Friday 28 December 2018

Fwd: ஊடக வெளியீடு / Press Release (28-12-2018) - "டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்


Dear Sir,
Please find both Tamil & English versions of the Press Release attached with the picture.

வணக்கம்,
கடந்த மாதம் கஜா புயலடித்த மரு கணத்திலிருந்து பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில்  தொடர்ச்சியாக இந்த தருணம் வரை களப்பணியாற்றி  தொடர்ந்து உதவிக்கொண்டிருக்கும் 
 இயக்கங்கள், தன்னார்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 

"டெல்டா மாவட்ட 
மறு கட்டமைப்பு குழு"

உருவாக்கியிருக்கிறோம். 

இந்த  குழுவின் நோக்கம், இந்த குழு டெல்டா மக்களுக்கு  ஆற்ற முடிவு செய்துள்ள பணிகள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. 

இன்று வெளியிட்ட ஊடக வெளியீட்டை இத்துடன் இணைத்துள்ளோம்.

நன்றி
நடிகர் ஆரி, ஜெகன், ஹரி, நல்லோர் வட்டம் பாலு, தினேஷ், Inspire ரேவதி. "டெல்டா மாவட்ட மறு கட்டமைப்பு குழு"

Thursday 27 December 2018

Press Meet | எங்க VAO எங்கே? State Wide campaign | 30 December 2018 | Nellai Aryas hotel

எங்க  VAO எங்கே?

PRESS MEET: Take Action against VAO's who dont stay and work in their respective villages, State wide Campaign against Tamilnadu government and VAO's, Press meet in Tirunelveli

  

Date : 30/12/2018

Time : 11AM

Place : Hotel Aryas, Tirunelveli Junction

Contact Number :  99441 88941 / 88833 18171

 

கிராமங்களில் தங்கி வேலை பார்க்காத கிராம நிர்வாக அலுவலர்கள் மேல் வழக்கு தொடுக்க ஆதாரங்களை திரட்டும் மாநில அளவிலான பிரச்சார துவக்கம்

 

பத்திரிகையாளர் சந்திப்பு:

நாள்  : 30-12-2018-ஞாயிறு

நேரம் : நண்பகல் 11 மணி

இடம் : ஹோட்டல் ஆர்யாஸ், திருநெல்வேலி ஜங்ஷன் 

தொடர்பு எண் : 99441 88941 / 88833 18171

 

கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் சேரும் போதே பணி செய்யும் கிராமத்திலேயே தங்கி வேலை செய்வோம் என்று ஒப்புக்கொண்டு தான் பணியில் இணைகிறார்கள்.அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் VAOக்களை அந்த கிராமத்திலேயே தங்க பல முறை வலியுறுத்தியும் இவர்கள் செவி சாய்ப்பதில்லை. VAOக்கள் கட்டாயம் அந்தந்த கிராமங்களில் தங்கி தான் வேலை செய்ய வேண்டும் என்று 2016இல் சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. VAOக்கள் நீதிமன்ற உத்தரவை மதிக்காத காரணத்தால் இயக்கம் சார்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது சம்மந்தமாக மாநில அளவிலான பிரச்சாரத்தை நெல்லையில் ஞாயிறு அன்று துவங்கவுள்ளோம்.

 தங்கள் பத்திரிக்கையாளர்களை அழைக்கிறோம்...

 

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஆறாம் ஆண்டு துவக்க விழா அழைப்பிதழ்

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்,

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஆறாம் ஆண்டு துவக்க விழா நெல்லையில் வரும் 30ஆம் தேதி (30/12/2018) நடக்கவிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக "ஊழலுக்கு பெரிதும் காரணம் -- அரசியல்வாதிகளே? அரசு ஊழியர்களே ? " என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. ஆறாம் ஆண்டு துவக்க விழாவிலும் பட்டிமன்றத்திலும் தாங்கள் கலந்துக்கொள்ள வேண்டுமென சட்ட பஞ்சாயத்து இயக்கம் அன்போடு அழைக்கிறது.

செந்தில் ஆறுமுகம் & சிவ.இளங்கோ
சட்ட பஞ்சாயத்து இயக்கம்






Thursday 20 December 2018

தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவுவது தொடர்பான - ஊடகச்‌ செய்தி

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்,

தமிழ்நாட்டில் கஜா புயல் ஏற்படுத்தியுள்ள  மிகப்பெரிய பேரழிவு, ஏற்பட்ட உயிரிழப்புகள், வீழ்ந்துள்ள 20-30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பல லட்சம் மரங்கள், மடிந்த கால்நடைகள், தரைமட்டமான வீடுகள், தூர்ந்து போய் கிடக்கும் விவசாயத் தோட்டங்கள்  என்று அனைத்து ஒட்டுமொத்த காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பதினைந்து-இருபது ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளது.  இந்த முக்கியத் தருணத்தில் தமிழ்நாட்டை சாரந்தவர்களும், வெளிமாநில, வெளிநாட்டுவாழ் தமிழர்களும் அரசுடன் ஒருங்கிணைந்து இந்த இழப்பிலிருந்து  பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுக்கொண்டுவர புயல் அடித்த முதல் நாளிலிருந்து  பொறுப்புணர்வுடன் களத்தில் நிற்கும் ஊடங்களின் பங்கு மகத்தானது.  இது மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தரவுகள் (Data Analytics) அடிப்படையில் வளர்ந்த நாடுகளில் மீட்புகள் மேம்பட்டு தொழில்நுட்பம், தரவுகள் அடிப்படையில் நடப்பது போல் துல்லியமாகத் திட்டமிட்டு உரிய பகுதிக்கு உரிய மீட்பு உதவியை வழங்க வேண்டியதற்கு நாம் இன்னும் நீண்ட பயணம் மேற்கொள்ளவேண்டியுள்ளது.  

இந்த நிலையில் சென்னை வெள்ளத்தில் நிவாரண ஒருங்கிணைப்பில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு அப்போது வெளியிடப்பட்ட“Disaster Relief NEED & SUPPORT Management System” தளத்தை மேம்படுத்தி www.GAJAHELP.ValaiTamil.Com தகவல் தளம் கஜா பாதித்த பகுதிகளை முழுமையாக ஆராய்ந்து, 2011 மக்கள் தொகையுடன் இணைத்து, கூகுள் வரைபடம் இணைத்து ஒரு முழுமையான தகவல் தளமாக கஜா புயல் அடித்த சில நாட்களில்  வலைத்தமிழ்.காம்   வெளியிடப்பட்டது.  இதில் புயலால் அதிகம் பாதித்த நான்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 1188  மொத்த கிராமங்களின் விவரங்களின் பட்டியலையும், அதில் உதவி கிடைத்துள்ள 54 கிராமங்களையும், உதவி கிடைக்காத 1134  கிராமங்களை  வெளியிட்டுள்ளோம்.  இது மட்டுமல்லாமல் பாதித்த கிராமங்களுக்கு உதவும் தான்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்க அறிஞர் குழு ஏற்படுத்தப்பட்டு “Delta Agri Innovation” , “Low cost housing Solution”  “ Gaja Relief Smart Technology Solution” உள்ளிட்ட பல அறிஞர் குழுக்கள் அவரவர் துறையில் போதிய அனுபவத்தை தொகுத்து ஆராய்ந்து அறிக்கை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவைகளை பாதிக்கப்பட்ட மாவட்ட நிர்வாத்துடன் பகிர்ந்து அவர்களுக்கு உரிய முடிவுகள் எடுக்க எங்கள் ஆலோசனையை தொடர்ந்து ஆட்சியர் கூட்டங்களின் வழியாகவும் செய்து வருகிறோம். 

குறிப்பாக இந்த மீட்பு நடவடிக்கைகளில்  அரசுத்துறை அறிவிப்புகள் மற்றும் பல்வேறு தொண்டு அமைப்புகளின் உதவிகள் உள்ளிட்டவைகளையும், நிபுணர்களிடமிருந்து வரும் புதிய சிந்தனைகளை தொகுத்தும் வெளியிட்டு வருகிறோம்.

குறிப்பாக இந்த தகவல் தளத்தில்: 

தேவைகள் மற்றும் உதவிகள் - http://gajahelp.valaitamil.com/index.php

பாதிக்கப்பட்ட கிராமங்களின் முழு விவரம்;  http://gajahelp.valaitamil.com/villages/

தன்னார்வ அமைப்புகள் உருவாக்கியுள்ள சோலார் தெரு விளக்குகள்   ( http://gajahelp.valaitamil.com/innovation-349.html )

வீழ்ந்துபோன மரங்களை பொடியாக்கி ( wood chipper) பல நிறுவனங்கள் பயன்படுத்தும் உத்தி ( http://gajahelp.valaitamil.com/news-updates-383.html )

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் எப்படி உதவுவது என்ற வழிகாட்டுதல் (https://www.youtube.com/watch?time_continue=6&v=b3CzNHiuXhw )

விலை குறைவான வீடுகள் அதன் வெளிப்படையான செலவு விவரங்கள் (http://gajahelp.valaitamil.com/innovation-376.html)

மீட்புப் பொருள்களை மொத்தமாக விலை குறைவாக கிடைக்கும் இடங்கள் http://gajahelp.valaitamil.com/Material-Suppliers/

ஒவ்வொரு பாதிக்கப்பட்ட ஊரின் ஒரு தன்னார்வலர் விவரம் http://gajahelp.valaitamil.com/villages/

உதவிகள் கிடைக்காத கிராமங்களின் விவரங்கள்  http://gajahelp.valaitamil.com/villages/

அரசுத் திட்டங்கள், உடனடி களத்தேவைகள் என்று பல்வேறு தகவல்களை “Gaja Helpline Coordinators”  என்ற தன்னார்வக் குழுவை ஒருங்கிணைத்து வலைத்தமிழ்.காம் செய்துவருகிறது.

இதில் கிராமங்களுக்கு இரண்டாம் கட்ட உதவிகள், மூன்றாம் கட்ட மறுசீரமைப்பு உதவிகளை செய்துவரும் அனைத்து அமைப்புகளும் அவரவர் உதவி செய்து வரும் கிராமங்களின் விவரங்கள் மற்றும் அந்த அமைப்பின் விவரங்களை  www.GAJAHELP.ValaiTamil.Com -ல் சேர்த்து மீதம் எத்தனை கிராமங்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது என்ற துல்லியமான விவரங்களை தொண்டு அமைப்புகளுக்கு கிடைக்கச் செய்வதும்,  அதன்மூலம் பாதிப்படைந்த 1188 கிராமங்களும் உதவி பெருவததுமே இதன் நோக்கம்.  இந்த கஜா உதவி தகவல் தளத்தை பார்வையிட்டு இதில் உள்ள தரவுகளை ஊடங்கங்கள் பயன்படுத்தி பகிர்வதுடன் இந்த தகவல் தளம் குறித்த செய்தியை பகிர்ந்து உதவுமாறு பணி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

நன்றி,

ச.பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளர், 
“GAJA Helpline Coordinators” Team
www.GAJAHELP.ValaiTamil.com
E-mail: GajaHelp@ValaiTamil.com

 

Wednesday 19 December 2018

Sri Sri Meets Lebanon President Michel Aoun, Discuss Civil War, President Lauds Sri Sri's Efforts In Conflict Resolution

Dear Editor,
After a historic visit to the UAE, global humanitarian and voice for peace and diversity, Gurudev Sri Sri Ravi Shankar was accorded a warm welcome in Lebanon, where he met Lebanese President Michel Aoun and Prime Minister Saad Hariri and discussed the ongoing civil war in Lebanon. Aoun lauded Gurudev's efforts in conflict resolution in the region. Gurudev was visiting the middle eastern country after 15 years. 
Please find the detailed press release below along with the translations and pictures here.




Sri Sri Meets Lebanon President Michel Aoun, Discuss Civil War, President Lauds Sri Sri's Efforts In Conflict Resolution

_Sri Sri-founded organization has been relentlessly working in Lebanon for peace and rehabilitation_

*Bengaluru, 19 December 2018*: After a historic visit to the UAE, global humanitarian and voice for peace and diversity, Gurudev Sri Sri Ravi Shankar was accorded a warm welcome in Lebanon by statesman, scholars, policy makers and the general public alike. 

 
During his brief visit, Gurudev met Lebanese President Michel Aoun at his presidential palace and Prime Minister Saad Hariri to discuss the ongoing civil war in Lebanon. Aoun lauded Gurudev's efforts in conflict resolution in the region. Gurudev was visiting the middle eastern country after 15 years. The founder of The Art of Living in his interaction with the state leaders discussed solutions to root out the trauma from the difficult past that the country has been through and usher in an era of peace and stress-free living.

Sri Sri Ravi Shankar-founded International Association For Human Values has been working with the locals and the refugee communities (including Syrian refugees) in Lebanon and Jordan to provide rehabilitation and trauma relief with a vision to help them rebuild their lives more meaningfully.


"Our main thing is to see that we are all connected," Gurudev said as part of an interactive session with Prof. Louis Saliba, author and Indianist scholar at an event titled 'Celebrating Diversity - Intercultural and Interfaith Reflections', "All religions are connected and it all comes down to the root of them all which is spirituality. Differences should not lead one to conflicts and unity should not weaken our roots."


Welcoming Gurudev as "one of the global ambassadors of peace, goodwill, brotherhood, cultural understanding," Mr. Sanjiv Arora, Indian Ambassador to Lebanon, shared while speaking at Waves of Happiness event in Beirut which was attended by over 1700 participants, "Wherever he travels, he makes friends and I would say that, that is very true of Lebanon, a country with whom, India's friendly relations are steeped in history. His brief visit here brings this message of peace, love, brotherhood and also reaffirms the historic ties of friendship between Lebanon and India."

Gurudev later also visited the Children's Cancer Center in Lebanon that treats children with cancer for free.

Through a series of workshops in Lebanon and Jordan (in and around Syrian refugee camps - Al-Za'tare, Al Mafraq, Al Zarqa and Al Azara governorates), Sri Sri Ravi Shankar-founded International Association For Human Valued has reached out to over 3000 war-affected children, 350 vulnerable youth,  frontline workers, caregivers and families in highly vulnerable areas of Jordan and Lebanon since December 2016.

Art of Living in Jordan and Lebanon

● Gurudev Sri Sri Ravi Shankar has visited Jordan and Lebanon earlier as part of his peace mission. During the 2006 Lebanon-Israel conflict, The Art of Living and IAHV volunteers actively helped people on both sides of the conflict cope with the severity of the situation.

● Around 2500 people have taken the Art of Living programs in Lebanon.

● The foundation has been operational in refugee camps in Tripoli since last 2 years.

● Programs for women are being conducted in South Lebanon

● To reduce these symptoms and help the children cope with their new reality, IAHV has conducted Stress Relief and Resilience (SRR) workshops for numerous children.

● In December 2016 , IAHV also spearheaded an 18 month long project co-funded by the European Union , "Healing, Resilience, and Non-Violent Empowerment of Children impacted by Armed Conflict in Jordan Lebanon" with an aim to enhance the well-being, resilience and psychological reintegration of 8,000 children impacted by armed conflict

With kind regards,

Rajalakshmi
Media Corodinator 
9884017767

Friday 14 December 2018

ரபேல் தீர்ப்பு : OPPosition and OPP.. Rafale Judgement

OPP - (O)FFSET -(P)RICE - (P)ROCEDURE -  & OPPosition
- செந்தில் ஆறுமுகம்

”செருப்புக்கேற்றவாறு காலை வெட்டிய கதை” இதுதான் ரபேல் விவகாரம். ஒப்பந்தம் போட்டுவிட்டு அதற்கேற்றவாறு விதிமுறைகள் மாற்றப்பட்டன.!!

ரபேல் தீர்ப்பு:  சட்டத்தின் பார்வையில், அரசிற்கு இராணுவ கொள்முதல் விதிமுறைகளை மாற்றுவதற்கு உரிமை இருக்கிறது. 
நமது பார்வையானது, அப்படி அவசர அவசரமாக விதிமுறைகளை மாற்றியது யார், யார் பயனடைவதற்கு என்பதே..!!  ( தற்போதுள்ள Offset policy, விதிமுறைகளின்படி யார் நினைத்தாலும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் Offset Partner ஆக வருவதை யாராலும் தடுக்க முடியாது 
என்பது வேறுவிவகாரம்..!!)  பிரதமர் மோடி ஏப்ரல் 2015ல் 36ரபேல் விமானங்கள் வாங்க பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் போட்ட பிறகு இந்தியாவின் இராணுவ கொள்முதல் விதிமுறைகள்(DPP) சட்டம் 2013ல் திருத்தம் கொண்டுவந்தது(ஜீன் 2015ல்) மற்றும் ஏற்கனவே போடப்பட்ட 126 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவது குறித்தான விதிமுறைகளானது, புதிய ஒப்பந்தம் போட்டுவிட்டு வந்து சாவகாசமாக நிறைவேற்றியது போன்றவை “யாருக்கோ” , “ஏதோ” உதவி செய்வதற்காகத்தான் என்ற சந்தேகத்தை வலுவாக்குகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், நீதிமன்றம் இதுபோன்றவற்றை எல்லாம் ஆதாரமாக எடுத்துக்கொள்வதில்லை..!! 

- செந்தில் ஆறுமுகம், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 87545-80274

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்பித்த அறிக்கை(Affidavit) - 





Thursday 13 December 2018

Press Release - Madurai Bench of the Madras High Court Acknowledges Art of Living Had All The Permissions In Place

Dear Editor,

In today's hearing by the Madurai Bench of the Madras High Court, in the Thanjavur Temple Case, the Honorable Judges recognized that the Art Of Living had obtained all necessary permissions from the appropriate authorities, which includes erecting a temporary tent within the temple grounds in order to conduct the spiritual and cultural program called Vigyan Bhairav. They also noted that there is a precedence of private events being held within the temple like film shootings. 

Please find the detailed press release below along with Tamil translation. 

Madurai Bench of the Madras High Court Acknowledges Art of Living Had All The Permissions In Place

13 December 13, 2018, Bengaluru: In today's hearing by the Madurai Bench of the Madras High Court, in the Thanjavur Temple Case, the Honorable Judges recognized that the Art Of Living had obtained all necessary permissions from the appropriate authorities, which includes erecting a temporary tent within the temple grounds in order to conduct the spiritual and cultural program called Vigyan Bhairav. They also noted that there is a precedence of private events being held within the temple like film shootings. 

"Unlike film shootings, the meditation event organised by the Art Of Living was in-line with the activities that can be conducted within a temple as outlined in Article 25 - 26 of the Indian Constitution. " says Ravi Ananth Padmanabhan, advocate of the Art Of Living.

Also, the World Culture Festival 2016 case reference taken by the petitioner was completely rejected by the Honorable Judges with full force.

அன்புள்ள ஆசிரியருக்கு, 

சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை பெஞ்ச், இன்றைய விசாரணையில், தஞ்சாவூர் கோவில் வழக்கில், மாண்பு மிகு  நீதிபதிகள், தி ஆர்ட் ஆஃப் லிவிங்  விங்ஞான்  பைரவ் என்னும் ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிக்காக கோவில் மைதானத்தில் தாற்காலிக கொட்டகை அமைப்பு ஏற்படுத்துவது உட்பட அனைத்து ஏற்பாடுகளுக்கும் ஏற்புடைய அதிகாரிகளிடமிருந்து தேவையான  அனுமதிகளை  பெற்றுள்ளனர் என்பதைக் கண்டறிந்த னர். மேலும் சினிமா படப்பிடிப்புகள் போன்ற  தனியார் நிகழ்வுகள் இதற்கு முன்னர்  கோவிலுக்குள் நிகழ்ந்திருப்பதையும்  இருப்பதையும் அவர்கள் குறித்தறிந்து  கொண்டனர்.

மொழிபெயர்ப்புடன் சேர்த்து விரிவான பத்திரிகை வெளியீட்டைக் கீழே காணவும்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை பெஞ்ச்,  தி ஆர்ட் ஆஃப் லிவிங் அனைத்து அனுமதியையும் பெற்றுள்ளது என்பதை ஏற்றுக் கொண்டது

13 டிசம்பர் 13, 2018, பெங்களூரு: சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை பெஞ்ச், தஞ்சாவூர் கோவில் வழக்கில் இன்றைய விசாரணையின்போது, தி ஆர்ட் ஆஃப் லிவிங் விங்ஞான்  பைரவ் என்னும் ஆன்மீக கலாச்சார நிகழ்ச்சிக்காக   கோவில் மைதானத்தில் தாற்காலிக கொட்டகை அமைப்பு ஏற்படுத்துவது உட்பட அனைத்து ஏற்பாடுகளுக்கும்  உரிய  அதிகாரி களிடமிருந்து தேவையான அனைத்து அனுமதியையும் பெற்றுள்ளது என்பதை மாண்பு மிகு    நீதிபதிகள் கண்டறிந்தனர். மேலும் சினிமா படப்பிடிப்புகள் போன்ற  தனியார் நிகழ்வுகள் இதற்கு முன்னர்  கோவிலுக்குள் நிகழ்ந்திருப்பதையும்  அவர்கள் குறித்தறிந்து  கொண்டனர்

"திரைப்படப் படப்பிடிப்புகள் போன்றல்லாமல்  இந்திய அரசியலமைப்பின் 25 -26  பிரிவு களில்  குறிப்பிடப்பட்டுள்ள  கோவிலுக்குள் நடத்தப் படக் கூடிய  நிகழ்ச்சி முறைமைப் படியே இந்த  தியான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது" என்று தி ஆர்ட் ஆஃப் லிவிங்கின்  வழக்கறிஞர் ரவி அனந்த் பத்மநாபன் கூறுகிறார்.

மேலும், உலக கலாசார விழா 2016 வழக்குரை மனுவை குறிப்பிட்ட மனுதாரரின் வாதத்தை மாண்பு மிகு நீதிபதிகள் முழுமையான அதிகாரத்துடன் நிராகரித்து விட்டனர்.


Friday 7 December 2018

The Art of Living Statement


Dear Editor,


Our volunteers are doing a lot of work in Gaja Cyclone affected areas of  Vedaranyam and Pudukottai. Gurudev Sri Sri Ravi Shankar was scheduled to go there to oversee the rehabilitation work. While he was there, the local people wanted Gurudev to facilitate a meditation program. 

Our local organizers had obtained all permissions from both the Hindu endowment board and the Archaeological Survey of India to organize this program in the Shiva temple in Thanjavur.  Since it is normal to have spiritual discourses in temples, the program was organised here. This is the first time a discourse on Kashmiri Shaivism is happening in South Tamil Nadu.

It is unfortunate that a couple of people with vested interests, who are least bothered about the temple, are quoting false allegations of the Yamuna flood plains and have approached the courts to prevent these spiritual activities from taking place in Tamil Nadu.

We have made alternative arrangements and the program is will taking place at the nearby Kaveri Mantapam.

Thursday 6 December 2018

Art of Living volunteers work in Gaja affected villages in South India

Chennai: December 6, 16.00 IST: In the aftermath of the cyclone Gaja, the Art of Living volunteers swung into action to provide relief materials to the affected villages of Thanjavur, Thiruvarur, Pudukottai and Nagapattinam. As on 5th December, we have covered 154 villages, benefiting 21456 families and distributed 81 tons worth materials, including essential supplies like potable water, rice, dals, milk powder, bread, etc. Tarpaulin sheets for those whose homes were damaged. Approximately 100+ volunteers are physically working on this project, everyday, backed by many more volunteers who are working hard to procure and reach the supplies to the common relief centre for the 4 districts.

 

Besides providing relief materials, under the guidance of Swami Sarveshwar, Brahmmachari SriTej, Senthil Subramaniyan, Youth Co-ordinator for Tamil Nadu and counsellors Rakesh Babu and Dr. Damodaran taught meditation & breathing exercises to the affected families. Mr. Senthil Subramaniyan  shared that, "It was heartening to see some of the villagers share that more than the relief materials which would last 3-4 days, the mediation sessions gave them mental peace and hope to face Life challenges." As part of long term relief measures, these sessions will continue in the affected districts.

For any further media related information, please call Rajalakshmi at 9884017767

 

Warm regards,


Rajalakshmi

Twitter: @aoltn

              @aol_chennai


Wednesday 5 December 2018

LIVE TELECAST-ASSEMBLY-மேகதாது - சிறப்பு சட்டமன்றக்கூட்டம் - கேரளா,கர்நாடகா போல் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்..

05-12-2018
சென்னை

அனுப்புநர்:
செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
H42/3,மேற்கு அவென்யூ,
காமராஜ் நகர், திருவான்மியூர்,
சென்னை-600041
87545-80274

பெறுநர்:
1. சபாநாயகர்
2. சட்டசபைச் செயலாளர்,
3. தலைமைச் செயலாளர்
4. முதலமைச்சர்
தலைமைச் செயலகம்,
சென்னை-600009

வணக்கம்,
பொருள்: மேகதாது-சிறப்பு சட்டமன்றக் கூட்டம்- தொலைக்காட்சி, இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு கோரி...

தமிழக கவர்னர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆணையின்படி நாளை(06-12-2018) மாலை 4 மணிக்கு, தமிழக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் நடைபெற இருப்பதாக அறிய வருகிறேன். மேகதாது அணை கட்ட
கர்நாடக அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து விவாதித்து, தீர்மானம் இயற்றுவதற்காக இக்கூட்டம் கூட உள்ளதாகவும் அறிகிறேன்.

தமிழக டெல்டா பகுதிகள் கஜா புயலால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளது. இந்த சூழலில், காவிரியில் நமக்குக் கிடைக்கவேண்டிய தண்ணீர் உரிய அளவில் கிடைக்கவில்லை என்றால், அது விவசாயிகளுக்கு மட்டுமல்ல அதைக் குடிநீராகப் பயன்படுத்தும் பல இலட்சம் பேருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை உணர்ந்து, இதுகுறித்து தமிழக அரசு சட்டசபையில் சிறப்புக்கூட்டம் நடத்துவது வரவேற்கத்தக்க  நல்ல முயற்சியே..!!

இந்த சிறப்புக்கூட்டத்தில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரதிநிதிகளாக ஆளுங்கட்சி,எதிர்கட்சி,கூட்டணிக்கட்சிகளின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் தங்கள் நிலைப்பாடுகளை,கருத்துக்களை முன்வைத்துப் பேச உள்ளார்கள். மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் வாதங்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேரவேண்டும் என்று கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கும் என்று நம்புகிறேன். மேலும், வாக்களித்த பொதுமக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளின் சட்டமன்ற செயல்பாடுகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள உரிமையும் உண்டு. இதனைச் சாத்தியமாக்க, இந்த சிறப்புச் சட்டமன்ற நிகழ்வை நேரடியாக தொலைக்காட்சி, இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.

மேகதாது அணை பிரச்னை மற்றும் அதனால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை ஆளுங்கட்சி, எதிர்கட்சியினர் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்வதன் மூலம் கடைக்கோடி டெல்டா கிராமத்தில் உள்ள விவசாயி கூட தன்னுடைய பிரச்னை பற்றி சட்டமன்றத்தில் என்ன கருத்து முன்வைக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்ள இயலும். மேலும், செய்தியை விரிவாகப் பதிவு செய்ய ஊடகங்களுக்கும் இது உதவியாக இருக்கும். 

கேரளா-கர்நாடகாவில் நேரடி ஒளிபரப்பு:

பக்கத்து மாநிலமான கேரளாவில் சட்டமன்ற நிகழ்வுகள் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ( http://103.251.43.36/indexnew.htm?source=rtmp://103.251.43.36/live/livestream&type=vod ). தற்போதுகூட கேரளத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது(டிசம்பர் 13 வரை). கேரள அரசு சட்டசபையின் இணையதளத்தில், சபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு கொடுக்கப்படுவதோடு, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் பேசியவற்றையும் இணையத்தில் வீடியோக்களாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விவாத்தில்(04-12-2018) பேசிய 33 எம்.எல்.ஏக்களின் வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் உள்ளது, யார் வேண்டுமானாலும் இதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.


   ( கேரளாவில் இணையத்தில் நேரலையில் சட்டமன்றம் )

கர்நாடகாவின் சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய தனியார் தொலைக்காட்சிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. இந்த வழிமுறையைத் தமிழகமும் பின்பற்றினால், மாநில அரசிற்கு எந்தவித செலவுமின்றி சட்டசபை நிகழ்வுகளை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பார்க்கச்செய்ய முடியும்.

இதனைக் கருத்தில்கொண்டுதான், நாடாளுமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதுபோல்,  சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி 2012ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தோம்(WP14824/2012 - வழக்கு தொடுத்த குழுவில் நானும் ஒருவன்). தமிழக அரசு பல்வேறு காரணங்களை முன்வைத்து நேரடி ஒளிபரப்பு தர மறுத்துவருவதும், இவ்வழக்கு நிலுவையில் இருப்பதும் உங்களுக்கு நன்கு தெரியும். 

சட்டமன்றத்தின் சிறப்பு நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று எங்கள் வழக்கிற்கு சட்டசபை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில்(03-09-2012) குறிப்பிடப்பட்டுள்ளது. கவர்னர் உரை, பட்ஜெட் உரை போன்ற சிறப்பு நிகழ்வுகள் ஏற்கனவே நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அந்த அடிப்படையில், மேகதாது அணை குறித்து நாளை(06-12-2018) நடைபெறவுள்ள சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தையும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யக்கோருகிறோம். ( உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல்  செய்த பதில் மனுவின்படி, மேகதாது குறித்தான இச்சிறப்பு நிகழ்வானது நேரடி ஒளிபரப்பு கொடுக்கப்பட்டதா இல்லையா என்பதைக் குறிப்பிட்டு, அடுத்த விசாரணையின்போது  நாங்கள் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.)

எங்களின் பொதுநலவழக்கிற்கு, நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த ஆவணத்தின்படியும், கடைக்கோடி விவசாயி ஒருவரும் தன்னுடைய பிரச்னை குறித்து சட்டமன்றத்தில் என்ன பேசப்பட்டது என்பதை "முழுமையாக" அறியும் உரிமை அந்த விவசாயிக்கு உள்ளது என்ற அடிப்படையிலும் நாளை சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள "மேகதாது அணை" குறித்தான சிறப்பு விவாதம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஜனநாயகம் என்பது மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களுடைய அரசாங்கம். இதில் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது மிக அவசியம். இதனைக் கருத்தில் கொண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். 

இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு தருவதோ;  தனியார் தொலைக்காட்சிகள் சட்டசபை நிகழ்வுகளை முழுமையாகப் படம்பிடிக்க அனுமதிப்பதோ, எதுவாக இருந்தாலும் அதுபோன்றதொரு நிகழ்வு இதுதான் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இருக்கும். அப்படிப்பட்டதொரு முதல் முயற்சியை தாங்கள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சமயத்தில், "சிறப்பு நிகழ்வுகள்" மட்டுமில்லாமல் சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் முழுமையாக நேரடி ஒளிபரப்பக் கோரும் எங்களது பொதுநல மனு மீதான அடுத்த விசாரணையின் போது, இதற்கு அரசு தயாராக உள்ளது என்று சாதகமான பதில் மனுவைத் தாக்கல் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி !! 

செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர்
87545-80274

Monday 26 November 2018

Art of Living volunteers work for Gaja Relief in 4 affected districts of Tamil Nadu

Dear Editor,

In the aftermath of the cyclone Gaja, the Art of Living volunteers swung into action to provide relief materials to the affected villages of Thanjavur, Thiruvarur, Pudukottai and Nagapattinam. As on 26th November, we have covered 60 villages, benefiting 5375 families and distributed 20 tons worth materialsincluding essential supplies like potable water, rice, dals, milk powder, bread, etc. Tarpaulin sheets for those whose homes were damaged. Approximately 100+ volunteers are physically working on this project, everyday, backed by many more volunteers who are working hard to procure and reach the supplies to the common relief centre for the 4 districts.

As we speak, our team is distributing relief to 6 villages  in Vedaranyam region today, 27th Nov reaching out to 2975 families ( Kuravapulam - Keezhkadu @ 8 am - 175 families; Kuravaulam - Vadakkadu @ 10 am - 300 families; Katharipulam @ 11 am - 500 families; Manjakanni Marudhur @ 12 noon - 300 families; Pranthiyakarai 2 2 pm - 700 families; Vadamazhai Manakad @ 3.30 pm - 1000 families. 

If you wish to speak to some of the volunteers today, you can call Rakesh Babu @9444551388 OR  Senthil @ 9487757510. You can send reporters to the above villages to understand the extent of damage to these villages and our efforts to get them back on their feet. You may reach out to me for media related information

Best regards,

Rajalakshmi

Media Co-ordinator
Mobile: 9884017767

Saturday 24 November 2018

Representation to Income Tax Dept -Reg 2400Cr Kickbacks - 2400கோடி இலஞ்சம் தொடர்பாக வருமான வரித்துறைக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு..


ரூ.2400 கோடி லஞ்சம்(சத்துணவுத் திட்டத்தில்) : கிறிஸ்டி நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை  மத்திய,மாநில அரசுகளுக்கு உடனே அனுப்பி வைக்கவேண்டும் - வருமான வரித்துறைக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு (Representation)

மனுவின் சுருக்கம்:   (  முழுவிவரம் படிக்க:   https://spipressrelease.blogspot.com/2018/11/rs2400cr-kickbacks-income-tax.html )

ரூ.2400 கோடி லஞ்சம்(சத்துணவுத் திட்டத்தில்) !!  இதில் நடந்துள்ள இலஞ்ச-ஊழல் குறித்தான விசாரணை உடனடியாகத் தொடங்கப்படவேண்டும். அதற்கு,  கிறிஸ்டி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில்(ஜீலை 2018) கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறையானது உடனடியாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கவேண்டும். இந்த ஆவணங்களில்  எந்தெந்த அரசியல்வாதிகளுக்கு, அதிகாரிகளுக்கு எவ்வளவு கோடி இலஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறித்தான "ரகசிய வார்த்தைகள்"(Code word)  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரித்துறையிடமிருந்து பெறப்படும் ஆவணங்களின் அடிப்படையில் சத்துணவுத் திட்டத்தில் நடந்துள்ள இலஞ்ச-ஊழல் குறித்தான விசாரணைக்கு தமிழக அரசு உடனே உத்தரவிடவேண்டும்.

செந்தில் ஆறுமுகம், 8754580274
பொதுச்செயலாளர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம்

Friday 23 November 2018

” கஜா புயல் : அவசரம் ஆறு” - கள அறிக்கை - பத்திரிகை செய்தி-23-11-2018: GAJA CYCLONE: FIELD REPORT - PRESS RELEASE


சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 பத்திரிகை செய்தி (23-11-2018)

தொடர்புக்கு : 87545 80274


கஜா புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சட்ட பஞ்சாயத்து இயக்கக் குழுவினரின் கள அறிக்கை: ( அரசு உடனடியாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து )
                                       
                       
"கஜா புயல் :  அவசரம் ஆறு"

      1.      மின் இணைப்பு, மரங்கள்   

2.  முகாம்களிலிருந்து வீடு திரும்ப
3.  NGOs, தொழில் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு

4.  செல்போன் தொடர்பு
5.  வி.ஏ.ஓக்கள் கிராமத்தில் தங்கும் அரசாணை;உள்ளாட்சித் தேர்தல்

6.  நீட் தேர்வு தேதி நீட்டிப்பு



1. மின் இணைப்பு, வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்த :

 

விழுந்துகிடக்கும் இலட்சக்கணக்கான மின்கம்பங்களை அப்புறப்படுத்தி, புதிய மின்கம்பங்களை நடுவதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.  சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஊழியர்களுக்கு ஒவ்வொரு நாளும் மூன்றுமடங்கு சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது நல்ல அணுகுமுறை. மின்வாரிய ஊழியர்களும் பல்வேறு சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு மின்கம்பங்களைப் பதிக்கப் போராடி வருகிறார்கள். அந்தக் கடைநிலை ஊழியர்களின் பணி அளப்பரியது. ஆனால், தேவைகளோடு ஒப்பிட்டால் களத்திலுள்ள அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைவே.

 

மின்கம்பம் நடுதலில், தொழில்நுட்பம் சாராத, மனித உழைப்பு(Labour work) மட்டும் தேவைப்படும் பணிகளில் ஈடுபட விருப்பம் உள்ள உள்ளூர்/வெளியூர் பொதுமக்களும் இப்பணிகளில் ஈடுபடலாம் என்று அறிவிப்பு கொடுத்தால் ஏராளமான பணியாட்கள் கிடைப்பார்கள்( அவசரம் கருதி மின்வாரிய ஊழியர்களுக்குக் கொடுப்பதைப்போல் நல்லதொரு தினக்கூலியை அவர்களுக்கும் கொடுக்கவேண்டும்.). போதிய மரம் அறுக்கும் உபகரணங்கள் கொடுத்து, வீழ்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தவும் இந்தத் தற்காலிகப் பணியாளர்களைப் பயன்படுத்தலாம். இவர்களிடம் வேலை வாங்குவது, இவர்களுக்கு முறையாக தினக்கூலி கொடுப்பது போன்றவற்றில் நடைமுறை சிக்கல் நிறைய இருக்கிறது என்றாலும், இதுபோன்ற வழியில் மேலும் பல்லாயிரக்கணக்கான தற்காலிகப் பணியாளர்களைக் களமிறக்காவிட்டால் அறுந்து கிடக்கும் மரங்களையும், மின்கம்பங்களையும் சீரமைக்க மாதங்கள் பல ஆகிவிடும். இராணுவத்தின் உதவியையும் கோரிப்பெற்றால் சீரமைப்புப் பணிகள் இன்னும் விரைவாக நடைபெறும். (சென்னையில் உள்ளதுபோல் பூமிக்கடியில் மின்சார கேபிள்களை பதிக்கும் திட்டம் குறித்து பரிசீலப்பது அவசியமாகிறது. இல்லையேல், இப்போது நடப்படும் மின்கம்பங்கள் அடுத்த புயலில் சாய்ந்துவிடும்!!)


2.    முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்ப:


2.1 புயல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள நாகை மாவட்டத்தில் இன்னும் ஏராளமான மக்கள் அரசு முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வீடு திரும்பவே விருப்பப்படுகின்றனர். சிதிலமடைந்துள்ள வீட்டின் மேற்கூரையின் மேல் போர்த்த ஒரு பிளாஸ்டிக் தார்பாய், போர்வை,பாய்,  துணி போன்ற அடிப்படைப் பொருட்கள் கிடைத்தால் மக்கள் வீடு திரும்புவார்கள். இதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். ( முற்றாக இடிந்துபோன குடிசை வீடு, ஓட்டு வீடுகளில் வசித்தோருக்கு இதுவும் சாத்தியமில்லை)

 

2.2 சில கிராமங்களில் அடிபம்புகளில் தண்ணீர் வருவதால் குடிநீர் பிரச்னையை சமாளிக்கிறார்கள். பல இடங்களில் இது சாத்தியமாக இல்லை. ஆகவே, குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ள பகுதிகளில் தற்காலிகமாக ஜெனரேட்டர் மூலம் மின்மோட்டரை இயக்கி, மக்களுக்கு குடிநீர் தரவேண்டும் அரசு.

 

2.3 மின்சாரம் கிடைக்க இன்னும் பல வாரங்கள் ஆகும் என்ற நிலையில், வீட்டிற்கு 1 லிட்டர் மண்ணென்ணெய் கொடுத்தால் மக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். இதற்காக, மத்திய அரசிடமிருந்து சிறப்பு உதவியைக் கோரலாம். இது உடனடியாக சாத்தியமில்லை என்றால் வீட்டிற்கு வீடு மெழுகுவர்த்தி, தீப்பெட்டி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. மின்சாரம் இல்லாமல் ஒருவாரம் கடந்துவிட்டது என்பதை நினைவில் கொள்வோம்.

 

3. NGO, தொழில் நிறுவனங்களின் உதவி-ஒருங்கிணைப்பு:

 

நிவாரணப் பொருட்கள் கொண்டுவரும் தன்னார்வலர்கள், NGOக்கள் மற்றும் அரசாங்கத்தின் இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால் பொருட்களைக் கொண்டுவருவோர் தேவையுள்ள மக்களுக்கு தங்கள் பொருட்களைக் கொண்டுசேர்ப்பதற்கு முடியாமல் சிரமப்படும் சூழல் உருவாகிறது. இவ்வளவு நிவாரணப் பொருட்கள் வந்தும், உள்கிராமங்களில் "ஒரு மெழுகுவர்த்தி, தீப்பெட்டியாவது கொடுங்க" என்று மக்கள் கெஞ்சும் நிலையில் உள்ளனர்.  ஆகவே, நிவாரணப் பொருட்கள் தர முன்வரும் NGOக்கள், தொழில்நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பு இருந்தால் நிவாரணப் பணிகள் இன்னும் சிறப்பாக நடக்கும்.

 

ஒரு சில கிராமங்கள் அல்லது முகாம்களை ஒரு தொகுப்பாக்கி(Group),  ஒவ்வொரு தொகுப்பின் அவசரத் தேவைகளைத் தீர்த்துவைக்க, உதவ முன்வந்துள்ள நிறுவனங்களில் ஒன்றைப்  பொறுப்பாக்கலாம். அரசின் உதவியோடு, ஒருங்கிணைப்போடு உள்ளூர் மக்களின் உடனடித் தேவைகளைத் தீர்த்துவைக்க இந்நிறுவனங்களின் உதவியைப் பெறலாம்.

குளறுபடிகள் ஏதுமின்றி, அனைத்து கிராமங்களுக்கும், அடிப்படை உதவிகள் கிடைத்திட இந்த ஒருங்கிணைப்பு உதவியாக இருக்கும்.

 

 

4. செல்போன் தொடர்பு:


அரசின் அறிவிப்புகள் மக்களிடம் சென்று சேர, நிவாரணப் பொருட்கள் வழங்குதல், அவசரப் பிரச்னைகள் குறித்து தகவல் தர, பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு போன்ற பலவற்றிற்கும் செல்போன் இணைப்பு அத்தியாவசியமாகிறது. ஆகவே, செல்போன் நிறுவனங்களுக்கு நெருக்குதல் கொடுத்து ஜெனரேட்டர் மூலமாக டவர்களை இயக்கச் செய்யவோ அல்லது நடமாடும் டவர்களை அமைக்கவோ செய்யவேண்டும் அரசு.  (  பக்கத்து நகரங்களில், மெயின் ரோட்டில், பெரிய பாட்டரிகள் கொண்டு ஒரே நேரத்தில் கொத்துக் கொத்தாக செல்போன்கள் சார்ஜ் செய்து தரப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்துகொள்ள ரூ.20 கட்டணம் !! ) செல்போன் தொடர்பு வந்துவிட்டால், நிவாரணப் பணிகள் இன்னும் விரைவாக நடைபெறும்.  21ம்நூற்றாண்டில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின்  உறவினர்கள்(வெளியூர்களில் உள்ள) , தனது உறவினரின் நிலை என்ன என்று அறிந்துகொள்ள முடியாமல் பரிதவிக்கும் நிலை கொடுமையிலும், கொடுமை. குடிநீர், மின்சாரம், உணவு போன்றவை போல், செல்போன் தொடர்பும் இன்றைக்கு ஒரு அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் அரசு.

5. வி.ஏ.ஓ.க்கள் கிராமத்தில் தங்க உத்தரவிட வேண்டும், தங்காதவர்கள் டிஸ்மிஸ், உள்ளாட்சித் தேர்தல்:

 

வி.ஏ.ஓ. எனும் கிராம நிர்வாக அதிகாரி, அவர் பணியாற்றும் வருவாய் கிராமத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்பது அரசு விதிமுறை. இதற்காக தனி அரசு ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது, நீதிமன்ற உத்தரவும் உள்ளது.  மாநில அரசின் பிரதிநிதியாக, மக்களின் அருகிலேயே தங்கி, மக்களுக்கு அரசின் சேவைகளை கொண்டு சேர்க்க, அவர்களுக்கு பிரச்னை வரும்போது உதவுவதற்கு உருவாக்கப்பட்டதே வி.ஏ.ஓ.பணி. ஆனால், பணியில் சேரும் போது, கிராமத்தில் தங்குவேன் என்ற விதிமுறையில் கையெழுத்து போட்டுவிட்டு, அருகிலுள்ள நகரத்தில்தான் பெரும்பாலான வி.ஏ.ஓ.க்கள் தங்குகின்றனர். இதனால், கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, கஜா புயல் போன்ற பாதிப்புக் காலங்களில் வி.ஏ.ஓ.க்களின் பணி மிகவும் முக்கியமானது. மக்களுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக இருக்கவேண்டியது அவர்களே. ஆனால், இன்றோ "பாலத்தைக் காணவில்லை" என்று மக்கள் தேடவேண்டி உள்ளது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல கிராமங்களுக்கு இன்றுவரை பல வி.ஏ.ஓக்கள் வரவில்லை என்பது வேதனையின் உச்சம்.

 

ஆகவே, ஏற்கனவே போடப்பட்ட அரசு ஆணையை(வி.ஏ.ஓக்கள் கிராமத்தில் தங்க) கண்டிப்பாக செயல்படுத்த வலியுறுத்தி தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்.  இந்த அடிப்படைக் கடமையை செய்யாத வி.ஏ.ஓக்கள் முதலில் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள், இறுதியில் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்ற அதிரடி உத்தரவை அரசு பிறப்பிக்கவேண்டும்.


பல்வேறு அரசியல் காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதனால் பஞ்சாயத்து தலைவர், வார்டுமெம்பர் போன்ற உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இல்லை.
வி.ஏ.ஓ. ஊரில் இல்லை. 

 

6.நீட் தேர்வு விண்ணப்ப தேதியை நீட்டிக்கவேண்டும்:
( Extension of last date to apply for NEET Exam..)


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் நெருங்கி வருகிறது( கடைசி நாள்: நவம்பர் 30). புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள மாணவர்களும் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க உதவும் வகையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் கொடுக்கவேண்டும். தமிழக அரசானது, மத்திய அரசிற்கு இதுகுறித்து உடனடியாகத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்னும் ஒருவாரமே அவகாசம் உள்ளதால் அரசின் அவசர நடவடிக்கை அவசியமாகிறது.

  

வாழ்ந்த வீடு அழிந்துவிட்டது;  வாழ்வாதாரமாக இருந்த மரங்கள் வீழ்ந்துவிட்டது;  குடிநீர், துணி உள்ளிட்ட அடிப்படைப் பொருட்கள் கூடக் கிடைக்கவில்லை; இழப்பீட்டை கணக்கிடுவதில் உள்ள குளறுபடிகளைத் தட்டிக்கேட்க, மக்களின் தோளோடு தோளாக "தொடர்ந்து" நிற்க யாருமில்லாமல் .  "நாதியற்றவர்களாக" நிற்கிறார்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள். அரசு விரைந்து செயல்படவேண்டிய தருணமிது,  

 

செந்தில் ஆறுமுகம்,

பொதுச்செயலாளர்,

சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
87545-80274

Friday 16 November 2018

Press Release: UAE Accords Royal Welcome to Sri Sri


Dear Editor,

Gurudev Sri Sri Ravi Shankar, founder of The Art of Living, is on a four day visit to UAE on a special invite from the Royal Family of Emirate of Fujairah. In a lively interaction with over 5000 workers at Sharjah Expo Centre, Gurudev shared simple practical keys to happiness and peace. On Thursday, the packed Fujairah Football Stadium lit up in colors of culture and spirituality as Gurudev led thousands of Emiratis through a powerful meditation at Illuminate Peace event organized by the government of Fujairah to celebrate the country's spirit of peace and harmony on International Day of Tolerance.

Please find the detailed press release below. Here are the pictures and translations. 

--------------------------------------------------------------------------------------------------

Royals, Diplomats, And 5000 workers: UAE Accords Warm Welcome To Sri Sri
Ruler of Fujairah praises Indian spiritual leader for bringing yoga and meditation to thousands

Dubai, 16 November 2018: In a lively interaction with over 5000 workers at Sharjah Expo Centre, Gurudev Sri Sri Ravi Shankar, founder of The Art of Living, shared simple practical keys to happiness and peace. On Thursday, the packed Fujairah Football Stadium lit up in colors of culture and spirituality as Gurudev led thousands of Emiratis through a powerful meditation at Illuminate Peace event organized by the government of Fujairah to celebrate the country's spirit of peace and harmony on International Day of Tolerance.

The Crown prince of Fujairah, Sheikh Mohammed bin Hamad bin Mohammed Al Sharqi, who was present during the Illuminate Peace Event called Gurudev the 'Master of Love'.

Sheikh Hamad said that the UAE has encouraged peaceful coexistence and unity between various cultures while affirming its commitment to tolerance, as well as its efforts to strengthen international unity. He commended Sri Sri's humanitarian initiatives and contribution in upholding human values. 

Earlier that day, Gurudev and the Art of Living delegation was accorded a warm reception at the royal palace in Al Rumailah by Sheikh Hamad bin Mohammed Al Sharqi, Supreme Council Member and Ruler of Fujairah and the members of the Royal family, the Emirates and the Indian diaspora including M.A. Yusuff Ali, B.R. Shetty, Jawahar Gangaramani, and Ajay Khimji. Gurudev is on a four day visit to UAE on a special invite by the ruler of Fujairah. 

H.E. Ahmed Aboul Gheit, Secretary-General of the Arab League also called on Sri Sri to discuss the geo-political situation prevailing in the region. 

"We want to bring happiness in the whole Arab world," Gurudev said while addressing the gathering, "The Art of Living is doing its bit to bring solace to the people of Iraq, Syriya, Lebanon and Jordan." Gurudev also spoke about the values and need for diversity in a rapidly shrinking global village. He also shared why few minutes of meditation every day and knowledge about the breath is an unavoidable tool to fight aggression and depression in the modern society.  Meditation was followed by a cultural program with traditional Arabic music recital, a Yoga dance and an Indian classical dance.

Between 16 and 17 November, as part of 'Unveiling Infinity' program, Gurudev will lead over 6000 participants through a unique two day masterclass in ancient meditative techniques, yoga, simple exercises and practical wisdom that hitherto lay buried in esoteric texts.

You can find the pictures here-

Best regards,

Rajalakshmi
98840 17767
Media Co-ordinator - TN

Friday 26 October 2018

Reason for Localbody election delay is due to "ORDINANCE PASSED" BY Tamilnadu Government" !! உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளிப்போவதற்குக் காரணம் அதிமுக அரசு பிறப்பித்த அவசரச் சட்டமே(Ordinance) ..!! - சட்ட பஞ்சாயத்து இயக்க பத்திரிகை செய்தி(26-10-2018)


Reason for Localbody election delay is due to "ORDINANCE PASSED BY Tamilnadu Government" !!  
              உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளிப்போவதற்குக் காரணம் 
             அதிமுக அரசு  பிறப்பித்த அவசரச் சட்டமே(Ordinance) ..!! 

சட்ட பஞ்சாயத்து இயக்கம்  -  பத்திரிகைச் செய்தி( 26-10-2018), 87545-80274, 87545-80270

உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போவதற்குக் காரணம் அதிமுக அரசு  பிறப்பித்த அவசரச் சட்டமே(Ordinance) காரணம்..!!  உயர்நீதிமன்றத்தின் கண்டிப்பிற்கு ஆளான தமிழக அரசு, உச்சநீதிமன்றத்திலும் அசிங்கப்பட்டு தமிழகத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்தாமல் இருக்க உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் !!   திங்கட்கிழமை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று அவசரச் சட்டம் இயற்றி உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதைத் தள்ளிப்போடுவதில் காட்டிய "வேகத்தை","சட்ட நுணுக்கத்தை" விரைவாக தேர்தல் நடத்தப்படுவதில் காட்டவேண்டும்.  - சட்ட பஞ்சாயத்து இயக்கம் குற்றச்சாட்டு, கோரிக்கை

மீண்டுமொருமுறை தமிழக அரசின் தலையில் கொட்டியிருக்கிறது உச்சநீதிமன்றம்.  இந்த வாரத்தில் இது இரண்டாவது முறை. லோக் ஆயுக்தா ஏன் இன்னும் அமைக்கப்படவில்லை என்று இரு நாட்களுக்கு முன்னர் தமிழக அரசைக் கேள்விகேட்ட உச்சநீதிமன்றம், இன்று   உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை என்று கேள்வி கேட்டு 4 வாரத்திற்குள் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

2 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத தமிழக அரசு, இதற்குச் சொல்லிவரும் காரணம் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியிலான வார்டு மறுவரையறைகள் முடிக்கப்படவேண்டும் என்பதே. இது பச்சைப் பொய். உடனடியாக தேர்தல் நடத்தப்படாமல் இருக்க அதிமுக கண்டுபிடித்த காரணம்.  பழங்குடியினருக்கு உரிய தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று கூறி திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இக்காரணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த உயர்நீதிமன்றம், தமிழ்நாடு பஞ்சாயத்துராஜ் சட்டம்,1994ல் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றாமல் அவசர கோலத்தில் தேர்தல் நடத்தப்பட்டது சட்டவிதிவீறல் என்ற அடிப்படையில் 04-10-2016 அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை ரத்துசெய்தது. 
கூடவே, குறைபாடுகளைச் சரிசெய்து டிசம்பர் 31,2016க்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கூறியது. 

அதேசமயத்தில்,  2011 மக்கள்தொகை அடிப்படையில்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவேண்டும், அதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடைவிதிக்கவேண்டும் என்று கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் "..எந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படவேண்டும்" என்பதுபோன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடத்தப்படுவதற்கு தடை விதிக்க முடியாது" என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அதாவது, 2011 மக்கள்தொகை அடிப்படையில்தான் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

பிறகு எந்த அடிப்படையில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டுவரையறைகள் முடிந்தபின்புதான் 
தேர்தலை நடத்துவோம் என்று அதிமுக அரசு  தொடர்ந்து சொல்கிறது...?
 
"பிள்ளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும்" வழியை தமிழக அரசு பின்பற்றியது என்றால் மிகையில்லை. ஆம், டிசம்பர் 31,2016க்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன் அவர்களின் உத்தரவைப் பின்பற்றப்படவில்லை, உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிடப்படவேண்டும் என்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 04-09-2017 அன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது(இத் தீர்ப்பில்தான் நவம்பர்17,2017க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்திமுடிக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது) . 04-09-2017அதாவது திங்கட்கிழமையன்று, உயர்நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு ஒரு நாள் முன்னர், அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று(03-09-2017) அவசர,அவசரமாக ஒரு அவசரச் சட்டத்தை(Ordinance) பிறப்பித்தது தமிழக அரசு (TAMIL NADU ORDINANCE No. 4 OF 2017). 

அந்த அவசரச் சட்டத்தில் என்ன சொல்லப்பட்டது? 
5 சட்டங்கள் இந்த அவசரச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டிருந்தது (1. Chennai City Municipal Corporation Act, 1919,  2. The Madurai City Municipal Corporation Act, 1971, 3. The Coimbatore City Municipal Corporation Act, 1981, 4.Tamil Nadu District Municipalities Act, 1920  5. Tamil Nadu Panchayats Act, 1994). 

எதற்காக இந்த 5 சட்டங்கள் திருத்தப்பட்டன ?  
தமிழக அரசு, 2011 மக்கள்தொகை அடிப்படையில்  வார்டு வரையறைகள் முடித்தபின்புதான் தேர்தல் நடத்தமுடியும் என்று தொடர்ந்து "பொய்" சொல்லிவந்தது. ஆனால், இப்போது நடைமுறையில் உள்ள உள்ளாட்சிச் சட்டங்கள் தமிழக அரசின் வாதத்திற்கு எதிராக இருந்தது. தன்னுடைய பொய்வாதத்திற்கு உதவாத சட்டப்பிரிவுகளை நீக்கிவிட்டால், திங்கட்கிழமையன்று(04-09-17) நீதிமன்றத்தில் தப்பித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தது தமிழக அரசு. ஞாயிற்றுக்கிழமையன்று(03-09-17) அவசர அவசரமாக, 5 சட்டங்களைத் திருத்தி அவசரச் சட்டம் இயற்றியது. எடுத்துக்காட்டாக, 12524 கிராமப் பஞ்சாயத்துகள் தொடர்பான திருத்தத்தின் வரிகள் இப்படி இருந்தது.   "...."In the Tamil Nadu Panchayats Act, 1994, sections 28-A, 28-AA and 28-AAA shall be omitted." . அதாவது, பிரிவு 28-A,28-AA,28-AAA ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டது. இந்தப்பிரிவுகளின்படி வார்டு வரையறைகளில் மாற்றம் ஏதும் செய்யாமல், இப்போதுள்ள வார்டு வரையறைகளின் படியே தேர்தல் நடத்தலாம் என்பதுதான்..!!  

ஆக, இப்போது இருக்கும் சட்டத்தின்படி, எந்த மாற்றமும் வார்டுகளில் செய்யவேண்டியதில்லை. ஆனால், தமிழக அரசிற்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் விருப்பமில்லை. இரட்டை இலை  சின்னம் கிடைத்தபின்னும், ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியான அதிமுக தோற்றது. எனவே, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்க அதிமுக அரசால் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த "பொய்யை" நியாயப்படுத்த ஒரு அவசரச்சட்டம் இயற்றப்பட்டது. பின்னர், 04-09-2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி அவர்கள் முன்பு நடைபெற்ற வாதத்தில் "...தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியுள்ளதால், எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது. உடனடியாகத் தேர்தலை நடத்த முடியாது" என்று மாநிலத் தேர்தல் ஆணையம் வாதிட்டது. (ஆனாலும், இவ்வாதங்களை ஏற்காமல், நவம்பர்17,2017க்குள் தேர்தலை நடத்துங்கள் என்று இந்திரா பேனர்ஜி அவர்கள் உத்தரவிட்டார் என்பது வேறு விவகாரம்). இது "பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் வேலை"தானே ?

அதிமுக அரசின் அரசியல் காரணங்களுக்காக உள்ளாட்சிச் சட்டத்தைத் திருத்திவிட்டு, நீதிமன்றத்தில் வந்து "... உள்ளாட்சிச் சட்டதிருத்தத்தின்படி, 2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு வரையறைகள் முடிவுற்ற பின்னர்தான் தேர்தல் நடத்தமுடியும்" என்று "சட்ட நுணுக்கம் !?" பேசுகிறது அதிமுக அரசு. 

சரி... விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட என்ன செய்யவேண்டும் ?

1. 2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு வரையறைகள் மாற்றும் பணி விரைவாக முடிக்கப்பட்டு, ஓரிரு மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

2.  2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்து முடிப்பதற்கு நீண்டகாலம் பிடிக்கும் என்று தமிழக அரசு கருதினால், இப்போதுள்ள வார்டு வரையறைகளின் அடிப்படையிலேயே உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் (  03-09-2017 அன்று நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துவிட்டால்,  இப்போதுள்ள வார்டுகளின் அடிப்படையில் தேர்தல் நடத்த சட்டசிக்கல் எதுவும் வராது )

லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவர பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் குரல்கொடுத்த வந்தபோதும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்தான் அச்சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது.  அதேபோல், உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள், பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தியும் தமிழக அரசு அதைச் செய்யவில்லை. இப்போது, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்தான் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டம் இயற்றப்படுவதையும், சட்டங்கள் செயல்படுத்தப்படுவதையும் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும்தான் செய்யும் என்றால், மக்கள் மனதில் எழும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்  "தமிழகத்தில் ஆட்சி எதற்கு..? அரசு எதற்கு...?" 

"மாநில சுயாட்சி"க்காகக் உரத்துக் குரல்கொடுத்த அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருக்கும் ஆளும் அதிமுக அரசு, "கிராம சுயாட்சி"யைத் துச்சமென மதிப்பது கொடுமையிலும் கொடுமை.

உச்சநீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பாக, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவேண்டும் என்று மீண்டுமொருமுறை தமிழக அரசை சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
87545-80274, 87545-80270

Tuesday 23 October 2018

SPI Press release - விரைந்து வருவது உணவா? எமனா?

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

பத்திரிகை செய்தி (23-10-2018)
தொடர்புக்கு : 87545 80270 / 88704 72179

விரைந்து வருவது உணவா? எமனா?
செயலிகள் மூலம் உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் சாலை விதிகளை
தொடர்ந்து மீறும் செயலை தடுத்து நிறுத்த காவல்துறையிடம் சட்ட பஞ்சாயத்து
இயக்கம் மனு! 73% உணவு விநியோக ஊழியர்கள் சாலை விதிகளை மீறுகின்றனர் - கள
ஆய்வில் கண்டுபிடிப்பு!!

வீட்டிலிருந்தபடியே கைபேசி மூலம் நமக்கு தேவையான உணவுகளையும் நமக்கு
அருகில் உள்ள உணவகங்களையும் கைபேசியில் காண்பிக்கும்
Swiggy, Zomato, FoodPanda, UberEats மற்றும் பல
நிறுவனங்களின் கைபேசி செயலிகள் உணவு நுகர்வு சந்தையில் ஒரு பெரிய
மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் கிடைத்த
அமோக வரவேற்பை அடுத்து, நகர/மாநகரங்களில் அந்நிறுவனங்கள் தங்களின் சேவையை
விரிவுப்படுத்தி வருகின்றன. நாட்டில் வேலையின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான
இளைஞர்களுக்கு பகுதி நேர/முழு நேர ஊழியர்களாக வேலை பார்க்க ஒரு
வாய்ப்பையும் இந்நிறுவனங்கள் உருவாக்கியிருக்கின்றன. நிறுவனங்கள் -
வாடிக்கையாளர்கள் - அந்நிறுவன ஊழியர்கள் என இத்துறையின் அனைத்து
பங்குதாரர்களுக்கும் பயனடையும் வகையில் தொழில் மாதிரி
அமைக்கப்பட்டுள்ளதால் இத்துறை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது.
உணவு நுகர்வுத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திவரும்
இந்நிறுவனங்கள், உடனடி கவனத்தை ஈர்க்கும் பிரச்சனையையும் கண்டுகொள்ளாமல்
இருக்கிறது.

அவற்றில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட வேண்டியது அந்நிறுவன விநியோகப்
பணியாளர்களின் சாலை விதிமீறல் பிரச்சனைகள். ஹெல்மெட் அணியாமை, Earphone
அணிந்து செல்வது / ஒருவழி சாலையில் பயணிப்பது, Signal களை மதிக்காமல்
அதிவேகமாக செல்வது மற்றும் இதனால் ஏற்படும் விபத்துகள் ஆகியவற்றை நாம்
தினந்தோறும் சாலைகளில் கண்டு வருகிறோம். கடந்த சில மாதங்களாக
இப்பிரச்னையின் வீரியம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உணவு விநியோக
ஊழியர்கள் தொடர்ந்து சாலை விதிகளை மீறுவதால், பல இடங்களில் மோதல்கள்
மற்றும் சிறு விபத்துகளை தொடர்ந்து காண முடிகிறது. தொடர்ச்சியாக சாலை
விதிகளை உணவு விநியோக ஊழியர்கள் மீறுவதால், மற்ற இளைஞர்களுக்கு தவறான
முன்னுதாரணத்தையும் ஏற்படுத்துகிறது. இப்பிரச்சனையால் பெரிய விபத்துகள்
ஏற்படும் முன் தகுந்த நேரத்தில் தடுக்க வேண்டுமென சட்ட பஞ்சாயத்து
இயக்கம் முயற்சி செய்து வருகிறது.

இயக்க தன்னார்வலர்கள் ஐந்து பேர் இணைந்து வேளச்சேரி மற்றும் OMR சாலையில்
ஏற்படும் விதிமீறல் எண்ணிக்கை மற்றும் புகைப்பட ஆதாரங்களை களப்பணி மூலம்
சேகரித்து மேற்கூறிய நிறுவங்களின் twitter முகவரியில் புகார்
அளிக்கப்பட்டது. 73% உணவு விநியோக ஊழியர்கள் ஏதாவது ஒரு வகையில் சாலை
விதிகளை மீறுவதை கள ஆய்வு உறுதிப்படுத்தியது. இணையவாசிகள் மத்தியில்
வெளிப்படையாக புகார் கூறியதும் உடனடியாக தங்கள் நிறுவன ஊழியர்களிடம்
அறிவுறுத்துவதாக பதிலளித்ததோடு இந்நிறுவங்கள் நிறுத்திக்கொண்டன.
அந்நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த எந்த
நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை மாநகர காவல் துறை ஆணையர்
திரு.விஸ்வநாதன் அவர்களுக்கு கடந்த 22/10/2018 அன்று புகார் மனு ஒன்று
அனுப்பப்பட்டுள்ளது. விபத்துகளின் விகிதம் அதிகமுள்ள தெற்கு சென்னை
ஆணையர் மற்றும் காவல்துறை ஆய்வாளர்களை நேரில் சந்தித்து மனு
அளிக்கப்பட்டுள்ளது. (மனுவின் நகல் இணைக்கப்பட்டுள்ளது).

மேலும், விநியோகப் பணியாளர்களுக்கும் அந்தந்த நிறுவனங்களுக்கும் தகுந்த
அறிவுரை மற்றும் எச்சரிக்கையை போக்குவரத்து காவலர்கள் வழங்க உத்தரவிடவும்
கோரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, விநியோகப் பணியாளர்களை மருத்துவமனையில்
விபத்து பிரிவிற்கு நேரில் அழைத்து சென்று விதிமீறலால் ஏற்படும் தேவையற்ற
இன்னல்கள் குறித்து நேரடியாக விளக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது போன்ற புது பிரச்சனைகளை கையாள மோட்டார் வாகன சட்டத்தில் தகுந்த
திருத்தங்கள் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்து வைத்தோம்.

இயக்கத்தின் சார்பாக Swiggy நிறுவனத்திற்கும் நேரில் சென்று அவர்களின்
விநியோகப் பணியாளர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க கூறியுள்ளோம். (மனு
இணைக்கப்பட்டுள்ளது) மேலும், Order செய்யப்பட்ட 30 நிமிடத்திற்குள் உணவு
பண்டங்களை விநியோகிக்க வேண்டுமென உள்ள எதிர்பார்ப்பை போக்குவரத்து
நெரிசலை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கவேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டுள்ளோம். விநியோகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள்
பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற் போல் வணிக மாதிரியை
அமைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

காவல்துறையும் Swiggy மற்றும் பிற நிறுவனங்களும் விநியோகப் பணியாளர்கள்
சாலைகளில் விதிமீறலின்றி பயணிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க உடனடியாக
ஆவண செய்யவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

செந்தில் ஆறுமுகம்
பொது செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்


ENGLISH VERSION:

Restaurant search and food delivery applications like Swiggy, Zomato,
FoodPanda, UberEats etc. have created a revolution in the food
industry by providing a user friendly app-based food ordering and by
delivering food at the doorstep. These platforms have created
thousands of job opportunities to the employment-deprived youth of the
country. After the phenomenal success of the delivery service in the
metropolitan cities, the companies have begun to penetrate the tier 2
and tier 3 cities. As the market size of these companies grow larger
day by day, it creates a win-win situation for the consumers, delivery
boys and entrepreneurs. That being said, however, there is a looming
problem that needs to be addressed!

To make more incentives and get better ratings, delivery boys violate
traffic rules at ease. Needless to say, the issue multiplies during
the peak hours. This in turn creates a huge havoc in the roads, widely
noticed in the past few months. Not wearing helmets, riding with
headphones, violating one-ways, overspeeding and jumping signals have
become the new norm for these delivery boys. Face-offs between
delivery boys and riders and minor accidents has become a part of the
day to day life in Chennai. Before the rate and the degree of
accidents sky-rocket because of the issue, Satta Panchayat Iyakkam
(SPI) wants the timely addressal of the issue.

A team of 5 members from SPI conducted a field study to collect the
violation rate and photos in the Velachery and OMR areas. It was found
out that atleast 73% of the delivery boys violate the traffic rules in
someway in our field survey. With these evidences and ground work, SPI
issued complaints via twitter to the delivery apps in order to address
the issue. Though Swiggy's twitter team was lightening quick to
respond there were no changes made in the field, as one could still
observe Swiggy's team violating the traffic rules. So, We escalated
the issue to the Chennai Police and has lodged a number of complaints
and petitions to the Chennai Police on the same, on 22nd October 2018.
SPI has also sent a copy of the complaint letter (attached herewith)
to Mr. A.K. Vishwanathan, Commissioner of Police, Chennai,.

SPI has requested the Traffic Police to issue strong orders to the
violating delivery companies and delivery boys so that they will not
violate the rules. We have also asked the City Police to take the
delivery boys to the accident wards in hospitals to emphasize on the
serious repercussions of traffic violation. We have also asked the
Police officials to draft the new rules and regulations for the
industry and requested them to make necessary changes in the Motor
vehicle act 1988 to deal the habitual offenders.

SPI also met with the Swiggy Team to appraise them on the dangers of
violating traffic rules. SPI requested them to set the customer
expectations right so that delivery boys will not be under unnecessary
pressure that leads to such dangerous violations. SPI also suggested
to relax the 30 minutes delivery window so that the delivery boys will
have ample time for delivery. SPI volunteers to conduct awareness
sessions among the delivery boys from time to time to create awareness
on the impact these acts will have on precious lives.

Satta Panchayat Iyakkam requests the Chennai City Police and the
Chennai Traffic Cops to take necessary actions to the control the
menace, the delivery boys have been creating in the past few months.
SPI also wants the Swiggy and other food delivery companies to alter
their work culture for a larger good.

Senthil Arumugam
General Secretary, Satta Panchayat Iyakkam


COPY OF SPI'S COMPLAINT TO SWIGGY

22/10/2018
Chennai
FROM:
A.Jai Ganesh
Secretary, Satta Panchayat Iyakkam
Kamaraj Nagar, Thiruvanmiyur, Chennai

To
The General Manager - Swiggy
LBR Towers, Tenampet
Chennai


SUBJECT: Repeated Traffic rule violations and Dangerous driving by
Swiggy Delivery boys

Respected Sir,

We are extremely happy and proud that Swiggy has revolutionized the
food industry in the country. Satta Panchayat Iyakkam heartily
congratulates Swiggy for its profound achievements and for employing
thousands of youths who were devoid of jobs and careers.

In order to make more incentives, Swiggy delivery boys have begun to
violate traffic rules and this has become a "New Normal" for past few
days. On our field survey, We could witness at least 10 traffic
violations by Swiggy delivery boys in 30 minutes. Not wearing Helmets,
Using headphones while driving, Overspeeding, Taking wrong routes are
the violations that Delivery boys do consistently. Though we
understand the nature of the Job, these violations cannot be tolerated
and is hazardous to the common public. Tamilnadu has witnessed 7719
deaths due to road accidents in 2018 and there are high chances that
Swiggy aggravates this number in the near future. Lives of the
delivery boys and vehicle riders are more important than making
incentives.

We made few complaints in Twitter for Swiggy's corrective actions.
However there has been no change in delivery boy's attitude even after
that. Hence, We kindly request you to take immediate necessary steps
to ensure that delivery boys don't violate the traffic rules. We
sincerely believe that Swiggy will take a stern action on the above
issue before a disaster happens.


Thanks
Jai Ganesh



COPY OF SPI'S COMPLAINT TO CHENNAI POLICE OFFICIALS

22/10/2018
சென்னை

அனுப்புநர்:
அ.ஜெய் கணேஷ்
மாநில அமைப்பு செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
காமராஜ் நகர், திருவான்மியூர், சென்னை -600041

பெறுநர்:
1) திரு. AK. விஸ்வநாதன்
கமிஷனர், சென்னை

2) திரு.சாரங்கன் IPS
கமிஷனர், சென்னை (தெற்கு)

3) திரு.சாமிநாதன்
துணை கமிஷனர், சென்னை போக்குவரத்து (தெற்கு)

4) Mr. Sasankh Sai IPS
துணை கமிஷனர், அடையார்

5) திரு.சுதாகர்
இணை ஆணையர் , சென்னை

6) காவல்துறை ஆய்வாளர்
துரைப்பாக்கம், சென்னை


பொருள்: Online Food delivery சேவைகளில் உள்ள நிறுவனங்களின் விநோயகப்
பணியாளர்களுக்கான போக்குவரத்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கிட வேண்டி

இணையத்தளம் மற்றும் Mobile Application-கள் மூலம் பலதரப்பட்ட சேவைகள்
இக்காலத்தில் கிடைத்து வருகிறது. அதில், சமீபத்திய வரவானவை Online Food
Delivery சேவைகள். நாம் இருக்கும் இடத்திற்கு கேட்கும் உணவுகளை குறுகிய
நேரத்தில் எடுத்து வந்து சேர்க்கின்றனர். இந்த சேவைகளை
வாடிக்கையாளர்களுக்கு விரைவாக அளிக்க தனியார் நிறுவனங்கள் Delivery
Boys(விநியோகப் பணியாளர்கள்) என்ற பெயரில் இளைஞர்களை பணியில் அமர்த்தி
செயல்பட்டு வருகின்றன.
வாடிக்கையாளர்களின் தேவைகளை Mobile Application மூலம் ஏற்கும்
நிறுவனங்கள், அந்நிறுவனங்களுக்கு அந்தந்த பகுதிகளில் பணியாற்றும்
விநியோகப் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்து, குறிப்பிட்ட நேரத்திற்குள்
Delivery செய்யப்படும் என வாடிக்கையாளர்களுக்கும் தகவல்
தெரிவிக்கப்படுகிறது. அதிக விநியோகம் செய்தால் கூடுதல் ஊக்கத்தொகை
தரப்படுவதால், விநியோக பணியாளர்கள் சாலை விதிகளை மதிக்க மறுக்கின்றனர்.
அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக விநியோகப் பணியாளர்கள் பின்வரும் செயல்களில்
ஈடுபடுவதை தினமும் காண முடிகிறது.
1) விரைவாக Delivery செய்ய இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணிப்பது.
2) சாலையின் எதிர்திசையில் அதிவேகமாக பயணிப்பது. (சமீபத்தில் வேளச்சேரி
மேம்பாலத்தில் தவறான திசையில் பயணிப்பதை காண முடிந்தது)
3) செல்போன்-ஐ பயன்படுத்திக்கொண்டு வாகனம் ஓட்டுவது
4) ஹெல்மெட் அணியாமல் ஹெட்போன் உடன் வாகனம் ஓட்டுவது
5) சிக்னல், யூ டர்ன் மற்றும் மற்ற சாலை விதிகளை புறக்கணிப்பது
மேற்கூறிய சாலைசட்ட விதிமீறல்கள் தினம் நூற்றுக்கணக்கில் நடந்துவருவதை
சென்னை மாநகரில் தொடர்ந்து காணமுடிகிறது. குறிப்பாக, மென்பொருள்
நிறுவனங்கள், கல்லூரிகள் அதிகம் உள்ள OMR மற்றும் ECR நெடுஞ்சாலைகளில்
இது போன்ற செயல்களை அதிகமாக காண முடிகிறது. இச்சாலைகளில் விபத்துகளும்
கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன. எடுத்துகாட்டாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம்
தேதி மாலை துரைப்பாக்கம் பகுதியில் எதிர் திசையில் வந்த Swiggy நிறுவன
விநியோகப் பணியாளர், என் நண்பர் ஒருவர் மீதி மோதி விபத்துக்குள்ளாக
நேரிட்டது. அந்த இடத்தில் வயதான நபரோ அல்ல பெண்களோ பயணிக்க
நேரிட்டிருந்தால் அது பெரிய விபத்தாகியிருக்ககூடும். இது போன்ற சாலை
விதிமீறல்கள் தினம் நடப்பதால், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது.
அது தவிர, விநியோக பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு
பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இவற்றை பொதுமக்கள் மற்றும் விநியோகப் பணியாளர்கள் நலன் கருதி
உடனடியாக தடுத்திட ஆவன செய்ய ஏதுவாக தங்களின் மேலான கவனத்திற்கு
கொண்டுவருகிறேன். நோய்களை விட சாலை விபத்துகளே தமிழ்நாட்டில் 2018இல்
(ஜூலை வரை. 7256 பலி) அதிக உயிர்களை காவு வாங்கிருக்கிறது என்பதயும்
குறிப்பிட விரும்புகிறேன்.இதை பரிசீலித்து Swiggy, Uber Eats, Zomato
மற்றும் இத்துறையில் இயங்கும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு தகுந்த வழிகாட்டு
நெறிமுறைகளை காவல்துறை சார்பில் அளிக்க வழிவகை செய்யுமாறு வேண்டுகிறேன்.
பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன் காவல்துறை தகுந்த நடவடிக்கைகளை
எடுக்கும் என்று நம்புகிறேன்.


இப்படிக்கு,
அ.ஜெய் கணேஷ்

TWITTER COMPLAINT LINKS

https://twitter.com/Rangaprasad_KPR/status/1037548756923604993?s=19

https://twitter.com/Rangaprasad_KPR/status/1052835337502777344?s=19