Saturday 16 January 2021

Press Invite_உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கை - 2021


பெறுநர்

தலைமை நிருபர்

உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கை-2021

பத்திரிகையாளர் சந்திப்பு

நாள்: 18-01-2021/ திங்கட்கிழமை
இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்
நேரம்: காலை 11:30 மணி
தொடர்புக்கு: 9445700758/ 9976783073/ 9944849744

தமிழகத்தில் பல ஆண்டுகள் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் இன்றுவரை 9 மாவட்டங்களில் நடத்தப்படாமல் இருக்கும் ஊரக மற்றும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், முறையான நிதிப்பகிர்வின்மை, பேக்கேஜ் டெண்டர் போன்ற ஊராட்சிகளின் அதிகாரத்தில் தலையீடு செய்யும் செயல்பாடுகள், கொரோனாவைக் காரணம் காட்டி கிராமசபையை ஏறத்தாழ ஓராண்டாக நடத்தாமல் இருப்பது, மத்திய அரசின் மாதிரி நகர ராஜ் மசோதா 2006-ன் அடிப்படையில், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் சார்ந்த சட்டங்களில் (Act 35 of 2010) கொண்டு வந்த திருத்தங்களுக்கு விதிகள் இன்னும் வகுக்கப்படாமல் இருப்பது ஆகியவை உள்ளாட்சிகளைத் தமிழக அரசு கிள்ளுக்கீரையாக நினைப்பதேயே காட்டுகிறது.

இந்தச் சூழலில், தன்னாட்சி, மக்களின் குரல் (Voice of People), Institute of Grassroots Governance [IGG], தோழன் இயக்கம், அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் தொகுக்கப்பட்டுள்ள கிராமப்புற மற்றும் நகரப்புற உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டு விளக்க, பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறோம்.

இந்த முக்கிய சந்திப்பிற்கு, தங்களது நிருபரை அனுப்பி, உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகளை மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கொண்டு செல்ல ஒத்துழைக்க வேண்டுகிறோம். நன்றி!

17.01.2021,
சென்னை.

(M. ஜாஹிர் ஹுசைன்)
துணைத் தலைவர்,
தன்னாட்சி
(உள்ளாட்சிஉங்களாட்சி)
69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை
மின்னஞ்சல்: thannatchi@gmail.com