Thursday 12 October 2023

பத்திரிகை செய்தி - பல போராட்டங்களின் மூலம் கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005இன் தற்போதைய நிலை?

                                     சட்ட பஞ்சாயத்து இயக்கம்

                                         பத்திரிகை செய்தி
                                         தேதி: 13/10/2023
                                         தொடர்புக்கு  :  8668196093  /  9952182452

இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கும், வெளிப்படைத் தன்மையோடு அரசு செயல்படவும் பல போராட்டங்களின் மூலம் கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005இன் தற்போதைய நிலை?


இந்திய மக்களுக்கு பகலில் கிடைத்த முதல் சுதந்திரம் தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005. பல்வேறு பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்களின் போராட்டங்களால் 12-10-2005 அன்று இந்தியா முழுவதும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இச்சட்டம் அமலுக்கு வந்து (12.10.2005) நேற்றுடன் 18 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது; ஆனால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டதற்கான
உயரிய நோக்கங்கள் இன்றும் நிறைவு பெறாமல் பொதுமக்கள் அல்லல்படுகின்றனர்.

எம்எல்ஏ, எம்பி- க்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் கேள்வி கேட்கும் உரிமையை ரூபாய் 10/- கட்டணத்தில், சாமானிய மக்கள் அனைவருக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொடுக்கிறது. ஆனால், சிறப்பு வாய்ந்த இச்சட்டத்தை அரசு அலுவலர்களும், மாநில தகவல் ஆணையர்களும் முடமாக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கும், வெளிப்படைத் தன்மையான அரசு நிர்வாகத்தை ஏற்படுத்தவும் கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை, செயல்படுத்த வேண்டிய தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், தனது கடமையை செய்யாமல் ஊழல் அலுவலர்களை காப்பாற்றும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆணையத்திற்கு வரும் மேல்முறையீட்டு மனுவை உரிய முறையில் விசாரணை செய்வது இல்லை; தகவல் தரமறுக்கும் 99% பொதுத்தகவல் அலுவலருக்கு அபராதம் விதிப்பதே இல்லை; பொதுத்தகவல் அலுவலர்கள், தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் என எந்த அரசு அலுவலரும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தையும் மதிப்பதில்லை; தகவல்கோரும் மற்றும் மேல்முறையீட்டு விசாரணைக்கு வரும் மனுதாரர்களாகிய பொதுமக்களையும் மரியாதையுடன் நடத்துவதில்லை.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் இத்தகைய போக்கை கண்டித்து, சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து பல ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் செய்தும், மாநில ஆணையர்கள் சட்டப்படி செயல்பட முன் வரவில்லை. இது சம்பந்தமாக முதல் அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் புகார் மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கைகள் இதுவரை எடுக்கவில்லை.  

இந்நிலையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்புக்காக இயங்கிவரும் சட்ட பஞ்சாயத்து இயக்கம், தமிழ்நாடு தகவல் ஆணையம் தகவல் பெறும் உரிமை சட்டத்தை முறையாக முழுமையாக செயல்படுத்திட மற்றும் சட்டப்படி செயல்பட, பதினாறு கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை மீண்டும் இன்று தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை கூடுதல் செயலாளர் - பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, மாநிலத் தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் என அனைவரிடமும் வழங்கியுள்ளோம்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்து (12.10.2005) பதினெட்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. எனவே, மக்கள் நலன் சார்ந்து முன்வைக்கும்  சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பதினாறு கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறோம்; கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுக்கும்பட்சத்தில், சட்ட பஞ்சாயத்து இயக்கம் மாபெரும் களப்போராட்டத்தையும் மேற்கொள்ளும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.  

இணைப்பு:
தமிழ்நாடு தகவல் ஆணையம் தகவல் பெறும் உரிமை சட்டத்தை முறையாக முழுமையாக செயல்படுத்திட மற்றும் சட்டப்படி செயல்பட, சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனு


சம்சுகனி
தலைவர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
தொடர்பு:  8668196093  /  9952182452


நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

No comments:

Post a Comment