Saturday 26 December 2015

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை - தமிழிசை விழா, டிசம்பர் 29, 2015, சென்னை.

அன்புடையீர் வணக்கம்,

 

அமெரிக்காவில் இயங்கும் 45-க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America - FeTNA, www.Fetna.org) அமெரிக்காவில் தமிழ் மரபைப் பேணிப் பாதுகாக்கவும்,அடுத்த தலைமுறையினர் தமிழை பயன்பாட்டில் கொள்ளவும் பல்வேறு தமிழ்க் காப்புப் பணிகளை  செய்து வருகிறது. இதன் அமைப்பு,  தமிழர்களின் தாயகமான தமிழகத்தில் தமிழிசைப் பணியை முன்னெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழிசை விழாவை நடத்திக் கொண்டுள்ளது. சென்னையில் உள்ள இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில், 3-ஆவது ஆண்டாக தொடர்ந்து தமிழிசை விழாவை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகச்சியில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.நாஞ்சில் .பீற்றர், முன்னாள் தலைவர்கள் திரு.கருப்பையா சிவராமன் மற்றும் முனைவர் V.G.தேவ் , வி.ஐ.டி வேந்தர் முனைவர் ஜி.விஸ்வநாதன் , தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் .பாஸ்கரன், வேளான்மைத்துறை செயலர் செ.இராஜேந்திரன் IAS, தமிழக நிதித்துறை செயலாளர் திரு.உதயசந்திரன்  IAS, விஜிபி குழுமம் தலைவர் முனைவர் வி.ஜி.சந்தோசம்  மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மக்கள் தொடர்புக்குழு  ஒருங்கிணைப்பாளர் திரு.கொழந்தவேல் இராமசாமி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். (இணைப்பினைக் காண்க)

 

தமிழிசை ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள்  கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தாங்கள் தங்கள் ஊடகத்தின் சார்பாக கலந்துகொண்டு தமிழிசை விழாவினை மக்களுக்கு எடுத்துச் செல்லவும், தமிழிசை வளர்ச்சிக்கு கைகொடுக்கவும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் இசைக்கடல் பண்பாட்டு நடுவம் ஆகியவற்றின் சார்பில் அன்போடு அழைக்கிறோம்.

 

நாள்: 29.12.2015, செவ்வாய்க் கிழமை, பிற்பகல் 2 மணி முதல்.8:30 மணி வரை
இடம்: ஆனந்த் சந்திரசேகர் அரங்கம் , 56, தம்பையா சாலை, மேற்கு மாம்பலம்

 

 

 

நன்றி.
தமிழிசை விழாக் குழுவினர்

 

தொடர்பிற்கு:
கொழந்தவேல் இராமசாமி, மக்கள் தொடர்புக்குழு  ஒருங்கிணைப்பாளர்-வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை,8056704095
திருபுவனம் G. ஆத்மநாதன், நிறுவனர், இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை, 9380125989

Thursday 19 November 2015

PRESS RELEASE: "கொலீஜியம்”- "COLLEGIUM" - Representation...to Supreme Court & Department of Justice..

To the Editor:

As per the order of supreme court,  The Department of Justice gave advertisement in media seeking suggestion for improvisation of current collegium system. On the last day of the given deadline(Nov 13th) Satta Panchayat Iyakkam, sent representation on this issue. Particularly we insisted transparency and demanded the system to come under the purview of RTI. Also we demanded proper system to look into the complaints received on judges who are being considered in Collegium Panel.

Senthil Arumugam, General Secretary,
Satta Panchayat Iyakkam, 8754580274

நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் கொலீஜியம் முறை குறித்து பொதுமக்கள்/பொதுநல அமைப்புகளின் கருத்துக்களை வரவேற்று நாளிதழ்களில் விளம்பரம் தரப்பட்டிருந்தது. கருத்துக்களை அனுப்ப கடைசி நாளான Nov13,2015  அன்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் உச்ச நீதி மன்ற குழுவிற்கு அனுப்பி வைத்த ஈமெயிலில் மனுவில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதில் எந்தவகையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரலாம் என்பது குறித்தும்... கொலீஜீயத்தின் செயல்பாடுகளை, ஆவணங்களை, முழுமையாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழும் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். மேலும் நீதிபதிகளின் மீதான புகார்களை முறையாக விசாரிப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளோம்.

செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580274


---------- Forwarded message ----------
From: Satta Panchayat <sattapanchayat@gmail.com>
Date: Fri, Nov 13, 2015 at 4:05 PM
Subject: Suggestions on collegium system improvisation
To: collegium-suggestions@gov.in, collegium-improvement@gov.in


We are happy to hear that the judiciary is accepting public views on the improvisation of current collegium system which is in place from 1981.

We (Satta Panchayat iyakkam) are a group of young activist majorly working on law awareness and transparency in the government.we give free legal aid and run a call center for the same.


Transparency in the selection of judges would reduce corruption in process and stop wrong people from entering the judicial system. Transparency mechanism can be ensured in some ways which are stated below:


Our recommendations on appointment of the high court & supreme court  judges are 

1.All the applicants and nominees for the post of high courts & supreme court judges should be listed in the website for a period of 90 days. with all their property statements and their track records and the merits for the post.

2.There must be a public complaint accepting mechanism. which should ensure every complaint on the nominees should be properly acknowledged and should be subjected to the scrutiny,This way public can also participate in their part for this selection process.

3.The whole process of the collegium system must come under the Purdue of Right to information act 2005. so that transparency is ensured and  every citizen will also get enough opportunity to eliminate wrong person entering into the judicial system, we the people of India would have more confidence in the judiciary.

Since the removal of judges can only be done by impeachment. it is necessary there must be strict accountability in the part of the collegium to ensure necessary measures are taken. 

we hope that our suggestions would be taken into consideration.

நன்றி / Thank you,

Senthil Arumugam, 
General Secretary, Satta Panchayat Iyakkam
8754580274

Wednesday 11 November 2015

Tamil Aruvi Manian open Letter to Stalin,DMK - Via Thuglak... 18.11.2015

”....ஊழலுக்கு ஊற்றுக்கண் கோபாலபுரம்”
“....மது அரக்கனை வரவேற்று வாழ்த்துப்பா பாடியவர் கலைஞர்”
தி.மு.க.வின் கடந்தகால வரலாற்றை வறுத்தெடுக்கும் விரிவான கடிதம்...
தமிழருவி மணியன் அவர்கள் ஸ்டாலினுக்கு எழுதிய வெளிப்படையான கடிதம்(Open Letter) - நன்றி: துக்ளக்.. 18.11.2015

Friday 30 October 2015

சமூக ஆர்வலர் கோவன் கைது..... தமிழக அரசிற்கு,காவல் துறைக்கு நன்றி...இன்னும் பலரைக் கைது செய்ய வேண்டுகிறோம்.

சட்ட பஞ்சாயத்து இயக்க செய்தி வெளியீடு(30-10-2015)

"டாஸ்மாக் மூடு பாடல்" சமூக ஆர்வலர் கோவன் கைது..... 

 தமிழக அரசிற்கு, காவல் துறைக்கு நன்றி... இன்னும் பலரைக் கைது செய்ய வேண்டுகிறோம்.

"மூடு டாஸ்மாக்கை மூடு" என்ற பிரபல டாஸ்மாக் எதிர்ப்பு பாடலைப் பாடிய சமூக ஆர்வலர் கோவன் இன்று அதிகாலை திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான கருத்துரிமையின் கழுத்துநெறிக்கும் செயலாகத்தான் இதனைப் பார்க்கிறோம். மேலும், டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்கள், அமைப்புகளுக்கு தமிழக அரசு விடுக்கும் மறைமுக எச்சரிக்கை இது. இனிவரும் காலங்களில், போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு இதுபோன்ற திடீர் கைது, சிறைவாசம் பரிசாக அளிக்கப்படும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்தக் கைது.

கோவன் அவர்களின் கைதுக்குக் காரணமான பாடல் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது, பகிரப்பட்டுள்ளது என்பதே, மக்கள் கருத்தின் பிரதிபலிப்பாக இப்பாடல் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. டாஸ்மாக் மூடப்படவேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களின் விருப்பம், கருத்து. 

இந்த சூழலில் பாடியரைக் கைது செய்துள்ளார்கள். பாடியவரைக் கைது செய்யலாம்; சிறையில் அடைக்கலாம். ஆனால், அவர் மக்களிடம் பரப்பிய கருத்தை..?   பாடலைக் கேட்டவர்களை, பார்த்தவர்களையும் கைது செய்யுமா அரசு..?

தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகள் திறந்து மக்களைச் சீரழிக்கும் "மக்கள் துரோக" செயலுக்கு எதிராக குரல் கொடுப்பது "தேசத் துரோக" குற்றமா..? 

டாஸ்மாக் எதிர்ப்புப் போரளிகளின் வாயை மூடும் செயலை விடுத்து, டாஸ்மாக்கை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட பஞ்சாயத்து இயக்க முகநூலில் , இப்பாடலைப் பாருங்கள்.. பகிருங்கள் என்று பகிரங்கமாக நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். ஏராளமான அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் "மூடு டாஸ்மாக்கை" பாடலை தொடர்ந்து பகிர்ந்து வண்ணம் உள்ளனர். இதுவரை, இப்பாடலைப் பார்க்காத பல ஆயிரம்பேர், இப்போது தேடித்தேடி பார்க்கின்றனர். 

இறுதியாக, தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
 "டாஸ்மாக்" குறித்த விவாதத்தை மீண்டும் பரந்துபட்ட மக்களிடம் விவாதப் பொருளாக்கியதற்காக...

இன்னும் பல டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளைக் கைது செய்யுங்கள்.

போராளிகள் படும் தற்காலிகத் துன்பங்கள்... டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடட்டும்.

செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580274

Friday 9 October 2015

Sep-2015 Accounts of Satta Panchayat ... சட்ட பஞ்சாயத்தின் செப்2015 வரவு-செலவு விவரங்கள்...

Sir,

We, Satta Panchayat Iyakkam(SPI) fights against Corruption and Demands Transparency in Governance. 
To "Walk the Talk", we publish our accounts on 5th of every month in facebook and website(since launch of SPI). You can see the accounts of last 24 months @  http://www.tamil.sattam.org/expenses .
We will continue to fight against Corruption & Liquor. Expecting your continued support.

Note: Accounts of September 2015 is attached.

Thanks,
Senthil Arumugam,
General Secretary, Satta Panchayat Iyakkam,
8754580274

ஊடக ஆசிரியர்கள், நிருபர்களுக்கு வணக்கம்,

வெளிப்படையான அரசு நிர்வாகத்தை வலியுறுத்தும் சட்ட பஞ்சாயத்து  இயக்கம், தனது வரவு செலவுகளை வெளிப்படையாக வெளியிடுவதைத் தார்மீகக் கடமையாகக் கருதுகிறது.
மேலும், எங்களுக்கு நன்கொடை அளிக்கும் ஒவ்வொரு ஆர்வலர்களுக்கும் தங்களது நன்கொடை எப்படி செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமையும் இருக்கிறது.

இந்த அடிப்படையில், கடந்த 24 மாதங்களாக(இயக்கம் துவங்கியதிலிருந்து இதுநாள் வரை) ஒவ்வொரு மாதமும் இயக்கத்தின் வரவு-செலவுகளை முகநூலில்,இணையத்தில் வெளியிட்டுள்ளோம்( http://www.tamil.sattam.org/expenses )

இலஞ்ச-ஊழலற்ற வெளிப்படையான அரசு நிர்வாகத்தை கொண்டுவரவும், மதுவிலக்கை வலியுறுத்தியும் எங்கள் போராட்டங்கள் தொடரும்.  ஊடகங்கள், தங்கள் ஆதரவை தொடர்ந்து தர வேண்டுகிறோம்.

செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580274




Thursday 1 October 2015

2016 தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிப்போம்..நாளை பிரச்சாரம் துவக்கம்.. People should defeat ADMK in 2016 Election...

To the editor:

On 33rd day of relay fast, Satta Panchayat Iyakkam resolved to campaign against ADMK, the only main stream party in TN which has not yet accepted Liquor Prohibition Policy. Hence, we are kicking off election campaign tomorrow(02-10-2015, 8am, In MADURAI WEST Assembly Constituency) requesting people NOT to VOTE for ADMK. But vote for any party which already assured prohibition.

Senthil Arumugam, State General Secretary,
Satta Panchayat Iyakkam






மதுவிலக்கு கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் 33வது நாளன்று(25.09.15) நாம் அறிவித்தபடி, பிரச்சாரத்தை நாளை துவங்குகிறோம். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை வீடு வீடாய்ப் பிரச்சாரம் துவங்குகிறது ( காளவாசல், ஜெர்மன் ஹோட்டல் அருகே) . தொடர்புக்கு: அண்ணாத்துரை( 8754588222 )


காந்தியவாதி சசிபெருமாளின் உயிர் தியாகம், மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து மதுக்கடைகளை மூடாத அ.தி.மு.க.வை. வரும் சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிப்போம்; தோற்கடிப்போம்.

குறிப்பு: இப்பிரச்சாரத்தின்போது "மதுக்கடைக்குப் பூட்டு ; அதற்கு உங்கள் ஓட்டு" என்ற ஸ்டிக்கர் ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒட்டப்படும். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, மதுக்கடைகளை மூட வாக்குறுதி அளித்திருக்கும் கட்சிகளில் தங்களுக்குப் பிடித்தமான ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

தொடர்புக்கு: அண்ணாத்துரை( 8754588222 )

செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
87545-80274

Friday 25 September 2015

மதுவிலக்குப் போராட்டத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள்..

சட்டசபையில் மதுவிலக்கை அறிவிக்கக் கோரி
                 33 வது நாள் உண்ணாவிரதம்
                          
25.09.2015


      மதுவிலக்குப் போராட்டத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள்


இலவசங்களை அள்ளித்தெளிக்க, தேர்தலில் ஓட்டுக்குப் பணத்தை வாரியிறைக்க ஆட்சிக்கு,கட்சிக்கு பல ஆயிரம் கோடி பணம் வேண்டும். அதற்கு, மதுவிற்பனை தங்கு தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே இன்றைய ஆளுங்கட்சியின் அணுகுமுறையாக இருந்து வருகிறது. மக்கள் நலனைவிட, முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், தான் நடத்தும் "மிடாஸ் சாராய உற்பத்தி ஆலை" மூலம் கிடைக்கும் 11000 கோடி வருமானமே முக்கியம் என்ற அடிப்படையிலேயே மதுவிலக்கு குறித்து வாய்திறக்க மறுக்கிறார் முதல்வர்.டாஸ்மாக் முற்றுகை, பொதுநலவழக்கு, ஆர்ப்பாட்டங்கள் என மதுவிலக்கு கோரி பலகட்டப் போராட்டங்கள் நடத்தியுள்ள சட்ட பஞ்சாயத்து இயக்கம், சட்டசபையில் மதுவிலக்கை அறிவிக்கக்கோரி கடந்த 33 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவருகிறது.

அடுத்த கட்ட செயல்திட்டங்கள்:

1.
மதுவிலக்கை அறிவிக்காத அ.தி.மு.கவை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிப்போம்,தோற்கடிப்போம்:


தமிழகத்தில் மிகப்பெரும்பாலான அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மதுவிலக்கை அறிவிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளபோது சட்டசபையில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும், மதுவிலக்கு என்பது தேர்தல் பிரச்னையாக, ஓட்டுக்களைப் பாதிக்கும் பிரச்னையாக மாறாது என்ற நம்பிக்கையிலேயே முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதுவிலக்கை அறிவிக்க மறுக்கிறார். இது உண்மை நிலையில்லை என்பதை நிரூபிக்கும்விதமாக நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலில் மதுவிலக்கை அறிவிக்காத அ.தி.மு.க.வைப் புறக்கணிக்க வேண்டும் ; தோற்கடிக்க வேண்டும் என்று பொதுமக்களை சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது. அதேசமயம், எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஆதரவு தரவில்லை, வாக்களிக்கக் கோரவில்லை என்பதைத்  தெரிவித்துக்கொள்கிறது.

2. மாவட்டங்களில் "மதுவிலக்கு பேரணி":

மதுவிலக்கு கோரிக்கை என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை என்பதை வலுவாக வெளிக்காட்டும்விதமாகவும், வரும் தேர்தலில் மதுவிலக்கை அறிவிக்கும் கட்சிக்கே வாக்களிப்போம் என்பதைப் பொதுமக்கள் தெரிவிக்கும்விதமாகவும் மாவட்டங்களில் "மதுவிலக்குப் பேரணி" நடத்தப்படும்.


3. "மதுக்கடைக்குப் பூட்டு; அதற்கு எனது ஓட்டு"
                                 வீடு வீடாய்ப் பிரச்சாரம்:

பொதுமக்களை வீடு, வீடாய் சந்தித்து மதுவிலக்கை அறிவிக்கும் கட்சிகளில் உங்களுக்குப் பிடித்தமானோருக்கு வாக்களியுங்கள், மதுவிலக்கை அறிவிக்காத அ.தி.மு.கவைப் புறக்கணியுங்கள் என்று தொடர் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.


4. நீதிமன்றத்தை அணுகி சட்ட ரீதியிலான போராட்டம்:

டாஸ்மாக் மேல்மட்ட நிர்வாகம், டாஸ்மாக் கடைகள்,  பார்களில் ஏராளமான முறைகேடுகள், ஊழல்கள் நடக்கின்றன. இதுதொடர்பாக நாங்கள் தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலமாக பெற்றுள்ள ஆவணங்கள், ரகசிய கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்  நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்துப் போராட உள்ளோம்.

விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள ஏராளமான டாஸ்மாக் கடைகளை மூடுவதற்காக நீதிமன்றத்தில் வழக்குதொடுக்க உள்ளோம்.


5. "அம்மா – சாராயக் கடை":

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பல திட்டங்களுக்கு "அம்மா" திட்டம் என்று பெயர் வைக்கப்படுகிறது. அந்த அடிப்படையில், மக்களைக் கொன்று 30 ஆயிரம்கோடி ரூபாய் சம்பாதித்துத் தரும் டாஸ்மாக் கடைகளுக்கு "அம்மா-சாராயக் கடை" என்று பெயர் வைப்பதே பொருத்தமானது என்பதை வலியுறுத்தி 23-09-2015 அன்று மதுரையில் போராட்டம் நடத்திக் கைதானோம். இப்போராட்டங்கள் தமிழகமெங்கும் தொடரும்
                     

                              செந்தில் ஆறுமுகம்,
                                       மாநிலப் பொதுச்செயலாளர்,
8754580274

Wednesday 23 September 2015

Devaamirtham's invitation


பாரம்பரிய அரிசிகளின் உணவுத் திருவிழா


நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஆரோக்கியமான பாரம்பரிய நெல்விதைகளை, அரிசிரகங்களை மீண்டும் கண்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியாக சென்னையில் பாரம்பரிய அரிசிகளின் உணவுத்திருவிழா கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை நடத்த உள்ளோம். 

சென்னை ரிப்போர்டர்கில்டிலும், பிரஸ்கிளப்பிலும் செப்டம்பர் 26, சனிக்கிழமை, ஒருநாள் நிகழ்வாக காலை முதல் மாலை வரை இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  

திருத்துறைப்பூண்டியில் செயல்படும் 'கிரியேட்' தொண்டு நிறுவனத்தினரின் நெலவிதைகளும், உளுந்தூர்பேட்டை சாராதா ஆஸ்ரமத்தின் நெல்விதைகளும் மக்களுக்கு காட்சிப்படுத்தப் பட உள்ளன. மேலும் 40க்கு மேற்பட்ட மருத்துவ குணமிக்க பாரம்பரிய அரிசிகளின் காட்சிபடுத்த உள்ளோம். இந்த கண்காட்சியை நடிகர் சிவக்குமார் திறந்து வைக்கிறார். கருத்தரங்கு நிகழ்வில் தமிழகத்தில் பாரம்பரிய விவசாயத்தில் முன்னோடிகளான நெல். ஜெயராமன், கோ.சித்தர், போன்றோரும் வேளாண் ஆராய்ச்சியாளர் டாக்டர், ராமன், இயற்கை மருத்துவர்கள் ரத்தினசக்திவேல், மாறன்ஜி, சித்த மருத்துவ முன்னோடி டாக்டர். வேலாயுதம், இயற்கையின் திருமகள். நா.நாச்சாள்,  போன்றோர் பேசவுள்ளனர். மாடித்தோட்டம் குறித்து இலவச பயிற்சி தரப்படும். தமிழருவிமணியன், திரைப்பட இயக்குநர் ஜனநாதன், கலந்துக்கொண்டு பேசுள்ளனர். உணவுத்திருவிழாவில் 12விதமான பாரம்பரிய அரிசிகளின் சாப்பாடு வகைகளும், பலகார (டிபன்)வகைகளும் பரிமாறப்படவுள்ளன. 

பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை மீட்டெடுக்கும் ஒரு சிறிய முயற்சியாக தேவாமிர்தம் அமைப்பு இந்த ஒரு நாள் நிகழ்வை வடிவமைத்து உள்ளது.   

இந்நிகழ்வில் பெருவாரியான மக்கள் கலந்துகொண்டு பயன் பெற ஏதுவாக தங்கள் ஊடகத்தில் செய்தி வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

கிடைத்தற்கு அரிய பாரம்பரிய அரிசிகள் இங்கே மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கும்.

அன்புடன்,
தேவாமிர்தம்,
சாவித்திரிகண்ணன்
9 / 5, 3வது கிழக்குத்தெரு, காமராஜ்நகர்,
திருவான்மியூர், சென்னை 41. 
9444427351. 



 Our ancestors were used the healthy rice. After the green revolution the traditional rice were destroyed and forgotable to the people .

 

Now adays welfare society and Agriculture scientist are re-invent  some traditional  rice. It will show to public.

 

Devaamirham traditional food organization  will contact one day food festival   and conference in Chennai reporters gild and Press club  on Saturday 26th September.  The festival will be started 9.00 am till 7pm.

 

Thiruthuraipoondi 'creat' welfare  organization will disply more than 150 seed rice  and ulundurpet 'Sarada Asharam' also display some seed rice. And then as kinds of Medicinal rice will be displayed.

Actor Sivakumar will inaugurate the exhibition. As a pioneer in the state in the event of the seminar on traditional rice farming. Jayaraman, k. sidhar, such as agro researcher Dr. Raman, Naturopathic doctors Rathina sakthivel, Maran G, Doctor of Medicine predecessor. Velayudan, Scripture nature. Nanachal, will also be like. The free training will be given Green House. Tamilaruvi maniyan, Film director Jananathan, also  participated. 12 kinds of traditional rice varieties are in food festival meals, snacks (breakfast) will be provided.   

 

Devaamirtam traditional dietary culture and to try to restore a little of this one-day event is to design the system.

 

Countless people participated in this event in order to get the benefit of their urge to publish in the media.

 

 

Regards,

Devaamirtham,

Savithrikannan,

Co- Sponcer

LIONS CLUB

 


சட்டசபையில் மதுவிலக்கு அறிவிக்க கோரி மனு கொடுக்க சென்ற சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் கைது

சட்டசபையில் மதுவிலக்கு அறிவிக்க கோரி மனு கொடுக்க சென்ற சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் கைது :

https://youtu.be/HgW4nsNEjLo - காவல்துறை அனுமதி மறுத்து கைது செய்யப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட வீடியோ.
வருகிற செப்டம்பர் 25 அன்று மதுவிலக்கு மானிய கோரிக்கை விவாதத்தில் மதுவிலக்கு அறிவிக்க வலியுறுத்தி முதல்வருக்கு மனு கொடுக்க சட்டசபை மனு கொடுக்கும் பகுதிக்கு சென்ற 26 சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர்கள் மற்றும் மதுஒழிப்பு ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி மனு கொடுப்பது கூட தற்பொழுது தமிழகத்தில் குற்ற செயல் ஆகிவிட்டது.

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269

​Satta Panchayat Iyakkam

|  31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Join Us : join.sattam.orgDonate Online : donate.sattam.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath

To Register for Monthly Contribution and become a SPI Pillar : 1001.sattam.org

Other Contact:

SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269
Google Groups : spimembers@googlegroups.com

Tuesday 22 September 2015

On 31st Day of Fasting for Liquor Prohibition..

To the Editor:

Tomorrow(Sep23, wednesday) On 31st Day of Relay fast going on in Satta Panchayat Iyakkam(SPI) demanding liquor prohibition announcement in Assembly, SPI team and and other social activists jointly presenting a Petition in CM - Cell at 11:30am.

Attachments:  - petition copy   - Day 1 and Day30 Fasting photos

Senthil Arumugam,

General Secretary, SPI

8754580274


Tuesday 15 September 2015

Press Release: 16-Sep at 4:30PM, World Siddha Trust President meet the press - வரும் புதன்கிழமை உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு.

Press Release: 16-Sep at 4:30PM, World Siddha Trust President meet the press - வரும் புதன்கிழமை உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு.
 
World Siddha Trust Press Updates:
 
உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின்(www.WorldSiddha.org) தலைவராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர்.செல்வசண்முகம் அவர்கள் கலிபோர்னியாவில் நடக்க இருக்கும் "15th International Conference "Ayurveda & Autoimmune Disorders" கருத்தரங்கில் சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள் குறித்து சிறப்புரையாற்றுகிறார்..
 
வட அமெரிக்கத் தமிழர்கள் ஏற்பாடுசெய்துள்ள இந்த பயணத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா, செயிட் லூயிஸ், மின்னசோட்டா, நியூஜெர்சி, மேரிலாந்து, வெர்ஜினியா, டெலாவர்,கலிபோர்னியா மற்றும் வடகரோலினா ஆகிய பல இடங்களுக்கு சென்று சித்த மருத்துவப் பயிற்சிப் பட்டறைகளை நடத்த உள்ளார். இதில் அமெரிக்க குழந்தைகள் , பெண்கள் , முதியோர் உடல்நலம் குறித்து சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.  இந்தப் பயணத்தில் வட அமெரிக்காவில் சித்த மருத்தவ வளர்ச்சி குறித்தும், அமெரிக்காவில் வளர்ந்துவரும் மாற்று மருத்துவத் தேவைக்கு சித்த மருத்துவத்தின் பங்களிப்பு குறித்து மருத்துவத்துறை நிபுணர்களுடன் சந்திப்புகளும் ஏற்பாடாகி வருகிறது.
 
இந்த நிலையில் பயண நோக்கம் குறித்து கருத்துக்களை பகிர பத்திரிகையாளர் சந்திப்பு 16-Sep-2015, 4:30PMமணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்திரிக்கை நண்பர்கள் தங்கள் நிருபர்களை அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
http://aapna.org/conferences/15th-conference-october-9-11-2015-san-jose-ca-usa
 
World Siddha Trust President Dr.Selvashanmugam is travelling to north america to give a speech in "15th International Conference on "Ayurveda & Autoimmune Disorders" held in California.
 
He is also conducting workshop in varios states organized by Tamil Sangams and other organizations.  Dr.Selva Shanmugam will be giving special siddha lifestyle workshop in Atlanta(Georgia), St.Luiz(Missouri), Minnasotta, Newjersey, Maryland, Virginia, Delaware and  North Carolina.  His plan also includes meeting various experts to promote Siddha in north America.
 
To brief his travel plan, press release is scheduled on 16-Sep-2015, 4:30PM at Health India Foundation, Indian Red Cross Society Campus, 50, Montieth Road, Egmore, Chennai 600 008. Ph: 91 - 9894828968.

http://aapna.org/conferences/15th-conference-october-9-11-2015-san-jose-ca-usa
 
Thanks & Best Regards,
Dr. P.Selva Shanmugam, P.hd. 
President & Board of Trustee, World Siddha Trust (www.WorldSiddha.org)
Secretary & Siddha Consultant, Health India Foundation
Research Professor, World Institute for Scientific Exploration, Baltimore, USA 
Ph: 91 - 98948 28968 
info@worldsiddha.org
www.WorldSiddha.org

Press Release: 16-Sep at 4:30PM, World Siddha Trust President meet the press - வரும் புதன்கிழமை உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு.

Press Release: 16-Sep at 4:30PM, World Siddha Trust President meet the press - வரும் புதன்கிழமை உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு.
 
World Siddha Trust Press Updates:
 
உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின்(www.WorldSiddha.org) தலைவராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர்.செல்வசண்முகம் அவர்கள் கலிபோர்னியாவில் நடக்க இருக்கும் "15th International Conference “Ayurveda & Autoimmune Disorders” கருத்தரங்கில் சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள் குறித்து சிறப்புரையாற்றுகிறார்..
 
வட அமெரிக்கத் தமிழர்கள் ஏற்பாடுசெய்துள்ள இந்த பயணத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா, செயிட் லூயிஸ், மின்னசோட்டா, நியூஜெர்சி, மேரிலாந்து, வெர்ஜினியா, டெலாவர்,கலிபோர்னியா மற்றும் வடகரோலினா ஆகிய பல இடங்களுக்கு சென்று சித்த மருத்துவப் பயிற்சிப் பட்டறைகளை நடத்த உள்ளார். இதில் அமெரிக்க குழந்தைகள் , பெண்கள் , முதியோர் உடல்நலம் குறித்து சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.  இந்தப் பயணத்தில் வட அமெரிக்காவில் சித்த மருத்தவ வளர்ச்சி குறித்தும், அமெரிக்காவில் வளர்ந்துவரும் மாற்று மருத்துவத் தேவைக்கு சித்த மருத்துவத்தின் பங்களிப்பு குறித்து மருத்துவத்துறை நிபுணர்களுடன் சந்திப்புகளும் ஏற்பாடாகி வருகிறது.
 
இந்த நிலையில் பயண நோக்கம் குறித்து கருத்துக்களை பகிர பத்திரிகையாளர் சந்திப்பு 16-Sep-2015, 4:30PM மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்திரிக்கை நண்பர்கள் தங்கள் நிருபர்களை அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
http://aapna.org/conferences/15th-conference-october-9-11-2015-san-jose-ca-usa
 
World Siddha Trust President Dr.Selvashanmugam is travelling to north america to give a speech in "15th International Conference on “Ayurveda & Autoimmune Disorders” held in California.
 
He is also conducting workshop in varios states organized by Tamil Sangams and other organizations.  Dr.Selva Shanmugam will be giving special siddha lifestyle workshop in Atlanta(Georgia), St.Luiz(Missouri), Minnasotta, Newjersey, Maryland, Virginia, Delaware and  North Carolina.  His plan also includes meeting various experts to promote Siddha in north America.
 
To brief his travel plan, press release is scheduled on 16-Sep-2015, 4:30PM at Health India Foundation, Indian Red Cross Society Campus, 50, Montieth Road, Egmore, Chennai 600 008. Ph: 91 - 9894828968.

http://aapna.org/conferences/15th-conference-october-9-11-2015-san-jose-ca-usa
 
Thanks & Best Regards,
Dr. P.Selva Shanmugam, P.hd. 
President & Board of Trustee, World Siddha Trust (www.WorldSiddha.org)
Secretary & Siddha Consultant, Health India Foundation
Research Professor, World Institute for Scientific Exploration, Baltimore, USA 
Ph: 91 - 98948 28968 
info@worldsiddha.org
www.WorldSiddha.org

Monday 14 September 2015

Press Release: 16-Sep at 4:30PM, World Siddha Trust President meet the press - வரும் புதன்கிழமை உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு.

Press Release: 16-Sep at 4:30PM, World Siddha Trust President meet the press - வரும் புதன்கிழமை உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு.
 
World Siddha Trust Press Updates:
 
உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின்(www.WorldSiddha.org) தலைவராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர்.செல்வசண்முகம் அவர்கள் கலிபோர்னியாவில் நடக்க இருக்கும் "15th International Conference “Ayurveda & Autoimmune Disorders” கருத்தரங்கில் சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள் குறித்து சிறப்புரையாற்றுகிறார்..
 
வட அமெரிக்கத் தமிழர்கள் ஏற்பாடுசெய்துள்ள இந்த பயணத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா, செயிட் லூயிஸ், மின்னசோட்டா, நியூஜெர்சி, மேரிலாந்து, வெர்ஜினியா, டெலாவர்,கலிபோர்னியா மற்றும் வடகரோலினா ஆகிய பல இடங்களுக்கு சென்று சித்த மருத்துவப் பயிற்சிப் பட்டறைகளை நடத்த உள்ளார். இதில் அமெரிக்க குழந்தைகள் , பெண்கள் , முதியோர் உடல்நலம் குறித்து சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.  இந்தப் பயணத்தில் வட அமெரிக்காவில் சித்த மருத்தவ வளர்ச்சி குறித்தும், அமெரிக்காவில் வளர்ந்துவரும் மாற்று மருத்துவத் தேவைக்கு சித்த மருத்துவத்தின் பங்களிப்பு குறித்து மருத்துவத்துறை நிபுணர்களுடன் சந்திப்புகளும் ஏற்பாடாகி வருகிறது.
 
இந்த நிலையில் பயண நோக்கம் குறித்து கருத்துக்களை பகிர பத்திரிகையாளர் சந்திப்பு 16-Sep-2015, 4:30PM மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்திரிக்கை நண்பர்கள் தங்கள் நிருபர்களை அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
http://aapna.org/conferences/15th-conference-october-9-11-2015-san-jose-ca-usa
 
World Siddha Trust President Dr.Selvashanmugam is travelling to north america to give a speech in "15th International Conference on “Ayurveda & Autoimmune Disorders” held in California.
 
He is also conducting workshop in varios states organized by Tamil Sangams and other organizations.  Dr.Selva Shanmugam will be giving special siddha lifestyle workshop in Atlanta(Georgia), St.Luiz(Missouri), Minnasotta, Newjersey, Maryland, Virginia, Delaware and  North Carolina.  His plan also includes meeting various experts to promote Siddha in north America.
 
To brief his travel plan, press release is scheduled on 16-Sep-2015, 4:30PM at Health India Foundation, Indian Red Cross Society Campus, 50, Montieth Road, Egmore, Chennai 600 008. Ph: 91 - 9894828968.

http://aapna.org/conferences/15th-conference-october-9-11-2015-san-jose-ca-usa
 
Thanks & Best Regards,
Dr. P.Selva Shanmugam, P.hd. 
President & Board of Trustee, World Siddha Trust (www.WorldSiddha.org)
Secretary & Siddha Consultant, Health India Foundation
Research Professor, World Institute for Scientific Exploration, Baltimore, USA 
Ph: 91 - 98948 28968 
info@worldsiddha.org
www.WorldSiddha.org