Friday 17 August 2018

வாஜ்பாய் - இரங்கல் செய்தி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு, தேசத்திற்கு ஓர் பேரிழப்பு. 16 கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைத்தாலும், சிறப்பான ஆட்சியை வாஜ்பாய் தலைமையிலான அரசு தந்தது. பொக்ரான் அணுகுண்டு சோதனை , தங்க நாற்கர சாலை, கார்கில் போர் வெற்றி போன்ற வாஜ்பாயின் சாதனைகள் அனைவரும் அறிந்ததே. இது தவிர, பல சீர்திருத்தங்கள் மற்றும் சாதனைகளுக்கு வாஜ்பாய் சொந்தக்காரர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வேலையில், அவரின் சில சாதனைகளை இயக்கம் கோடிட்டு காட்ட விரும்புகிறது.

தொலைத்தொடர்பு புரட்சி: பல போராட்டங்களை கடந்துபி.எஸ்.என்.எல் ஐ தொலைத்தொடர்புதுறையில் இருந்து பிரித்து புத்துணர்ச்சி ஊட்டினார். ஸ்பெக்ட்ரம் ஏலமுறையை சீர்படுத்தி இந்தியாவில் தொலைத்தொடர்பு புரட்சிக்கு வித்திட்ட பெருமை வாஜ்பாயை சாரும்.

அனைவருக்கும் கல்வி: "அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்க்ஷ அபியான்) என்ற கொள்கையை உருவாக்கினார். இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் கல்வி அடிப்படை உரிமை ஆக்கப்பட்டது. article 21A மூலம் "அனைவருக்கும் கல்வி" என்ற கொள்கைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் கொடுத்த கல்வித்தந்தை வாஜ்பாய்.

ஹோட்டல்களை விற்றார்: கடும் நஷ்டத்தை சந்தித்து வந்த இந்திய அரசின் ஹோட்டல்களை விற்று அரசுக்கு பல கோடிகளை மிச்சப்படுத்தினார். அரசாங்கம் என்ன செய்யவேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை நன்கு அறிந்திருந்தவர் வாஜ்பாய்.

பொருளாதார வளர்ச்சி: கார்கில் போர், அணுகுண்டு சோதனையால் விதிக்கப்பட்ட பொருளாதார தடை, கடுமையான வறட்சி (2002), குஜராத் கலவரம் மற்றும் பூகங்கம் என்று பல பிரச்சனைகள் இருந்தாலும் நாட்டின் வளர்ச்சி முதன்முறையாக 8 சதவீதத்தை நெருங்கியது வாஜ்பாயின் காலத்தில் தான்.

காஷ்மீர்: கடந்த 28 ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்னையை ஓரளவிற்கு சிறப்பாக கையாண்டது வாஜ்பாய் அரசு . முஷாரப் ஆட்சியை கைப்பற்றாமல் நவாஸ் ஷெரீப் தொடர்ந்து இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்சனைக்கு வாஜ்பாய் காலத்தில் தீர்வு ஏற்பட்டு இருக்கலாம்.

72 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், காங்கிரஸ் கட்சியை சேராத ஒருவர் 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்த முதல் பிரதமர் என்ற பெருமையும் வாஜ்பாய் அவர்களையே சேரும். 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் கடந்த 32 ஆண்டுகளில் போடப்பட்ட சாலைகளில் 50% வாஜ்பாயின் 5 ஆண்டு கால ஆட்சியில் போடப்பட்டது என்று காங்கிரஸ் அரசு ஒத்துக்கொண்டது. இன்றைக்கு இருக்கும் தலைவர்கள் தன் சொந்த கட்சியிலேயே கருத்து வேறுபாடு கொண்டுள்ள நிலையில், மாற்று கட்சிகளிலும் பல நண்பர்களை ஏற்படுத்தியக் கொண்ட தலைசிறந்த தலைவர் திரு. வாஜ்பாய் . அவர் ஒரு சகாப்தம். அவரை பிரிந்துவாடும் தேச மக்களுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Member : member.sattapanchayat.org |  Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

No comments:

Post a Comment