அவர்களைச் சட்ட விதிமுறைகளை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் என்றும் பாராமல் சட்டையைப் பிடித்தும், குண்டு கட்டாகத் தூக்கியும் இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த கண்ணியமற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறது தன்னாட்சி.  

 

ஊராட்சி அளவில் எந்த ஒரு திட்டம் செயல்படுத்தப்படுவதாக இருந்தாலும் கிராம ஊராட்சியின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் செயல்படுத்தக் கூடாது என்பது விதியாகும். குறிப்பாக பட்டியல் பிரிவு மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்குப் பயன்படும் விதமாக வடிவமைக்கப்பட்ட பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம் (PMAGY) கிராம ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தான் செயல்படுத்தப்பட வேண்டும். மேலும் எந்த ஒரு இந்தியக் குடிமகன்களுக்கும் அறவழியில் போராடுவது என்பது அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாகும். ஆனால் மேலுள்ள எந்த ஒரு சட்ட விதிமுறைகளையும் மதிக்காமல் நடந்து கொண்ட ஒன்றிய அளவிலான அலுவலர்கள், ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் அனைவரின் மேலும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறது தன்னாட்சி. மேலும் தோழர் நேதாஜி உள்ளிட்ட ஊராட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது தன்னாட்சி.

 

மேலும் இது போன்று ஊராட்சி அளவில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் தலையீடுகள் இருப்பதாகக் கூறி ஊராட்சித் தலைவர்கள் போராடுவது தமிழ்நாடு முழுவதும் தொடர்கதையாகி வருகிறது. அரசு உடனடியாக இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசிற்குத் தன்னாட்சி கோரிக்கை வைக்கிறது.


வினோத் குமார் 

பொது செயலாளர்

தன்னாட்சி 

9445700758 

thannatchi.in



Tuesday 6 June 2023

அதிகாரப்பரவலுக்கு எதிரான தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை அரசு ஏற்கக் கூடாது!

அதிகாரப்பரவலுக்கு எதிரான

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை

அரசு ஏற்கக் கூடாது!

 

தன்னாட்சி அறிக்கை


தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம், கடந்த மே 15, 2023 முதல், சென்னை பனகல் மாளிகை அருகில் தொடர் காத்திருப்புப் போராட்டம் (மே 18, 2023 வரைநடத்தியதுஅரசு கருவூலத்திலிருந்து ஊதியம், TNPSC மூலம் பணியிடங்களை நிரப்புதல்மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஒன்றியத்துக்குள் பணியிட மாற்றம் மற்றும் அரசு பணியாளர்களுக்கான சலுகைகள் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டனசமீபத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்களை (பிரிவு 104 மற்றும் 106) உள்ளடக்கிய பணிவிதிகள் அரசாணையை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் முதன்மையாக வைக்கப்பட்டது.

அதாவதுஊராட்சி செயலாளர்கள் கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பவில்லை என்பதையே இந்தப் போராட்டம் உணர்த்துகிறதுஅவர்களின் கோரிக்கைகள், அவர்கள் கிராம ஊராட்சியின் பணியாளர்களாக இல்லாமல் தமிழ்நாடு அரசின் பணியாளர்களாக வேண்டும் என்பதையே வெளிப்படுத்துவதாக உள்ளதுஇது அடிப்படையில் உள்சுயாட்சி அரசுகளின் சுயாட்சித் தன்மையை (இந்திய அரசமைப்புச் சட்டம் 243G) கேள்விக்குள்ளாக்குகிறது.

ஏற்கனவே (மே 12, 2022)தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப் பிரிவுகள் 104 மற்றும் 106 இல் மேற்கொள்ளப்பட்டத் திருத்தங்கள்ஊராட்சி செயலாளர்களை ஊராட்சி தலைவர்களுக்கு இணை அதிகாரம் மிக்க நபர்களாக மாற்றும் என்பதையும் ஊராட்சி செயலாளர்களை ஊராட்சி மன்றமோ அல்லது கிராமசபையோ கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகும் என்பதையும் விளக்கி அந்தச் சட்டத் திருத்தங்களைத் திரும்பப்பெறக் கோரி தன்னாட்சி வலியுறுத்தியுள்ளது. (அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது)

ஊராட்சி அளவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான நிதியைக் கையாளும் PFMS இல் MAKER (இணையவழியில் பணப்பரிமாற்றத்தை துவங்கும்) அதிகாரம் உள்ள ஊராட்சி செயலர்களை இடமாற்றம் செய்வதுதண்டிப்பது போன்ற கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் ஊராட்சி மன்றத்திடம் இருப்பதை உறுதி செய்வதே எளிய மக்கள் பெரும்பாலானோர் பிரதிநிதிகளாக (50 சதவீதத்திற்கும் மேல் பெண் பிரதிநிதிகள்; 18 சதவீதத்துக்கு மேல் பட்டியல் பிரதிநிதிகள்இருக்கும் ஊராட்சி அரசுகளை வலுப்படுத்துவதாகவும் அதிகாரப்பரவலை உறுதி செய்வதாகவும் இருக்கும்.

ஏற்கனவேபல இடங்களில் ஊராட்சித் தலைவர்கள் ஊராட்சி சார்ந்த பல பணிகள் தங்களுக்கு தெரியாமல் ஒன்றிய அளவிலே முடிவு செய்யப்படுவதாகக் கூறி போராட்டங்கள் நடத்திவரும் சூழலில்ஊராட்சி செயலாளர்கள் தமிழ்நாடு அரசின் பணியாளர்களாக அதாவது ஒன்றிய அளவிலான அலுவலர்களின் கட்டுப்பாட்டில் செல்லும் வகையில் முடிவெடுப்பதுஅதிகாரப்பரவலுக்கும் கிராம உள்ளாட்சி அதிகாரங்களுக்கும் எளிய மக்களுக்கும் எதிராக அமையும் என்பதை அரசு மறந்துவிடக்கூடாது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் எந்த முடிவும்ஊராட்சி செயலாளர்கிராம ஊராட்சியின் செயல் அலுவலரான கிராம ஊராட்சி தலைவருக்கும் ஊராட்சி மன்றத்திற்கும் கட்டுப்பட்டவராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை தன்னாட்சி அழுத்தமாக வலியுறுத்துகிறது.


வினோத் குமார் 

பொது செயலாளர்

தன்னாட்சி 

9445700758 

thannatchi.in