Tuesday 6 June 2023

அதிகாரப்பரவலுக்கு எதிரான தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை அரசு ஏற்கக் கூடாது!

அதிகாரப்பரவலுக்கு எதிரான

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை

அரசு ஏற்கக் கூடாது!

 

தன்னாட்சி அறிக்கை


தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம், கடந்த மே 15, 2023 முதல், சென்னை பனகல் மாளிகை அருகில் தொடர் காத்திருப்புப் போராட்டம் (மே 18, 2023 வரைநடத்தியதுஅரசு கருவூலத்திலிருந்து ஊதியம், TNPSC மூலம் பணியிடங்களை நிரப்புதல்மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஒன்றியத்துக்குள் பணியிட மாற்றம் மற்றும் அரசு பணியாளர்களுக்கான சலுகைகள் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டனசமீபத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்களை (பிரிவு 104 மற்றும் 106) உள்ளடக்கிய பணிவிதிகள் அரசாணையை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் முதன்மையாக வைக்கப்பட்டது.

அதாவதுஊராட்சி செயலாளர்கள் கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பவில்லை என்பதையே இந்தப் போராட்டம் உணர்த்துகிறதுஅவர்களின் கோரிக்கைகள், அவர்கள் கிராம ஊராட்சியின் பணியாளர்களாக இல்லாமல் தமிழ்நாடு அரசின் பணியாளர்களாக வேண்டும் என்பதையே வெளிப்படுத்துவதாக உள்ளதுஇது அடிப்படையில் உள்சுயாட்சி அரசுகளின் சுயாட்சித் தன்மையை (இந்திய அரசமைப்புச் சட்டம் 243G) கேள்விக்குள்ளாக்குகிறது.

ஏற்கனவே (மே 12, 2022)தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப் பிரிவுகள் 104 மற்றும் 106 இல் மேற்கொள்ளப்பட்டத் திருத்தங்கள்ஊராட்சி செயலாளர்களை ஊராட்சி தலைவர்களுக்கு இணை அதிகாரம் மிக்க நபர்களாக மாற்றும் என்பதையும் ஊராட்சி செயலாளர்களை ஊராட்சி மன்றமோ அல்லது கிராமசபையோ கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகும் என்பதையும் விளக்கி அந்தச் சட்டத் திருத்தங்களைத் திரும்பப்பெறக் கோரி தன்னாட்சி வலியுறுத்தியுள்ளது. (அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது)

ஊராட்சி அளவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான நிதியைக் கையாளும் PFMS இல் MAKER (இணையவழியில் பணப்பரிமாற்றத்தை துவங்கும்) அதிகாரம் உள்ள ஊராட்சி செயலர்களை இடமாற்றம் செய்வதுதண்டிப்பது போன்ற கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் ஊராட்சி மன்றத்திடம் இருப்பதை உறுதி செய்வதே எளிய மக்கள் பெரும்பாலானோர் பிரதிநிதிகளாக (50 சதவீதத்திற்கும் மேல் பெண் பிரதிநிதிகள்; 18 சதவீதத்துக்கு மேல் பட்டியல் பிரதிநிதிகள்இருக்கும் ஊராட்சி அரசுகளை வலுப்படுத்துவதாகவும் அதிகாரப்பரவலை உறுதி செய்வதாகவும் இருக்கும்.

ஏற்கனவேபல இடங்களில் ஊராட்சித் தலைவர்கள் ஊராட்சி சார்ந்த பல பணிகள் தங்களுக்கு தெரியாமல் ஒன்றிய அளவிலே முடிவு செய்யப்படுவதாகக் கூறி போராட்டங்கள் நடத்திவரும் சூழலில்ஊராட்சி செயலாளர்கள் தமிழ்நாடு அரசின் பணியாளர்களாக அதாவது ஒன்றிய அளவிலான அலுவலர்களின் கட்டுப்பாட்டில் செல்லும் வகையில் முடிவெடுப்பதுஅதிகாரப்பரவலுக்கும் கிராம உள்ளாட்சி அதிகாரங்களுக்கும் எளிய மக்களுக்கும் எதிராக அமையும் என்பதை அரசு மறந்துவிடக்கூடாது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் எந்த முடிவும்ஊராட்சி செயலாளர்கிராம ஊராட்சியின் செயல் அலுவலரான கிராம ஊராட்சி தலைவருக்கும் ஊராட்சி மன்றத்திற்கும் கட்டுப்பட்டவராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை தன்னாட்சி அழுத்தமாக வலியுறுத்துகிறது.


வினோத் குமார் 

பொது செயலாளர்

தன்னாட்சி 

9445700758 

thannatchi.in

No comments:

Post a Comment