Monday 1 November 2021

முல்லை பெரியாறு அணை- தமிழ்நாட்டின் மாநில உரிமையை காவு கொடுத்துவிட்டது திமுக. நடந்த தவறுக்கு பொறுப்பேற்று, நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் பதவி விலக வேண்டும்.

சட்ட பஞ்சாயத்து இயக்கம்


பத்திரிகை செய்தி (1-10-2021)

தொடர்புக்கு : 88704-72174



முல்லை பெரியாறு அணை- தமிழ்நாட்டின் மாநில உரிமையை காவு கொடுத்துவிட்டது திமுக. நடந்த தவறுக்கு பொறுப்பேற்று, நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் பதவி விலக வேண்டும். 



இன்று நவம்பர் -1 , தமிழ்நாடு எல்லை வரையறுக்கப்பட்ட நாள். பின்னாளில் பல போராட்டங்களுக்கு பிறகு, கன்னியாகுமரி பகுதி எல்லை கூடுதலாக பெறப்பட்டு இன்றும் அந்த மாவட்ட மக்களால் கன்னியாகுமரி உருவான தினம் கொண்டாடப்பட்டு  வருகிறது. இந்த முக்கியமான நாளில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முல்லை பெரியாறு அணையில்  142 அடி மட்டத்திற்கு நீர் தேக்கும் உரிமையை தி மு க அரசாங்கம் காவு கொடுத்து இருக்கிறது. பல நாள் சட்ட போராட்டத்திற்கு பின்பு தான் 142  அடி வரை தண்ணீர் தேக்கும் உரிமை நமக்கு கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, அணையை சுற்றி உள்ள சிற்றன்னையை சரி செய்ய விடாமல் கேரளா அரசாங்கம் தடங்கல்களை உருவாக்கி வருகிறது. அதனால், முல்லை பெரியாறு அணையின் முழு கொள்ளளவை எட்ட முடியாமல் தமிழகம் தவித்து வருகிறது.  நிலைமை இவ்வாறு இருக்க, தமிழ்நாட்டின் அணையை கேரளா மந்திரிகள் ஒரு வாரம் ஆய்வு செய்து, தமிழ்நாடு அணை பொறியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து 137  அடி இருந்தபோதே தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இது தவிர, அணையின் உறுதித்தன்மையை பற்றி கேரள நடிகர்கள் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அனைத்தையும் அமைதியாக இந்த அரசாங்கம் பார்த்து வருகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு, முழுப்பூசணிக்காக்கையை சோற்றில் மறைத்து நீர்வளத்துறை அமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவருக்கு சில கேள்விகள் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேக்க விரும்புகிறோம்.

தனி நபர் வழக்கு காரணமாக  142  அடி நீர் அணையில் சேமிக்க கொண்டு வர முடியாது என்றால், திமுக உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தாமல் தோற்று போய் விட்டதா? சரி, அவ்வாறு ஆயினும் மாதந்தோறும்  நிர்ணயிக்கப்பட்ட அளவை விட,137  அடியிலேயே தண்ணீர் திறந்து விட காரணம் என்ன? கேரள மந்திரிகள் ஆய்வு செய்வதை எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? அணையின் நீர் திறப்புக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் ஏன்  இன்னும் பார்வை இட வர வில்லை? ஏன் என்ற  கேள்வி எழுகிறது. இவ்வளவு நடந்த பின்னரும் தலைமை பொறியாளரை மட்டும் ஆய்வு செய்ய அனுப்பி வைக்கிறது. ஏற்கனவே, கர்நாடக அரசாங்கம் மார்க்கண்டேய நதியை  ஒட்டி முழு அணையை கட்டி விட்டது. அதற்கு ஆரம்பிக்கப்பட வேண்டிய சட்ட போராட்டம் என்ன ஆனது ? மேலும், மேடையில் பேசுவதை கேட்டு அவதூறு  வழக்கு தொடர்வதில் மும்மரமாக உள்ள இந்த அரசாங்கம், பொய் பிரச்சாரம் செய்யும் கேரள நடிகர்கள் மேல் வழக்கு தொடரலாமே? இதை விட கொடுமை கேரள நீர்வளத்துறை அமைச்சர் இன்னும் மதகு திறக்க கேட்டுள்ளோம் என பத்திரிக்கை செய்தி வெளி வருகிறது. அடுத்த நாள், ஞாயிறு(அக்டோபர் 31 ,2021 ) அன்று அவர் சொன்னபடியே மதகு திறக்கப்படுகிறது. அதற்கான அவசியம் என்ன? என பல கேள்விகள் எழுகிறது. தமிழ்நாட்டில் நடப்பது திமுக அரசாங்கமா ? அல்லது கேரள அரசாங்கமா என்பதை முதல்வர் தெரிவுபடுத்த வேண்டும். வாழ்வாதார பிரச்சனையில், பொறுப்பற்ற முறையில் பூசி முழுகும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களை மாற்றி வேறு ஒரு நல்ல அமைச்சரை நியமிக்க வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டு கொள்கிறது. 


மணிவாசகம்

துணை தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

தொடர்பு எண்: 88704-72174




செய்தி தொடர்பாளர்கள்:

ரங்க பிரசாத் - 99441 88941
ஜெயந்தி - 99521 82452

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269