Thursday 23 February 2017

PRESS MEET: Reg Police threatning on volunteers of Jallikattu protest.. காவல்துறையின் அச்சுறுத்தலைக் கண்டித்து... நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன் அவர்கள் விசாரணையைத் தொடங்கக் கோரி

RESS MEET: Condemning police threatning on volunteers of Jallikattu protest.. Demanding immediate enquiry by Justice.S.Rajeswaran with the affected youths - A volunteer who was hospitalised by police attack in jallikattu protest also participates and explains how he was threatened.  


24-02-2017, Friday,  Satta Panchayat Iyakkam office(31, south west boag road, T.Nagar), 87545-80270, 87545-80274

பத்திரிகையாளர் சந்திப்பு: 24-02-2017, வெள்ளி, நண்பகல் 12 மணி, சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகம் 87545-80270,87545-80274

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில்  காவல்துறையின் கொடூரத் தாக்குதலால் காயம்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களை, காவல்துறை தொடர்ந்து  அச்சுறுத்தி வருவதைக் கண்டித்து...  போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன் அவர்கள் விசாரணையைத் தொடங்கக் கோரியும்... காவல்துறையின் அச்சுறுத்தலுக்குள்ளான  இளைஞனும் பங்கேற்பு..

சிவ.இளங்கோ, தலைவர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
87545-80270,87545-80274


Thursday 16 February 2017

PRESS RELEASE: Governor should have put the Assembly on Suspended Animation...ஆளுநர் ஓரிரு மாதங்கள் சட்டசபையை முடக்கி வைத்திருக்க வேண்டும்.

          ENGLISH PRESS RELEAE CAN BE FOUND IN ATTACHMENT
தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருவதால்

ஆளுநர் ஓரிரு மாதங்கள் சட்டசபையை முடக்கி வைத்திருக்க வேண்டும்.

  • எடப்பாடி பழனிசாமி அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பது பெரும்பான்மை மக்களின் கருத்திற்கு எதிரானது

      பத்திரிக்கை செய்தி (16-02-2017) – சட்ட பஞ்சாயத்து இயக்கம்

சொத்து குவிப்பு வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும். அதுவரை சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க தடை விதிக்க வேண்டும். மேலும் MLA அல்லாத ஒருவர் முதல்வராக வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் 06/02/2017 அன்று வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு நாளை 17/02/2017 விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் வரை காத்திருந்து, சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காததற்கு தமிழக மக்கள் சார்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் மேதகு ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருகிறது. ஒரு பக்கம் 124 MLAக்களை கூவத்தூர் நட்சத்திர விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். கூவத்தூரில் இருந்து தப்பி வந்த சில MLAக்கள் கட்டாயப்படுத்தி அங்கு தங்க வைக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.சரவணன் இது குறித்து காவல்துறையிலும் புகார் தெரிவித்துள்ளார். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல முதலமைச்சர் O.பன்னீர்செல்வம் அவர்களே அவரை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியதாக புகார் கொடுத்துள்ளார். மாநில முதலமைச்சரை மிரட்டி கையெழுத்து போட வைத்து அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளனர். மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதாக முதலமைச்சர் சொல்லும் புகாரை ஒதுக்கி தள்ளிவிடவும் முடியாது. ஏனெனில் சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதிட்ட திரு. ஆச்சார்யா அவர்களையே கடுமையாக மிரட்டிவர்கள் தான் இவர்கள்.

எனவே தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் அசாதாரண சூழலில் யாரையும் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்காமல் சட்டசபையை ஆளுநர் முடக்கி வைத்திருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் அவர்கள் இன்று 16 பிப்ரவரி, திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஆட்சி அமைக்குமாறு அழைத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த 1 வாரமாக அடைத்துவைக்கப்பட்டு, இப்பொழுது மக்களின் உண்மை கருத்தறியாமல் ஒரு ஆட்சி பதவியேற்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அடைத்து வைக்கப்பட்டுள்ள MLAக்கள் சுதந்திரமாக அவர்கள் தொகுதியில் மக்கள் பணி செய்ய ஆரம்பித்து 1 மாதத்திற்கு பிறகு யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதே சரியான முடிவாக இருந்திருக்கும்.

எந்தக் காரணங்களுக்காக முதலமைச்சராக பதவியேற்க யாரையும் இதுவரை அழைக்காமல் ஆளுநர் அவர்கள் காலம் தாழ்த்தி வந்தாரோ, அந்தக் காரணங்கள் இன்று(எடப்பாடி பழனிச்சாமியை அழைத்ததன் மூலம்) அர்த்தமற்றதாகிவிட்டது. கண்முன்னே நடந்த ஜனநாயகப் படுகொலையை ஆளுநர் கண்டுகொள்ளாமல் விட்ட தோடு, அதற்கு மறைமுகமாகத் துணை போனது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள எங்களைப் போன்ற பொது நல அமைப்புகளுக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது.


சிவ.இளங்கோ,
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 87545-80270, 87545-80274

16-02-2017

Sunday 12 February 2017

CBI Should probe the possible Illegal activities(Rs.200 Cr) behind the Disproportionate Asset case...சொத்துக்குவிப்பு வழக்கின் பின்புலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சட்ட த்திற்குப் புறம்பான செயல்பாடுகளை(ரூ.200கோடி) சி.பி.ஐ. உடனடியாக விசாரிக்க வேண்டும்.

                                                                    PRESS RELEASE(12/2/2017)

           CBI Should probe the possible Illegal activities
   behind the Disproportionate Asset case
                                                                          Attached the representation given to CBI
                            பத்திரிகை செய்தி( 12/02/2017)

   சொத்துக்குவிப்பு வழக்கின் பின்புலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும்
சட்ட த்திற்குப் புறம்பான செயல்பாடுகளை சி.பி.. உடனடியாக விசாரிக்க வேண்டும்
.

                                           சி.பி.ஐக்கு கொடுக்கப்பட்ட மனு, இணைப்பில்...


                                               (தமிழில் விரிவான பத்திரிகை செய்தி - கீழே)


Satta Panchayat Iyakkam has been creating awareness and fighting against corruption

continuously. Has exposed many corruption with evidence acquired using Right to Information (RTI).
Because of these works, many people reach us with their evidence and information on various corruption 
issues, requesting us to expose the same. Likewise, we have received some documents recently.

These documents seem to indicate that, In the Disproportionate asset case on former
chief minister Ms.J.Jayalalitha (recently passed away), Sasikala, Illavarasi and Sudhakaran, 
during the appeal hearing in Bengaluru High court, there seem to be some illegal activities happened
in influencing the judgement in favour of the accused.

Generally, when we receive documents related to corruption, we publish it only after analyzing the
veracity of the evidence. But since this document involves Chief Minister, Judge - to establish the
authenticity, for us it will take too long. Hence we have submitted this document to Central Bureau of
Investigation (CBI). We submitted this document on 10/02/2017 in-person at the CBI head
office in Delhi and have received acknowledgement for the same(attached). 

We request the CBI to investigate this documents and take appropriate action
quickly. We also request the press to analyse these documents from all perspective and bring the truth.
Satta Panchayat Iyakkam will continue to work on collecting more evidence based on this documents
and will bring it to the notice of CBI and public.

We would like to bring it to notice that the Special Public Prosecutor  B.V.Acharya in the disproportionate 
assets case resigned in August 2012, saying "...he had suffered untold hardship and embarrassment at the
 instance of interested parties". Pressure form interested parties even to former Advocate-General indicates 
the interesting parties has been trying to wield their influence to shape the outcome in their favour in the past too.
It is presumed that these powerful interested parties will fight tooth and nail to get themselves acquitted.
Otherwise, their political future will be in stake. 
Hence, there is a possibility of the above said illegal efforts by the accused.

The Judiciary is the guardian of democracy and we hold judiciary in the highest regards. 
Without the Judiciary's outstanding orders, disclosure of criminal background and assets of candidates & their family
would not have been possible. 
It's imperative that any possible irregularities must be looked into to protect the Judiciary. 

Note: We have also sent a copy of the representation to Chief Justice of India.

Thanks,

Siva Elango,
President, Satta Panchayt Iyakkam
87545-80270, 87545-80274

Attachments:
1. Representation given to CBI(with acknowledgement)  
2. Satta Panchayat executives photo infront of CBI,Delhi after giving representation

       சொத்துக்குவிப்பு வழக்கின் பின்புலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் 
சட்ட த்திற்குப் புறம்பான செயல்பாடுகளை சி.பி.உடனடியாக விசாரிக்க வேண்டும்
.

                                                               பத்திரிகை செய்தி( 12/02/2017)

சட்ட பஞ்சாயத்து இயக்கமானது இலஞ் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுப் பணிகள், போராட்டங்கள்

நடத்திவருகிறது. பல்வேறு ஊழல்களை தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது. 

இயக்கத்தின் இதுபோன்ற செயல்பாடுகளால், 

இலஞ்ச ஊழல் தொடர்பான பல்வேறு தகவல், தாரங்களை பொதுமக்கள், அமைப்புகள் எங்கள் இயக்கத்திற்கு அளித்து அதனை அம்பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்வார்கள். 

அந்த வகையில் சமீபத்தில் எங்களுக்கு சில ஆவணங்கள் கிடைத்தனஇந் ஆவணங்களானது முதல்வராக இருந்து மறைந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூர் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணையில் விடுதலையானதின் பின்புலத்தில் சட்டவிரோத செயல்பாடுகள்(ரூ.200கோடி பணப்பரிமாற்றம் தொடர்பாக) இருந்தன என்ற பொருள்படும் வகையில் இருக்கிறது.

 

பொதுவாக, ஊழல் தொடர்பாக எங்களின் பார்வைக்குக் கொண்டுவரப்படும் ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்த பின்பே வெளியிடுவோம். ஆனால், இந்த ஆவணங்கள் முதலமைச்சர், நீதிபதி போன்றவர்கள் தொடர்பானது என்பதால் இதன் உண்மைத்தன்மையை நாங்கள் உறுதிப்படுத்த நீண்ட காலம் பிடிக்கும். ஆகவே, இலஞ்ச-ஊழலை விசாரிக்கும் மத்திய அமைப்பான மத்திய புலனாய்வுத் துறையிடம்(CBI)  இந்த ஆவணங்களை சமர்பித்துள்ளோம். 10/02/2017 அன்று டெல்லியில் உள்ள சி.பி. தலைமை அலுவலகத்தில் எங்களுக்கு வந்த ஆவணங்களை நேரில் கொண்டுசென்று கொடுத்துள்ளோம்(அதற்கான ஒப்புகை(Acknowledgement) வாங்கியுள்ளோம்.)

 

இதுபோன்ற முறைகேடுகள் சாத்தியமா என்று கேள்வி, சந்தேகம் எழலாம். வழக்கிலிருந்து விடுதலையாகாவிட்டால் தங்கள் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று கருதும் அதிகார மற்றும் பணபலமிக்கவர்கள் எப்பாடுபட்டேனும் தங்களை வழக்கிலிருந்து விடுவித்துக்கொள்ள முயற்சிப்பார்கள் என்பதற்கு முன்னுதாரணங்கள் இருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அரசின் சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றிய B.V.ஆச்சார்யா அவர்கள் வழக்கு நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில்(ஆகஸ்ட் 2012ல்) "...சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடையவர்களால் எல்லையில்லா துன்பங்களையும், சங்கடங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது" என்று சொல்லிவிட்டு இந்த வழக்கிற்காக வாதாடுவதிலிருந்து விலகிய சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். சொத்துக்குவிப்பு வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞருக்கு அழுத்தம் கொடுத்த சம்பந்தப்பட்ட அரசியல் சக்திகள், தங்களை வழக்கிலிருந்து விடுவித்துக்கொள்ள எந்தவிதமான சட்டவிரோதச் செயல்பாடுகளிலும் ஈடுபடுவார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

ஜனநாயகத்தை, அரசியல் சாசனத்தின் மாண்புகளைக் காப்பற்றி வருவது நீதிமன்றங்களே. 
அப்படிப்பட்ட நீதிமன்றங்கள் மீதும், நீதி பரிபாலணை மீதும் நாங்கள் உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறோம்.
தேர்தலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள்தான் காரணமாக இருந்திருக்கிறது.
தேர்தலில் போட்டியிடுபவர்களின் குற்றப்பின்னணி, சொத்துவிவரங்களை வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால்தான்
இன்று பஞ்சாயத்துத் தேர்தலிலிருந்து பாராளுமன்றத் தேர்தல்வரை போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின்  குற்றப்பின்னணி, சொத்துவிவரங்களை 
வெளியிடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். தேர்தலில் போட்டியிடுபவர்களின் முழுவிவரங்களை அறிந்துகொள்வதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது என்பதை
உறுதிசெய்தது உச்சநீதிமன்றமே என்பதை நாங்கள் அறிவோம். 

இருந்தபோதிலும், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட செல்வாக்குமிக்க நபர்களின் நெருக்கடி,அழுத்தத்தின் காரணமாக நடந்திருக்க வாய்ப்புள்ள
இந்த சட்டவிரோத செயல்பாடுகள் நீதித்துறையின் மாண்பைக் குலைப்பதாக இருந்துவிடக்கூடாது என்பதே எங்கள் விருப்பம். 

சி.பி.ஐ.யின் தீவிர விசாரணை, ஊடகங்களின் அழுத்தம் இருந்தால் இதுகுறித்த முழு உண்மையை விரைவில் வெளிக்கொண்டுவர முடியும்.
சட்ட பஞ்சாயத்து இயக்கமும் இந்த ஆவணங்கள் குறித்து மேற்படியான தகவலை, ஆதாரங்களை திரட்டி மக்களின் பார்வைக்கு, சி.பி..யின் கவனத்திற்குக் கொண்டுவரும். 

ஊழல்வாதிகள், சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் மூலம் நீதியை வளைக்க நினைப்பவர்கள்  யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கை.

குறிப்பு: சிபிஐக்கு கொடுத்த மனுவின் நகலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பியுள்ளோம்.

இணைப்பில்:  
1. டெல்லி, சிபிஐ அலுவலகத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கொடுத்த மனுவின் சாராம்சம்(தமிழில்)  
2. Text of original version in English
3. டெல்லிம் சிபிஐ அலுவலகத்தில் மனுகொடுக்கும் சட்ட பஞ்சாயத்து நிர்வாகிகளின் படம்

சிவ.இளங்கோ,
தலைவர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
87545-80270, 87545-80274

Wednesday 8 February 2017

Don't SWEAR IN Sasikala.. Supreme Court Affidavit., .Satta Panchayat Representation to President,Governor..சசிகலாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது.. கவர்னர், ஜனாதிபதிக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு..

Sir,

Attached :
our detailed affidavit(50+ pages) in Supreme Court - reg sasikala Sewaring in ceremony
and
Our latest Representation(dt 08-02-2017) to President of India, Governor,Chief Justice of India

Senthil Arumugam, General Secretary, Satta Panchayat Iyakkam, 87545-80274, 87545-80270

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி உள்ள சூழல், விவசாயிகள் தற்கொலை போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டிய தமிழக அரசு நிர்வாகத்தின் கவனம் அனைத்தையும் தன்னுடைய 
பதவிப்பிரமாணத்திற்காக, முதலமைச்சர் நாற்காலியில் அமரவேண்டும் என்ற சுயநலத்திற்காகவும் சீரழித்துவருவது தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலே காணாத புதுவகையான "அரசியல் அசிங்கம்". 

இன்னும் ஒருவாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் சிறைக்கு அனுப்பப்படவும் வாய்ப்புள்ள சசிகலா அவர்கள் அவசர அவசரமாக முதல்வர் நாற்காலியில் அமர ஆசைப்படுவது ஏன்..? சிறைக்குச் செல்லும்போது முதலமைச்சராக இருந்தால் சிறப்பு சலுகைகள், பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்காகவா..?

இதுவரை ஒரு பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகூட வகிக்காத சசிகலா அவர்கள்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவைப் பெற்ற முதல்வர் பன்னீர் செல்வத்தையே மிரட்டுகிறார் என்றால்;  
காவல்துறையைத் தன் கையில் வைத்திருக்கும் முதல்வரையே மிரட்டுகிறார் என்றால்... சசிகலா அவர்கள் முதல்வர் ஆகிவிட்டால் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துவிடும் என்பது நிச்சயம். அரசு கஜனா சூறையாடப்படும் என்பது உறுதி..

ஆகவே, சட்ட பஞ்சாயத்து இயக்கம் சசிகலாவை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்துவைக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இந்த வழக்கு எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரலாம்(நாளையே கூட வரலாம்..) 

ஆகவே, பெரும்பான்மை  சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலும்(மிரட்டி வாங்கப்பட்ட) சசிகலாவை முதல்வராக அறிவிக்கக்கூடாது என்று ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் இன்று மனு ஒன்றை அனுப்பியுள்ளோம்.


செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
8754580274, 8754580274

Wednesday 1 February 2017

Press Release: Budget 10Lakh crore for Agri Loan.. Should not become a case of "OPERATION SUCCESS, PATIENT DEAD"

pdf attached..

                       மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள
10 லட்சம்கோடி விவசாயக் கடன் – விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்குமா..?
       
                             சட்ட பஞ்சாயத்து இயக்கம்
                             பத்திரிகை செய்தி(02-02-2017)


மத்திய பட்ஜெட்டில் வேளாண் கடனுக்கு ரூ.10லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க முக்கிய அம்சம்(சென்ற ஆண்டு 9 இலட்சம் கோடி). ஆனால், நடைமுறையில் விவசாயிகளுக்கு இக்கடன் எளிதில் கிடைக்கிறதா என்றால், இல்லை; "Justice Delayed is Justice Denied" என்பார்கள். அதுபோல விவசாயத்திற்கு, உரிய காலத்தில் கடன் கிடைக்கவில்லை என்றால் அக்கடன் கிடைத்தும் பயன் இல்லை.

கூட்டுறவு, அரசு வங்கிகளில் கடன் கிடைக்காததால் கந்துவட்டிக்காரர்கள், தனியார் நிறுவனங்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்குகின்றனர் விவசாயிகள். பயிர் கருகியதும், கடனைக் கட்ட வழியில்லை, எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது என்ற வேதனையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள் அல்லது அதிர்ச்சியில் சாகிறார்கள் விவசாயிகள்.


காவிரியிலும் தண்ணீர் வரவில்லை, மழையும் பொய்த்துவிட்டது, கடன்காரர்கள் நெருக்கிறார்கள் என்று அனைத்துதரப்பிலும் நெருக்குதலுக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு "உரிய காலத்தில், உரிய அளவில்" கடன் கிடைப்பது என்பது மிகவும் முக்கியம் என்பதை மத்திய, மாநில அரசுகள் இன்னும் முழுமையாக உணர்ந்தபாடில்லை.

ஒருபக்கம், நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து விவசாயிகள் எளிதில் கடன்பெற அரசாங்கமானது நடவடிக்கை வேண்டும்.  மறுபுறம், விவசாயக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தான முழுமையான விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த வேண்டும். ஊடகங்கள், பொதுநல அமைப்புகள் இவ்விரண்டு விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

இல்லையேல்,

"அறுவை சிகிச்சை வெற்றி; ஆனால் நோயாளி இறந்துவிட்டான்" என்ற இன்றைய அவல நிலைதான் என்றும் தொடரும்...

அரசின் கணக்குப்படி பயிர் கருகியதால் வாழவழியின்றி இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 17. ஆனால் உண்மை நிலவரம் 200ஐத் தாண்டுகிறது.

தங்கள் கொள்கைக் கோளாறுகளால் மரணித்த விவசாயிகளின் படத்தை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மாட்டிவைத்தால்தான் விவசாயிகள் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா..?      

                                                 
செந்தில் ஆறுமுகம், மாநில பொதுச்செயலாளர், 87545-80274