Friday 6 May 2022

Press Invite_May 08,2022_உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தும்பஞ்சாயத்து ராஜ் தின சிறப்புக் கருத்தரங்கம்

பத்திரிகையாளர் அழைப்பு

 

உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தும் பஞ்சாயத்து ராஜ் தின சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெறுகிறது.

 

கிராமசபை, 100 நாள் வேலைத்திட்டம், உள்ளாட்சிக்கான நிதிப் பகிர்வில் இருக்கும் மாநில அரசின் அணுகுமுறைகள், ஊராட்சி நிர்வாகத்தில் அலுவலர்களின் தலையீடு மற்றும் திட்டமிட்ட ஊழல், நகர்ப்புற உள்ளாட்சிக்கான சீர்திருத்தங்கள் எனக் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தில் இருக்கும் சவால்களையும் அவற்றை எதிர்கொண்டு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளையும் விவாதிக்கும் கருத்தரங்கம் வரும் 08.05.2022, ஞாயிறு அன்று சென்னை சமூகப்பணி கல்லூரி, எழும்பூரில் நடைபெறுகிறது. தன்னாட்சி அமைப்பு ஒருங்கிணைக்கும் இந்த கருத்தரங்கில் கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், நகர்ப்புற மாமன்ற உறுப்பினர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்கிறார்கள். 

 

மேலும், சிறப்பு அழைப்பாளர்கள்

 

திரு.சமஸ், பத்திரிக்கையாளர், அருஞ்சொல்

திரு.மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,

திரு.சாவித்திரி கண்ணன், பத்திரிக்கையாளர், Aram Online

திரு.R.ஜெயராமன், மாமன்ற உறுப்பினர், பெருநகர சென்னை மாநகராட்சி, CPI(M)

 

ஆகியோர் கருத்துக்களை வழங்க உள்ளார்கள். உள்ளாட்சி தொடர்பான இக்கருத்தரங்கிற்கு தங்கள் ஊடகத்திலிருந்து செய்தியாளரை அனுப்பி, நிகழ்வினை பதிவு செய்து செய்தியாக்க வேண்டுகிறோம். 

 

நாள்:  08-05-2022(ஞாயிறு)


இடம்: டாக் உள்ளரங்கம், (TAG Auditorium) சென்னை சமூகப்பணி கல்லூரி,

 காசா மேஜர் சாலை, எழுப்பூர்


நேரம்:  காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை


தொடர்புக்கு:  9445700758

 

M. ஜாஹிர் ஹுசைன்

துணைத் தலைவர்


தன்னாட்சி

(உள்ளாட்சிஉங்களாட்சி)

69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை

மின்னஞ்சல்: thannatchi@gmail.com

www.thannatchi.in

No comments:

Post a Comment