Thursday 23 February 2023

சட்ட பஞ்சாயத்து இயக்கம் பத்திரிகை செய்தி - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் புகார்

சட்ட பஞ்சாயத்து இயக்கம்


பத்திரிகை செய்தி (24-02-2023)

தொடர்புக்கு : 9942288439

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் புகார் 


தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27, 2023 அன்று நடைபெற உள்ளது. இதற்காக, அரசியல் கட்சிகளின் இடைத்தேர்தல் பிரச்சாரம் என்ற போர்வையில் சட்டவிரோதமான செயல்கள் மற்றும் மோசமான உத்திகளை கையாண்டு வெற்றி பெற முயற்சி செய்கின்றனர். மேற்படி சட்ட விரோதமான செயல்கள், இந்திய ஜனநாயகத்திற்கு அவமானம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்காளர்களுக்கு எதிர்மறையான மற்றும் சட்டவிரோதமான முறையில் செல்வாக்கு செலுத்துவதற்கு ஏதாவது ஒரு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணமும் பரிசுகளும் ஏராளமாக வழங்கப்படுகின்றன, மற்ற வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திப்பதை தவிர்க்க மக்களுக்கு பணம் கொடுத்து தேர்தல் பணிமனைகள் என்ற பெயரில் அனுமதி வாங்காமல் செயல்படும் கொட்டகைகளில் மக்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். இது சம்மந்தமாக, சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உரிய ஆதாரங்களுடன்  தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் அனுப்பியுள்ளோம். எனவே, தேர்தல் ஆணையம் இந்த புகாரை விசாரித்து இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.




                                                                                                 

அருள் முருகானந்தம்,
பொது செயலாளர்,
9942288439            


நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

No comments:

Post a Comment